Friday, September 14, 2012

நான் விஜய் ரசிகனான கதை-2

இது ஒரு சுயசரிதை ஆகும் .இதன் முன்னைய பகுதியை படிக்க...
நான் விஜய் ரசிகனான கதை.

2000 ம் ஆண்டில் தென்மராட்சி பகுதியில் ஏற்பட்ட நாடு பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்து வட்டுக்கோட்டையில் சில வருடங்கள் இருக்க நேரிட்டது .இதனால் சில காலம் சினிமா பற்றிய நினைவே இல்லாமல் போயி விட்டது .எனினும் இந்த இடப் பெயர்வு என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அடித்தளத்தை இடுவதற்கு வழி  கோலியது .அதுதான் எனது யாழ் இந்து கல்லூரிக்கான பிரவேசம்


.கல்லூரியில் சேர்ந்த போது என்னுடன் ஏற்கவே படித்திருந்த நண்பர்கள் சிலர் எனது வகுப்பிலயே சேர்ந்தமை புது இடத்தில் நம்பிக்கையை கொடுத்தது .எனினும் பெரியதொரு நண்பர் குழாம்  ஏற்பட அதிக காலம் தேவை பட வில்லை .பாடசாலையில் சினிமாவை விட கிரிக்கெட் அதிக முக்கியத்துவம் பெற தொடங்கி  இருந்தது .இரு குழுக்களாக பிரிந்து விளையாடிய முதல் போட்டியில் நான் அடித்த சில பல சிக்ஸர்கள் என்னை அணியில் நிரந்தர இடம் பெற வைத்தது .அத்துடன் ஜெயசூரிய என்ற பெயரையும் தேடி தந்தது .(பாடசாலையில் அதற்கு பின் எந்த போட்டி  யிலாவது ஒரு சிக்சர் கூட அடித்ததாக ஞாபகம் இல்லை ).வகுப்பில் இலங்கை அணிக்கு சமனான ஆதரவாளர்கள் ஆஸி  அணிக்கும்  இருந்தமையால் அதுவே இரண்டு டீம்களை பிரிப்பதற்கு காரணியாக இருந்தது .பாண்டிங்,கைய்டேன் ,கில்கிரிஸ் ஆகியோர் அப்போது ஆசி அணியின் மூவேந்தராக இருந்தனர் .

ஆகவே எனது வகுப்பில் நன்றாக கிரிக்கெட் விளையாடும் இருவருக்கு அப்பட்டங்கள் சூட்டப் பட்டன .ஆனால் ஹய்டேன் கு பொருத்தமாக ஆள் இல்லை எனவே எங்க க்ரூபில் இருந்த கிரிக்கெட் ரசனையே இல்லாத ஒருத்தனை ஹய்டேனை போல இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக ஹய்டேன் ஆக்கி பிளேயர் ஆக்கியது வரலாறு .அப்புறம் நியூ சிலாந்து பிளெமிங் ,சவுத் ஆப்ரிக்கா கிப்ஸ் ஆகியோரும் வகுப்பில் இருக்கத்தான் செய்தனர் அவர்கள் சுய விருப்பின் பேரில் முறையே இலங்கை ,ஆஸி அணியில் சேர்ந்தனர் .ipl slpl எல்லாம் எங்களிடம் இருந்து விளைந்தவையே என்பதை இட்டு பெருமை படுகிறேன் .

2003 உலக கிண்ணம் இதன் உச்ச கட்டமாகும் .ஒவ்வொரு நாளும் பாடசாலையில் முதல் நாள் முடிவடைந்த மேட்ச் தான் விவாதமாய் இருக்கும்


.இலங்கை ஆஸி அரை இறுதி போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தது சங்கா  வும் ,வாசும் களத்தில் நிற்கும் போது மழை  வந்து குழப்பி இருந்தது .ஆனால் வகுப்பில் வெற்றி என்னவோ சிறிலங்காவுக்கு தான் .இந்த மழை மட்டும் வராமல் இருந்திருந்தால் சங்கா ,வாஸ் இருத்த போர்முக்கு (7 விக்கெட் போயிட்டுது 100 ரன்னுக்கு கிட்ட அடிக்கோணும் )ஈஸி  வின். சே அநியாயமா கப்பை மிஸ் பன்னிடமே என்று டாக் கை மாற்றி அவங்களை நிலை குலைய  வச்சாச்சு .அந்த கால பகுதியில் எனது இடது கை பந்து வீச்சு சிறப்பாக எடுபட 2003 வேர்ல்ட் கப் ஹீரோவான வாஸ் இன் நாமம் என்னோடு ஒட்டிக் கொண்டது .காலப் போக்கில் பெயர்கள் மறைந்து விட்டாலும்  இன்று வரை ஒருவனுக்கு பெயர் மாவன்  அதபத்து  தான் .

