Showing posts with label cinema. Show all posts
Showing posts with label cinema. Show all posts

Thursday, September 6, 2012

நீதானே என் பொன் வசந்தம் -ஒரு அலசல்

நீதானே  என் பொன்  வசந்தம்

தமிழ் சினிமாவில் 2012 ம் ஆண்டு 100 வது படமாக முகமூடி வெளிவந்து இருக்கிறது .ஏற்கனவே வெளிவந்திருக்க வேண்டிய பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் தாமதித்து கொண்டிருக்கின்றன .அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களை உள்ளடக்கிய வருடத்தின் நான்காம் பாதிதான் கோலிவுட் இல் வசந்த காலமாக இருக்க போகிறது .துப்பாக்கி ,விஸ்வரூபம் ,மாற்றான் ,தாண்டவம் ,கோச்சடையான்  என பட்டியல் நீள்கிறது .இவை இயக்குனரின் செல்வாக்கு இருந்தாலும்  பெரும்பாலும் ஹீரோ பேஸ் பில்ம்ஸ்  .ஆனால் டைரக்டர் பேஸ் பிலிம் ஆன  கெளதமின் படம் ஒன்று உச்ச எதிர்பார்ப்பில் இருக்கிறது .அண்மையில் வெளியிடப்பட்ட பாடல்கள் ,trailor ஆவலை உச்சப்படுத்தி இருக்கிறது .அந்த படத்தை பற்றிய ஒரு அலசல்தான் இந்த பதிவு



கௌதம் 
  கௌதம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்.மின்சார கனவு படத்தில் ராஜீவ் மேனனுக்கு  உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இளமையான காதல் கதையான படம் மிகப்பெரு வெற்றியை பெற்றது.தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார் கெளதம் .தன்னுடைய எல்லா படத்திலும் காதலை அழகாக இழையோடுவது இவரது தனி சிறப்பு .முக்கியமாக தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஆக்சன்  படங்களில் காதல் பொருட்படுத்தப் படுவதில்லை .பாடல் காட்சிகளுக்கு மட்டுமே ஹீரோயின் அனேகமாக பயன்படுத்தப் படுவார் .ஆனால் கௌதமின் ஆக்சன் படத்தில் ஹீரோயினுக்கும் நல்ல ஸ்கோப் இருக்கும் .அழகான காதலும் இருக்கும் .காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு அந்த ரகம் .ஆக்சன் படத்திலேயே அழகான காதல் என்றால் காதல் படத்தில் சொல்லவும் வேண்டுமா மின்னலே ,விண்ணைத்தாண்டி வருவாயா தமிழில் தவிர்க்க முடியாத காதல் படங்கள் .மணிரத்னத்தின் சாயல் தென்பட்டாலும் கெளதம் படம் என்றால் எப்போதும் மார்கெட் தான் .


ஏனைய  மொழிகளிலும் தனது படங்களை விஸ்தரித்த  கௌதமுக்கு தெலுங்கில் வரவேற்பு இருந்தாலும்(காக்க காக்க ரீமேக்,தெலுங்கு vtv  ) பாலிவுட் இன்னும் அவரை கண்டு கொள்ளவில்லை .மின்னலே ,விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டி ரீமேக் க்கும் தோல்வி .ஹிந்தியில்  vtv தோல்வி அடைந்த  பின்  பாலிவுட் ரசிகர்களுக்கு பின் நல்ல சினிமாவி ரசிக்க தெரியவில்லை என்று கொந்தளித்து இருந்தார் .(காக்க காக்க வை force  எனும் பெயரில் வேறு ஒரு இயக்குனர் ரீமேக் செய்திருந்தார் அதுவும் தோல்வி அடைந்து தனி கதை ).கௌதமின் வாழ்க்கையில் ஒரு கறுப்பு  புள்ளி நடுநிசி நாய்கள் என்பதை மறக்க முடியாது 


கௌதமுக்கு நல்ல கொம்பி நேசன் சூர்யா.இரண்டு படங்களும் ஹிட் .உலகநாயகனுடனும் இணைந்து விட்டார் .இயக்குனருக்கு இலகுவில்  அடிபணியாத சிம்புவையும் முழுமையாக கட்டுப்படுத்தி சிம்புவுக்கு ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் .அஜித்துடன் ஏனோ தெரிய வில்லை முறுக்கி கொண்டிருக்கிறார். அண்மையில் விஜயுடன் இணையவிருந்த படமும் தடைப்பட்டு விட்டது .