2002 ம் ஆண்டு மீண்டும் சொந்த இடத்துக்கு வந்திருந்த  போதும் கரெண்ட்  இல்லாமல் இருந்தது .ஏனெனில் ஏனைய இடங்களுக்கு கரெண்டை சில மணித்தியாலங்கள் என்றாலும் காட்டினார்கள் ரேடியோ வில்  யாழ் fm தவிர ஒரு ஒண்டும் வேலை செய்யாது .எனவே பெரிய அண்டனா தயாரித்து அதன் மூலம் சக்தி fm  கேட்டு தகவல்கள் அறிந்து கொண்டேன் .சக்தி fm சுபுகுட்டி பாவோரிட் நிகழ்ச்சியாக இருந்தது . இப்போது பல அலைவரிசைகள் வந்தாலும் நான் என்றுமே சக்தி fm ரசிகன் தான் (முன்னரே சொன்ன லாஜிக் தான் )

படம் வரும் முன்னே ஒரு படத்தின் பாடல் கேட்டது என்றால் திருமலை படம் மூலம் தான் .ஒரு மணித்தியாலத்திலே ஒரு முறை தான் அந்த பட பாட்டு போடுவார்கள் அந்த பாட்டை கேட்பதற்காகவே நாள்  முழுக்க ரேடியோ வேலை செய்யும் .
இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே தினத்தில் ஒரு படம் வெளியாவதை அறிந்த முதல் படமும் திருமலைதான் .அப்போதுதான்  படத்தின் வெற்றி தோல்வி போன்ற விடயங்களை  அறிந்து கொண்டேன் .2003 தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் திருமலை பிதாமகன்,ஆஞ்சநேயா  படங்களை வெற்றி கொண்டது.யாழில் ஒருதியேட்டரில்  படம் ஓடுவதாக அறிந்த போதும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் தைரியம் இருந்திருக்க வில்லை அந்த தீபாவளிக்கு விஜய் ,அஜித்,விக்ரம் ,சூர்யா ஆகிய முன்னணி  நடிகர்கள் அனைவரின் படமும் வெளி வந்திருந்தது .அதிலே விஜய்க்கு கிடைத்த வெற்றி ஆனது முதன் முதலில் விஜய்க்கு ரசிகன் என்ற நிலைக்கு என்னை இட்டு சென்றது .

எனவே நான்  முதல் முதலாக விஜய் ரசிகனாக என்னைசமூகத்துக்கு  காட்டி கொண்டேன் ..பாடசாலை யிலும் சினிமா விவாதம் சூடு பிடிக்க தொடங்கியது .பெரியளவில் விஜய்க்கு எதிர்ப்பு இருக்க வில்லை .ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பலைகள் மாசுக்கு முன் தூசாக இருந்தது .கொலரில்  இருந்து சிகரெட் எடுத்து புகைக்கும் ஸ்டைல் இளைஞர் களிடத்தில் வரவேற்பு பெற்றது .அப்போது இனைய வசதிகள் இல்லாத நிலையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் தான் யாழ் மக்களை அலங்கரித்து இருந்தன .இந்திய சேனல்கள்  ஆங்காங்கே இருந்தாலும் சக்தி  டிவி அநேக வீடுகளை அலங்கரித்தது .அனைத்து தொலைக்காட்சி ,ரேடியோ அலைவரிசைகளும் விஜய் புகழ் பாட தொடங்கின .

விஜயை ஒரு சாதுவான நாயகனாக பார்த்த எனக்கு மீசை இல்லாமல் புது கெட்  அப்பில்
பாட்சாவில் ரஜினி ஸ்டைல் ஐ பார்க்கும் போது இருந்த அதே பிரமிப்பு இதிலே விஜயை பார்க்கும் போது  எழுந்திருந்தது.

தொடரும்.......