மின்னலே ,vtv  வரிசையில் அடுத்த காதல் காவியம் தான்  நீதானே என் பொன் வசந்தம் .ஆரம்பத்தில் தனது படங்களுக்கு ஹாரிசை பயன்படுத்தியவர் அவருடனான உறவு விரிசலின் பின்A .R .ரஹ்மானை VTV யில் பயன்படுத்தி இருந்தார் .ரஹ்மானுடனும் எதோ பிரச்சினை எழவே  NEP இல் இசை ஞானி யுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து இருக்கிறார் .

இளையராஜா 

கௌதமின் படங்களில்  பாடல்களே கதை பேசும் .பாடல்களுக்கு விசுவல் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான் .அந்த வகையில் இசையுலகின் ராஜாதி ராஜாவான இளையராஜா அண்மைக்காலமாக இசையில் பெரிதாக சோபிக்கவில்லை என்ற விமர்சனங்களை சந்தித்து வந்தார் .கௌதமின் படத்துக்கு இசை என்பதால் ராஜா என்ன செய்ய போகிறார் என ஓட்டுமொத்த  திரை உலகமும் பாடல்களை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள் .வெகு விமரிசையாக  பாடல்களும் வெளியிட்டாச்சு 



எனக்கு இசை என்றாலே என்னவென்று தெரியாது .இசையின் நுணுக்கங்களோ, புலமையோ ,இசையை பற்றி அடிப்படை அறிவோ எதுவும் தெரியாது .ஆனால் இசையை ரசிக்க தெரியும்.அது நல்லாய் இருக்குஇது சரியில்ல  இதை குறைத்து இருக்கலாம்அப்பிடின்னு வாய்க்குள் நுழையாத இங்கிலீஷ் வோர்ட்ஸ் பயன்படுத்தி விமர்சனம் பண்ண தெரியாது .அடிப்படையில் இசையில் நானும் யாருக்கும் ரசிகன் கிடையாது .எனக்கு பிடித்த பாடல்களை விரும்பி கேட்பேன் .அந்த வகையில் இந்த NEP பாடல்களும் பிடித்திருக்கு .இந்த 8 பாடல்களிலும்  இளையராஜா பாடிய வானம் மெல்ல ரொம்ப பிடிச்சிருக்கு ,சாய்ந்து சாய்ந்து ,காற்றை கொஞ்சம் ,என்னோடு வா வா என்ற வரிசையில் இருக்கு மை பாவரைட்ஸ் .



எனினும் விஜய் அஜித் படங்கள் வெளியாகும் போது  கிளம்பும் எதிர்மறை விமர்சனங்கள் போல ராஜாவை பிடிக்காத பலரால் இணையத் தளங்களில் போலி பிரச்சாரம் செய்யப் பட்டது .நல்ல புத்தகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை தானே சிறகு முளைத்து பறக்கும் என்று ஒரு எழுத்தாளர்  சொன்னது போல இந்த பாடல்களும்  பறக்க தொடங்கி விட்டன .கெளதம் படங்களிலே விசுவல்ஸ் தான் பாடல்களை இன்னும் எழுப்பும் .VTV நல்ல உதாரணம் பாடல் வெளிவந்த புதிதில் பாடல்கள் பலருக்கும் பிடிக்க வில்லை ரஹ்மான் சொதப்பி விட்டாரே என இசையே மொழியாய் வாழும் நண்பர்கள் கூற கேட்டுள்ளேன் .எனினும் படம் வெளிவந்த பின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தது வரலாறு .என்னை பொறுத்த வரை  கெளதம் படத்துக்கு நாங்கள் எதிர்பார்த்த இசையை வழங்கியிருக்கிறார் இசைஞானி .