Post Comment

Wednesday, September 12, 2012

மசாலா கபே-சுவாரசிய தகவல்கள் -3

jab tak hai jaaan
கடந்த தீபாவளிக்கு வேலாயுதம் ஏழாம் அறிவு ரா ஒன் ஆகியவை வெளியாகியமை உங்களுக்கு நினைவிருக்கும் .அதேபோல் இந்த தீபாவளிக்கும் ஷாருக்கானின் படம் ஒன்று விஜயின் படத்தோடு  வெளிவருகிறது .முக்கோண காதல் கதையான படத்தில் கத்ரீனா  கைப் ,அனுஷ்கா ஷர்மா ஆகியோர் ஷாருக் ஜோடியாக நடிக்கின்றனர் .legend இயக்குனர் யாஷ் சோப்ரா 8 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தை இயக்குகிறார் .படத்தின் இசை ஒஸ்கார் நாயகன் A .R .ரஹ்மான் .கடந்த தீபாவளிக்கு வெளியான ரா ஒன் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இந்த படத்துக்கு கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது 


.
இந்த தீபாவளிக்கு அண்ணனுக்கு  பதில் தம்பி களம் இறங்குகிறார் .ஆம் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியனும் தீபாவளிக்கு வெளியாகிறது .ஒரே நாளில் இரு பெரிய படங்கள் வெளிவருவதை விநியோகஸ்தர்கள் விரும்புவதில்லை எனினும் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதை தவிர்க்க முடியாது .மாமா ரெடியா ? என்று பில்லா-2 வுடன் மோதியவர்கள் இம்முறை விஜயின் படத்துடன் மோதுகிறார்கள் .அடுத்தவனின் பயம் நமது பலம் என்பதை சகுனி வெளியீடில் பயன்படுத்தயது போன்று இங்கு பயன்படுத்த முடியாது  (தீபாவளிக்கு விஜய்  படம் தயாராகாத சந்தர்ப்பம் தவிர்ந்து) .பிக்கொஸ் ரஜினி படமே போட்டிக்கு வந்தாலும் பின்வாங்காத அனுபவம் கொண்டது விஜய் தரப்பு (அண்மைக்காலமாக நடுநிலையோடு எழுதுவதாய்  நினைக்கிறேன் ).



###############################

ருக்மணி தேவி 
இலங்கையில் ஒரே ஒரு சினிமா நடிகைக்கு சிலை வைத்து கெளரவம் வழங்கப்பட்டுள்ளது : இந்த சிலையை நிறுவி ..... திறந்து வைத்தவர் ....அப்போதைய பிரதமர் R பிரேமதாச ! சிலை நீர்கொழும்பு - கட்டான சந்திப்பில் நிறுவப்பட்டது [ அந்த இடத்தில் தான் அந்த நடிகை ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டார் ];சிங்கள சினிமாவின் ஆரம்ப காலத்தில் சொந்தக் குரலில் பாடி நடித்து .... லட்சக்கணக்கான ரசிகர் உள்ளங்களை கொள்ளை கொண்ட அந்த நடிகை ..... ருக்மணி தேவி ! இவர் ஒரு .......... தமிழ் பெண் !!!#by -sathyan S
#####################################################
யார் இவர்கள் ?

ஐஸ்வர்யா ராய் சகோதரனுடன் 
###########################################################
யுவன் 

தனது 16 வயதிலேயே அரவிந்தன் படம் மூலமாக இசை அமைக்க வந்தவர் .ஆரம்பம் சிறப்பாக அமையா விட்டாலும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் மக்களால் அறியப்பட்டார் .பின் தனக்கென ஒரு பாதையை அமைத்து பல வெற்றிகரமான பட அல்பங்களை வழங்கி இன்று தமிழ் சினி
மாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.25 வது வயதில் 7Gரெயின் போ காலணி படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் FILMFARE விருது வென்ற அவர் இளம் வயதில் அந்த விருதை வென்ற சாதனையை இன்னமும் தக்க வைத்து கொண்டு இருக்கிறார். தன்னுடைய பெயரில் சேர்ந்திருக்கும் ராஜா எனும் சொல்லுக்கு பெருமை சேர்த்த யுவன் நூறாவது படத்தை (பிரியாணி )விரைவில் தொடவுள்ளார் 








யுவன் இதுவரை அஜித்துடன் 5 படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் தீனா ,பில்லா ,ஏகன் ,மங்காத்தா ,பில்லா-2 . இவற்றில் தீனா ,பில்லா ,மங்காத்தா அஜித்தின் டாப் படங்கள். விஷ்ணு வர்த்தனின் பெயரிடப்படாத அடுத்த படத்துக்கும் இவர்தான் இசை .. புதிய கீதை படத்தில் பின்னணி இசை கார்த்திக் ராஜா வழங்க பாடல்களை யுவன் கம்போஸ் பண்ணியிருந்தார் விஜயுடன் இதுவரை ஒரு படத்தில் கூட முழுமையாக இணைந்து பணியாற்ற வில்லை


.
விஜய் - பரத்வாஜ்; அஜித் - ஹாரிஸ்; சூர்யா - வித்யாசாகர்; விக்ரம் - யுவன் (இறுதியாக வெளிவந்த ராஜபாட்டைக்கு முன்புவரை) ஒன்றாக வேலை செய்யல; இந்த நான்கு இசையமைப்பாளரும், நடிகர்களும் சமகாலங்களில் நீண்ட நாட்கள் உச்சத்தில் இருந்தவர்கள்!!-

#########################################


உலக நாயகன் கமலஹாசன் போட்டுள்ள வேஷங்கள்  ஒரே பார்வையில் 

twitter
தமிழ் ஹீரோக்களிலேயே ஆட்டோ ஓட்டிக்கிட்டே காலேஜ் இல படித்த ஒரே தலைவன் நம்ம தளபதி #வேட்டைக்காரன் பாறைகள்..!
 மாநகர பேருந்து வர்றப்ப 'கூட்டமா இருக்கு வேற பஸ்ல போலாம்னா அவன் பேமிலி மேன்' 'கூட்டமே இல்ல வேற பஸ்ல போலாம்னா அவன் பேச்சுலர்'
 ஹீரோவைச் சரியாகக் குறிபார்த்துச் சுடும் வில்லன் கிடைக்காமல் தமிழ்சினிமா பலகாலமாய் அல்லாடுகிறது !
பல்ப் - எடிசன் ரேடியே - மார்க்கோனி போன் - க்ராஹாம் பெல் க்ராவிடி - நியூட்டன் எக்ஸாம் - ???? அவன் தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!

 twitter இல் என்னை தொடர 
https://twitter.com/RKobiraj


Post Comment

Thursday, September 6, 2012

நீதானே என் பொன் வசந்தம் -ஒரு அலசல்

நீதானே  என் பொன்  வசந்தம்

தமிழ் சினிமாவில் 2012 ம் ஆண்டு 100 வது படமாக முகமூடி வெளிவந்து இருக்கிறது .ஏற்கனவே வெளிவந்திருக்க வேண்டிய பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் தாமதித்து கொண்டிருக்கின்றன .அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களை உள்ளடக்கிய வருடத்தின் நான்காம் பாதிதான் கோலிவுட் இல் வசந்த காலமாக இருக்க போகிறது .துப்பாக்கி ,விஸ்வரூபம் ,மாற்றான் ,தாண்டவம் ,கோச்சடையான்  என பட்டியல் நீள்கிறது .இவை இயக்குனரின் செல்வாக்கு இருந்தாலும்  பெரும்பாலும் ஹீரோ பேஸ் பில்ம்ஸ்  .ஆனால் டைரக்டர் பேஸ் பிலிம் ஆன  கெளதமின் படம் ஒன்று உச்ச எதிர்பார்ப்பில் இருக்கிறது .அண்மையில் வெளியிடப்பட்ட பாடல்கள் ,trailor ஆவலை உச்சப்படுத்தி இருக்கிறது .அந்த படத்தை பற்றிய ஒரு அலசல்தான் இந்த பதிவு



கௌதம் 
  கௌதம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்.மின்சார கனவு படத்தில் ராஜீவ் மேனனுக்கு  உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இளமையான காதல் கதையான படம் மிகப்பெரு வெற்றியை பெற்றது.தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார் கெளதம் .தன்னுடைய எல்லா படத்திலும் காதலை அழகாக இழையோடுவது இவரது தனி சிறப்பு .முக்கியமாக தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஆக்சன்  படங்களில் காதல் பொருட்படுத்தப் படுவதில்லை .பாடல் காட்சிகளுக்கு மட்டுமே ஹீரோயின் அனேகமாக பயன்படுத்தப் படுவார் .ஆனால் கௌதமின் ஆக்சன் படத்தில் ஹீரோயினுக்கும் நல்ல ஸ்கோப் இருக்கும் .அழகான காதலும் இருக்கும் .காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு அந்த ரகம் .ஆக்சன் படத்திலேயே அழகான காதல் என்றால் காதல் படத்தில் சொல்லவும் வேண்டுமா மின்னலே ,விண்ணைத்தாண்டி வருவாயா தமிழில் தவிர்க்க முடியாத காதல் படங்கள் .மணிரத்னத்தின் சாயல் தென்பட்டாலும் கெளதம் படம் என்றால் எப்போதும் மார்கெட் தான் .