ஜீவா 

இளைய தலைமுறை முன்னணி நாயகர்களில் ஒருவர் .விஜய்,அஜித் போட்டியில் சூர்யா எப்படி இருக்கிறாரோ அதே போல் சிம்பு ,தனுஷ் போட்டியில் ஜீவாவை  குறிப்பிடலாம் .எந்த பாத்திரத்துக்கும் பொருந்த கூடியவர் என சக நண்பர் ஜெயம் ரவியாலேயே புகழப்பட்ட ஜீவா ராம் ,கற்றது தமிழ் ,ஈ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் .எனினும் ஜீவாவுக்கு  பிரேக் கொடுத்த படம் என்றால் அது கோ தான் .அதன் பின் அவரின் மார்கெட் ஏறி விட்டது . கோ தந்த மகத்தான வெற்றி நண்பன் பிளாக் பஸ்ட்டர் என்பன இடையில் வெளி வந்த ரௌத்திரம், வந்தான் வென்றான் தோல்விகளை மறைத்து  விட்டது  .எனினும் முகமூடி ரிசல்ட் உம் பாதகமாக அமைய கூடிய வாய்ப்பு இருக்கிறது .எது எவ்வாறாயினும் nep கெளதம் படம் என்பதால் இயக்குனரின் எண்ணத்தை  அப்படியே பிரதிபலிப்பார் ஜீவா .

சமந்தா  



NEP  trailor வெளியாகி 45 மணி நேரத்துள் அரை மில்லியன் வியுஸ் தாண்டி முன்னைய பில்லா-2 இன் சாதனையை முறியடித்து இருக்கிறது .நான் இதை பதிவு செய்யும்  போது 1.3மில்லியன்  தாண்டி விட்டது இதற்கு காரணம் கெளதம் ,ராஜா,ஜீவா ஆகியோரை தாண்டி இப்போது இளைஞர்களை ஆக்கிரமித்திருக்கும் கனவு கன்னி சமந்தா தான் .நடிகர்களை போல் நடிகைகள்  தமிழ் சினிமாவில் நீடித்து இருக்க முடியாது .அந்த வகையில் இப்போது சமந்தா புராணம் தான் பாடுகிறார்கள் இளைஞர்கள் .கௌதமின் ஆஸ்தான கதாநாயகியான சமந்தா (vtv நந்தினி ,தெலுங்கு ஜெஸ்சி ,ஹிந்தியிலும் ஜெஸ்சி  )இதிலும் கொள்ளை அடிப்பார் என்பது திண்ணம் .

சந்தானம் 
இவர்களை விட அண்மைக்காலமாக தமிழ் சினிமாவின் டிராவிட் ஆக மாறியுள்ள சந்தானம் இருப்பது பலம் .ஆனால்  கெளதம் விளையாடுவதால் டிராவிட் இன் பொறுப்பு பெருமளவில் குறைக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன் .

நீதானே  என் பொன்  வசந்தம் மகத்தான வெற்றி பெற படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் 

Post Comment

Monday, September 3, 2012

தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார்? -3

தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார் என்பது ஒரு தொடர் பதிவு ஆகும்.இதன் முன்னைய பதிவுகளை படிக்க ....
தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார் ?.
தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார் -2?.

நினைத்தேன் வந்தாய்  

இயக்குனர் செல்வபாரதி இதுவரை எட்டு படங்களை இயக்கி உள்ளார் .அவற்றில் மூன்று படங்கள் விஜய்க்கு .அந்த மூன்றுமே ரீமேக் படங்கள் தான் .இரண்டு படங்களை ஏற்கனவே பார்த்து விட்டோம் .1998 ஏப்ரல் வெளியீடாக நினைத்தேன் வந்தாய்     அல்லு அரவிந்த் தயாரிப்பில் ரம்பா ,தேவயானி ,மணிவண்ணன் மற்றும் பலர் நடிப்பில் தேவாவின் இசையில் வெளிவந்தது .பாடல்கள் அனைத்தும் பெரியளவில் ஹிட் ஆகின .படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது .
இது 1996 இல் வெளிவந்த பெல்லி சந்தடி (pelli sandadi) தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும் .K. Raghavendra Rao இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தீப்தி ,ரவளி நட்டிப்பில் கீரவாணி இசை அமைத்து இருந்தார் .

காதலுக்கு மரியாதை 
விஜயின் ஆல் டைம் பாவோரைட் படங்களில் ஒன்று .விஜய் நடித்த காதல் படம் என்பதை விட தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் படத்துக்கு உதாரணமாக எந்த காலத்திலும் சொல்லக்  கூடிய காவியம் .சங்கிலி முருகன் தயாரிப்பில் பாசில் இந்த படத்தை இயக்கியிருந்தார் .ஷாலினி ,சிவகுமார்,மணிவண்ணன்,ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு இசைஞானி இசை அமைத்து இருந்தார் .பாடல்கள் அனைத்தும் மெஹா ஹிட் ஆகின .

பூவே உனக்காக பிளாக் பஸ்ட்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட விஜய் இந்த பிளாக் பஸ்ட்டர் படத்துக்கு பின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்த முடிந்தது .அத்துடன் அந்த வருடத்துக்கான தமிழ் நாட்டின் சிறந்த நடிகருக்கான பிலிம் fare விருதையும் வென்றார் .இந்த படத்திதை தயாரித்த சங்கிலி முருகனுக்காக அண்மையில் தனது 50 வது படத்தை தயாரிக்க சந்தர்ப்பம் வழங்கியிருந்தார் விஜய் .அது கருவாடானது வேறு கதை .இந்த படத்தின் வெற்றிக்கு பின் இதே கூட்டணி மீண்டும் 2000 ஆம் ஆண்டு கண்ணுக்குள் நிலவு படத்தில் இணைந்தனர் .விஜயின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டாலும் கொமேர்சிய்ல் தோல்வி அடைந்தது .
காதலுக்கு மரியாதை படத்தின் ஒரிஜினல்பாசில் இயக்கிய படம்தான் .அதே ஆண்டு மலையாளத்தில் அணிதிபிரவு எனும் பெயரில் வெளிவந்தது  குஞ்சகோ போபன் கேரோவாக நடித்து இருந்தார் .இங்கேயும் ஹீரோயின்  ஷாலினி தான் . ஔஸெப்பசந் இசை அமைத்த இந்த படம் மலையாள சினி வரலாற்றில் மிகப் பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக திகழ்கிறது .

இளைய தளபதி விஜய் நடித்த் முதல் ரீமேக் படம் காதலுக்கு மரியாதை .அவரின் காரியரில் ஒரு முக்கியமான படமாக இருந்து அவருக்கு ஒரு அந்தஸ்தை தேடி தந்தது .

சரி விஜய் நடித்த ரீமேக் படங்கள் அனைத்தையும் பார்த்து விட்டோம் .மொத்தம் 13 படங்கள் .அவற்றில் 10 வெற்றி .காதலுக்கு மரியாதை ,கில்லி ,போக்கிரி,வேலாயுதம் ,நண்பன் பிளாக் பஸ்ட்டர் படங்கள் 
பத்ரி .பிரண்ட்ஸ் ,காவலன் ,காதலுக்கு மரியாதை ஆகிய படங்களின்  ஒரிஜினல் அந்தந்த இயக்குனரின் படங்களே .