ஏனைய  மொழிகளிலும் தனது படங்களை விஸ்தரித்த  கௌதமுக்கு தெலுங்கில் வரவேற்பு இருந்தாலும்(காக்க காக்க ரீமேக்,தெலுங்கு vtv  ) பாலிவுட் இன்னும் அவரை கண்டு கொள்ளவில்லை .மின்னலே ,விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டி ரீமேக் க்கும் தோல்வி .ஹிந்தியில்  vtv தோல்வி அடைந்த  பின்  பாலிவுட் ரசிகர்களுக்கு பின் நல்ல சினிமாவி ரசிக்க தெரியவில்லை என்று கொந்தளித்து இருந்தார் .(காக்க காக்க வை force  எனும் பெயரில் வேறு ஒரு இயக்குனர் ரீமேக் செய்திருந்தார் அதுவும் தோல்வி அடைந்து தனி கதை ).கௌதமின் வாழ்க்கையில் ஒரு கறுப்பு  புள்ளி நடுநிசி நாய்கள் என்பதை மறக்க முடியாது 


கௌதமுக்கு நல்ல கொம்பி நேசன் சூர்யா.இரண்டு படங்களும் ஹிட் .உலகநாயகனுடனும் இணைந்து விட்டார் .இயக்குனருக்கு இலகுவில்  அடிபணியாத சிம்புவையும் முழுமையாக கட்டுப்படுத்தி சிம்புவுக்கு ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் .அஜித்துடன் ஏனோ தெரிய வில்லை முறுக்கி கொண்டிருக்கிறார். அண்மையில் விஜயுடன் இணையவிருந்த படமும் தடைப்பட்டு விட்டது .

மின்னலே ,vtv  வரிசையில் அடுத்த காதல் காவியம் தான்  நீதானே என் பொன் வசந்தம் .ஆரம்பத்தில் தனது படங்களுக்கு ஹாரிசை பயன்படுத்தியவர் அவருடனான உறவு விரிசலின் பின்A .R .ரஹ்மானை VTV யில் பயன்படுத்தி இருந்தார் .ரஹ்மானுடனும் எதோ பிரச்சினை எழவே  NEP இல் இசை ஞானி யுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து இருக்கிறார் .

இளையராஜா 

கௌதமின் படங்களில்  பாடல்களே கதை பேசும் .பாடல்களுக்கு விசுவல் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான் .அந்த வகையில் இசையுலகின் ராஜாதி ராஜாவான இளையராஜா அண்மைக்காலமாக இசையில் பெரிதாக சோபிக்கவில்லை என்ற விமர்சனங்களை சந்தித்து வந்தார் .கௌதமின் படத்துக்கு இசை என்பதால் ராஜா என்ன செய்ய போகிறார் என ஓட்டுமொத்த  திரை உலகமும் பாடல்களை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள் .வெகு விமரிசையாக  பாடல்களும் வெளியிட்டாச்சு 



எனக்கு இசை என்றாலே என்னவென்று தெரியாது .இசையின் நுணுக்கங்களோ, புலமையோ ,இசையை பற்றி அடிப்படை அறிவோ எதுவும் தெரியாது .ஆனால் இசையை ரசிக்க தெரியும்.அது நல்லாய் இருக்குஇது சரியில்ல  இதை குறைத்து இருக்கலாம்அப்பிடின்னு வாய்க்குள் நுழையாத இங்கிலீஷ் வோர்ட்ஸ் பயன்படுத்தி விமர்சனம் பண்ண தெரியாது .அடிப்படையில் இசையில் நானும் யாருக்கும் ரசிகன் கிடையாது .எனக்கு பிடித்த பாடல்களை விரும்பி கேட்பேன் .அந்த வகையில் இந்த NEP பாடல்களும் பிடித்திருக்கு .இந்த 8 பாடல்களிலும்  இளையராஜா பாடிய வானம் மெல்ல ரொம்ப பிடிச்சிருக்கு ,சாய்ந்து சாய்ந்து ,காற்றை கொஞ்சம் ,என்னோடு வா வா என்ற வரிசையில் இருக்கு மை பாவரைட்ஸ் .



எனினும் விஜய் அஜித் படங்கள் வெளியாகும் போது  கிளம்பும் எதிர்மறை விமர்சனங்கள் போல ராஜாவை பிடிக்காத பலரால் இணையத் தளங்களில் போலி பிரச்சாரம் செய்யப் பட்டது .நல்ல புத்தகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை தானே சிறகு முளைத்து பறக்கும் என்று ஒரு எழுத்தாளர்  சொன்னது போல இந்த பாடல்களும்  பறக்க தொடங்கி விட்டன .கெளதம் படங்களிலே விசுவல்ஸ் தான் பாடல்களை இன்னும் எழுப்பும் .VTV நல்ல உதாரணம் பாடல் வெளிவந்த புதிதில் பாடல்கள் பலருக்கும் பிடிக்க வில்லை ரஹ்மான் சொதப்பி விட்டாரே என இசையே மொழியாய் வாழும் நண்பர்கள் கூற கேட்டுள்ளேன் .எனினும் படம் வெளிவந்த பின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தது வரலாறு .என்னை பொறுத்த வரை  கெளதம் படத்துக்கு நாங்கள் எதிர்பார்த்த இசையை வழங்கியிருக்கிறார் இசைஞானி .

ஜீவா 

இளைய தலைமுறை முன்னணி நாயகர்களில் ஒருவர் .விஜய்,அஜித் போட்டியில் சூர்யா எப்படி இருக்கிறாரோ அதே போல் சிம்பு ,தனுஷ் போட்டியில் ஜீவாவை  குறிப்பிடலாம் .எந்த பாத்திரத்துக்கும் பொருந்த கூடியவர் என சக நண்பர் ஜெயம் ரவியாலேயே புகழப்பட்ட ஜீவா ராம் ,கற்றது தமிழ் ,ஈ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் .எனினும் ஜீவாவுக்கு  பிரேக் கொடுத்த படம் என்றால் அது கோ தான் .அதன் பின் அவரின் மார்கெட் ஏறி விட்டது . கோ தந்த மகத்தான வெற்றி நண்பன் பிளாக் பஸ்ட்டர் என்பன இடையில் வெளி வந்த ரௌத்திரம், வந்தான் வென்றான் தோல்விகளை மறைத்து  விட்டது  .எனினும் முகமூடி ரிசல்ட் உம் பாதகமாக அமைய கூடிய வாய்ப்பு இருக்கிறது .எது எவ்வாறாயினும் nep கெளதம் படம் என்பதால் இயக்குனரின் எண்ணத்தை  அப்படியே பிரதிபலிப்பார் ஜீவா .

சமந்தா  



NEP  trailor வெளியாகி 45 மணி நேரத்துள் அரை மில்லியன் வியுஸ் தாண்டி முன்னைய பில்லா-2 இன் சாதனையை முறியடித்து இருக்கிறது .நான் இதை பதிவு செய்யும்  போது 1.3மில்லியன்  தாண்டி விட்டது இதற்கு காரணம் கெளதம் ,ராஜா,ஜீவா ஆகியோரை தாண்டி இப்போது இளைஞர்களை ஆக்கிரமித்திருக்கும் கனவு கன்னி சமந்தா தான் .நடிகர்களை போல் நடிகைகள்  தமிழ் சினிமாவில் நீடித்து இருக்க முடியாது .அந்த வகையில் இப்போது சமந்தா புராணம் தான் பாடுகிறார்கள் இளைஞர்கள் .கௌதமின் ஆஸ்தான கதாநாயகியான சமந்தா (vtv நந்தினி ,தெலுங்கு ஜெஸ்சி ,ஹிந்தியிலும் ஜெஸ்சி  )இதிலும் கொள்ளை அடிப்பார் என்பது திண்ணம் .

சந்தானம் 
இவர்களை விட அண்மைக்காலமாக தமிழ் சினிமாவின் டிராவிட் ஆக மாறியுள்ள சந்தானம் இருப்பது பலம் .ஆனால்  கெளதம் விளையாடுவதால் டிராவிட் இன் பொறுப்பு பெருமளவில் குறைக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன் .

நீதானே  என் பொன்  வசந்தம் மகத்தான வெற்றி பெற படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் 

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...