ரீமேக் சூப்பர் ஸ்டார் 

சரி தலைப்புக்கு வருவோம் தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் விஜய் என்ற முடிவுக்கு வர வேண்டுமெனில் அவர் நடித்த ரீமேக் அல்லாத படங்களை பற்றியும் சிறிது ஆராய வேண்டும் .பூவே உனக்காக விஜயின் முதல் பிளாக் பஸ்ட்டர் விஜயை தமிழ் சினிமாவுக்கு இனங்காட்டிய படம் அது ரீமேக் இல்லை .துள்ளாத மனமும் துள்ளும் ,குஷி திருமலை திருப்பாச்சி சிவகாசி ஆகிய பிளாக்  பஸ்ட்டர் களும் ரீமேக் இல்லை .ஆகவே ரீமேக் படங்கள் மட்டுமே விஜய்க்கு கை கொடுத்தன என்று சொல்ல முடியாது.விஜயின் 53 படங்களில் 13 ரீமேக் அவற்றில் 10 ஹிட் .ஆக மற்றைய 40 படங்களில் வெற்றி சதவீதம் குறைவுதான் .விஜயின் காரியரில் ரீமேக் படங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன .அவர் தமிழ் சினிமாவில் முதன்மையான நடிகர்களில் ஒருவராக தொடர்வதற்கு இவை பெரிதும் துணை புரிந்துள்ளன .நான் முதலே சொன்னபடி ரீமேக் படங்களின் வெற்றி வாய்ப்பு 50 வீதம் ஏற்கனவே உறுதிப் படுத்தப்பட்ட போதும் படத்தை வெற்றி பெற செய்வதற்கு 50 வீதம் உழைக்க வேண்டும் அந்த உழைப்பை விஜய் செவ்வனே செய்து .இருக்கிறார் அதுதான் அவர் அதிகளவில் ரீமேக் படங்களை தெரிவு செய்ய உந்து சக்தியாக  இருக்கிறது .

அண்மையில் ..
விஜயின் கடைசி 10 படங்களில் 4 ரீமேக் படங்கள் .அவற்றில் 3 பிளாக் பஸ்ட்டர் ஆகியுள்ளன .ஏனைய 6 படங்களில் சிறப்பு  தோற்றத்தில் நடித்த பந்தயத்தை விட்டால் குருவி ஆவெரேஜ் (அதிலும் சில காட்சிகள் ராஜ்மௌலி யின் சத்ரபதி படத்தில் உருவப்பட்டவை ) வேட்டைக்காரன் தவிர  ஏனைய  3 படங்களும்  படுதோல்வி. கடைசி  3 படங்களும்  ரீமேக் மூன்றும் வெற்றி .

இந்த புள்ளிவிபரமே போதும் விஜய் ரீமேக் படங்களை தெரிவு செய்வது ஏன் என்பதை விளக்க ..

சரி விஜயின் அத்தியாயம் இதோடு முடிகிறது .தனிய இவரை பற்றி ஆராய்ந்து விட்டு இவருக்கே பட்டத்தை கொடுப்பது அழகல்ல 
அடுத்த அத்தியாயத்தில் .ரீமேக் படங்களில் அதிகளவில் நடித்த இன்னொரு நடிகருடன் ...................

Post Comment

Wednesday, August 22, 2012

மசாலா கபே -சுவாரசிய தகவல்கள்

தமிழ் சினிமா உலகில் முதன்முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் MGR.ரிக்சாகாரன் படத்துக்காக 1971 பெற்றார்.அதேபோல் 3 முறை தேசியவிருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் .மூன்றாம்பிறை,நாயகன்,இந்தியன் ஆகிய படங்களுக்காக பெற்று கொண்டார் ,நடிகர் திலகம் என போற்றப்படும் சிவாஜிகணேசன் தேவர்மகன் படத்துக்காக SPECIAL JURY AWARDபெற்று கொண்டார்.
#####################################################
தலீவா யூ  ஆர்  கிரேட்  
ஒரு நடிகன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் ? – விகடன் பேட்டியின் போது கவுண்டமணியிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.

இதற்கு கவுண்டமணி அளித்த பதில் என்ன தெரியுமா - "தன்னை பற்றின நிஜ ரூபத்தை பொத்தி பொத்தி மூடனும். பெட்டிகடையில பீடியை கூட கட்டு கட்டாஉள்ளேதான் வச்சுருப்பான்.அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளிய வச்சு கொட்டி பரத்தி வியாபாரம் பண்ணி பாருங்க.....பீடி விக்காது.

நானும் அப்படித்தான். விழாக்கள், பேட்டிகள்-ன்னு எதுக்கும் ஒத்துக்க மாட்டேன்.கலை நிகழ்ச்சி அப்படிங்கிற பேர்ல சிங்கப்பூர் துபாய் போறதில்ல. ரசிகர் மன்றங்களை எல்லாம்கூட கலைச்சுட்டேன். என் பிறந்தநாள் என்னைக்குன்னே மறந்து போச்சு. முக்கியமா டிவி.க்குபேட்டி கொடுக்கிறதில்லை. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு. அப்பத்தான் கிக் !!!!

###########################################################
அனிருத் 

கொலைவெறி பாடல் மூலம் தனுசை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றவர் அனிருத் . உறவினரான இவர் அண்மையில் அன்ரியா வுடனான முத்த காட்சி மூலம் பேசப்பட்டார் .தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தின் போது அனிருத் 


##############################################################
சந்தானம் 
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் தற்போது NO 1 ஆக இருப்பவர் சந்தானம் .இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றி படங்களில் நடித்தார்.தற்போது இவருக்கு 32 வயது .ராக்கம்மா எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார் .சந்தானம் தனது குழந்தையுடன் காணப்படும் அரிய புகைப்படம் இது 
###############################################################
SS Rajamouli-
வெற்றிப்பட இயக்குனர் . Vikramarkudu(original of சிறுத்தை ),மகாதீரா ,நான் ஈ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை உருவாக்கியவர் இவரின் முதல் படம் student no 1 தமிழில் அதே பேரில் ரீமேக் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.wiki யில் இவ
ரை பற்றி ''He is one of the most successful directors of Telugu Film Industry with 100% success rate''. இவ்வாறு குறிப்பிட பட்டுள்ளது இவர் தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்த வரப் பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும் ..


########################################################
விஜய் அன்டனி 
சுக்ரன் ,வேட்டைக்காரன் ,வேலாயுதம் என பட்டைய கிளப்பிய இசை அமைப்பாளர் விஜய் அன்டனி முதன் முதலாய் நடித்திருக்கும் 'நான் 'படம் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது .அவர் இசை அமைக்கும் 25 வது படம் இது என்பது குறிப்பிட தக்கது வாழ்த்துக்கள் விஜய் சார் # இந்த வருஷம் விஜய் வருஷம் போல
############################################################
RACE -
அண்மையில்தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது .அருமையான படத்தை இவ்வளவு நாளாய் மிஸ் பண்ணி விட்டேன் .10 நிமிடத்துக்கு ஒரு முறை ஊகிக்க முடியாத திருப்பங்களுடன் விறு விறுப்பான திரைக்கதை .நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி # விஷ்ணுவர்தனின் அடுத்த படம் இதன் ரீமேக் தான் என்று ஒரு கதை அடிபடுகிறது .அது உண்மையானால் அஜித் ஆர்யா கூட்டணியில் கண்டிப்பாக இந்த படம் பிய்த்து உதறும்
#############################################################
உலகின் தற்போதைய முதல்தர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான குமார் சங்க காராவின் குடும்பம் 

Post Comment

Saturday, July 14, 2012

" பில்லா -2 ஏன் பார்க்க வேண்டும்

படம் பார்த்த அனுபவம் 
படத்திற்கு விமர்சனம் எழுத விரும்பவில்லை .ஆனால் இதுவரை திரையரங்கில் இப்படி ஒரு அனுபவத்தை பெற வில்லை .முதன் முறையாக சுவர் ஓரம் இருக்கும் படிகட்டில் இருந்து படம் பார்த்தேன் .திரை அரங்குக்கு உள்ளே இதுவரை எந்த படத்துக்கும் இப்படி சனத்தை பார்த்ததில்லை .தியேட்டரின் கொள்ளளவை விட அளவுக்கு அதிகமாக ஆட்களை அனுமதித்ததால் சுவர் ஓரம் நிரம்பி வழிந்ததுடன் பலர் நின்ற நிலையிலும் படம் பார்த்தார்கள் .வியர்வையினால் குளித்து விட்டோம் பல்கனி -300உம் odc 250 உம் வாங்கும் இவர்கள் ஓரளவுக்கு டிக்கெட் களை அளவாக கொடுத்து இருக்கலாம்.(சிவகாசி,வேட்டை காரன் படங்களுக்கு இதே திரை அரங்கில் முதல் காட்சி டிக்கட் கிடைக்காமல் திரும்பி இருக்கிறேன் ).#வழமையாக நடப்பதுதான் ஆனால் இது தியேட்டர் நிர்வாகிகளின் ஆசை இல்லை பசி-





நேற்று படம் பார்த்து விட்டு நான் facebook இல் பகிர்ந்தவை 
billa-2 படத்தில மொத்தம் 89 கொலை ஹீரோ மட்டும் 78 பண்ணிடுறார் # hats off Senthil Kumar sir உங்களால மட்டும் எப்புடி முடியுது




தல படத்தில உங்க நடிப்பும் நடையும் வழக்கம் போல சூப்பர் இந்த முறை உங்க வசனங்களும் சூப்பர் தல .''என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா''இந்த வசனத்தை நீங்க மூணாவது வாட்டி சொல்லும் போது (climax)எனக்கு ஏனோ வேட்டைக்காரன் கொலைமாக்ஸ் இல விஜய் பேசுற வசனங்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது தல


தமிழ் சினிமா பிரபலங்களை பொறுத்த வரை சினிமா தவிர்த்து தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்த முதல் மனிதர் அஜித் .எந்தவித பின்புலமும் இன்றி அவரின் வாழ்க்கை அவரே செதுக்கியதுதான் அப்படி நிறைய பேர் வந்து இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு பிடித்தது அவரின் கொள்கைகள் ,போராட்ட குணம் , அசாத்திய தைரியம் ,பல ஆப்றேசன்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு பல இன்னல்களுக்கிடையில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளமை இன்னும் பல காரணங்கள் ஆனால் அதற்காக பெரிய சினிமா பின்புலத்தை கொண்டவர்கள் எல்லோரும் பிரபலமாக முடியும் என்றால்சினிமாவில் பிரபலமானவர்கள் தொகை முடிவிலிக்கு சென்று இருக்கும் . தந்தை இயக்குனர் என்றால் ஒரு அனுகூலம்தான் ஆனால் அவர் ஒரு ஊக்கியாக மட்டுமே செயற்பட முடியும் ஊக்கி தாக்கத்தில் பங்கு கொள்ளது என chemistryil படித்த ஞாபகம்எனவே திறமை இல்லாமல் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது .விஜய் ,சூர்யா ,கார்த்தி ,ஜீவா போன்றவர்கள் அஜித் அளவுக்கு கஷ்டங்களை எதிர்நோக்க வில்லை ஆயினும் தனியே தகப்பனின் செல்வாக்கால் நிலைத்து இருக்க முடியாது என்பதைநீங்கள் ஒத்து (நேற்றும் திருமலை படம் பார்த்தேன் )கொண்டுதான் ஆக வேண்டும் .# கடுப்பு+ வெறுப்பு ஏற்றும் நண்பர்களுக்காக
நண்பனின் வரிகள் 
Iroshan Puviraj தகப்பனின் செல்வாக்கு என்பது 10% தான்..
மிச்ச 40% அதிஷ்டம் 50% உழைப்பு இருக்கணும்...
தகப்பனின் செல்வாக்குன்னா ஜித்தன் ரமேஷ்,பாரதிராஜாவின் மகன் மனோஜ்,பாக்யரஜ் மகன் சாந்தனு,ஏன் இப்ப கடுமையா உழைக்கும் அருண்விஜய் இன்னும் தகுந்த இடத்தை பெறவில்லை........
சினிமாவில் அதிஷ்டமும் உழைப்பும் இருக்கணும் இருந்தா தான் ஜெயிக்கலாம்...
அந்த வகைல விஜய்,சூரியா,கார்த்தி போன்றோர் உச்சத்தில் இருக்க காரணம் உழைப்பும் அதிஷ்டமுமே!!!!!!!!!



படத்தில் பிடித்த விடயங்களில் முக்கியமானது வசனங்கள் .அதிலே என்னை மிகவும் கவர்ந்த வசனங்கள் இவை .
மத்தவங்களோட பலவீனம் நம்ம பலம்.. மத்தவங்களோட பயம் நம்ம பலம்..
பார்ட்டியை முன்னே பின்னே பார்த்ததில்லையே நீ, எப்படி கண்டு பிடிப்பே?
நல்லவங்களை கண்டுபுடிக்கிறது  தான் கஷ்டம்
லேட்டா போனா பொறுப்பில்லைன்னு சொல்லிடுவாங்க,முன்னாலயே போனா வேற வேலை இல்லைபோலன்னு எளப்பமா நினைப்பாங்க.. அதனால சொன்ன டைம்க்கு ஷார்ப்பாபோகனும்.. அப்போதான் நம்ம மேல ஒரு நம்பிக்கை வரும்..
உக்காந்து வேலை வாங்குறவனுக்கும்  உயிரை கொடுத்து வேலை செய்யிறவனுக்கும் 
வித்தியாசம் இருக்கு !

 பிச்சைக்காரனா இருந்தாலும் சரி,கூலிக்காரனா இருந்தாலும் சரி , Business Man'ah
இருந்தாலும் சரி உழைப்பு தான் அவனை உயர்த்தும், உழைக்கனும்


facebook இல் என்னை கவர்ந்த ஒரு status 
ஈழத்தமிழருக்காக நடிகர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஒரு கூட்டத்தில "சினிமா Industryய தயவு செய்து சினிமா Industryயா இருக்க விடுங்க" என்று அஜித் கூறிய நாளிலிருந்து நான் அஜித்தை ஒரு தமிழின துரோகியாக தான் பார்க்கிறேன்....!!!! இப்போது பில்லா படத்தில் அவர் பேசி இருக்கும் ஒரு பஞ்ச் "போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்... போராடிக்கிட்டு இருக்கிறவன் தோத்திட்டா அவன் தீவிரவாதி... ஜெயிச்சிட்டா அவன் போராளி".... ஒவ்வொருவருக்கும் இது பல கோணத்தில் புரிந்தாலும் எனக்கு இது ஒரே கோணத்தில் தான் புரிகிறது...! சிறு வயதில் அடிக்கடி நம் காதுக்கு எட்டிய ஒன்று மட்டும் தான் ஜாபகம் வருகிறது " உதவி செய்யாட்டியும் பரவால... உவத்திரம் செய்யாம இருங்கடா



படத்தை பற்றி அதிகம் இணையத்தில் உலவும் விமர்சனம் இதுதான் யார் எழுதினாரோ தெரியவில்லை ஆனால் உண்மையை பிரதிபலித்து இருக்கிறார் 
படத்தின் கதை? ஒரே வரியில் சொன்னால்... டேவிட் பில்லா நடக்கிறார்... திரும்பிப் பார்க்கிறார்... எதிரி என்றல்ல... எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது!

Post Comment

Friday, June 29, 2012

எந்திரனின் வசூலை முறியடித்த சகுனி

ஒரு படத்துக்கான ஒபெநிங் என்பது சில விசயங்களில் தங்கியுள்ளது .முக்கியமாக படத்துக்கான எதிர்பார்ப்பு .எதிர்பார்ப்பு எனும் போது முதலில் கவனிப்பது யார் படத்தை இயக்குவது .ஆ அந்த இயக்குனரா அப்படி என்றால் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதுவார்கள் .படத்தின் மைய கதை படம் வருவதற்கு முன்னரே ஓரளவு சொல்லி விடுவார்கள் அதுவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் .படத்தின் trailor இன்னொரு முக்கிய காரணி .-2-2.45 மணி நேர படத்தின் சாரம்சத்தை 2 நிமிடத்தில் காட்டுவார்கள் .நிச்சயமாக படத்தின் maximam நல்ல சீன் களைத் தொகுப்பதால் பெரும்பாலும் அனைத்து படங்களின் trailor உம நன்றாக இருப்பது போல தோன்றும் .அதுவும் ரசிகர்களை கவரும் திட்டம் தான் .இவற்றை விட இசை,பாடல்கள்,காமெடி ,ஹீரோயின் என்பனவும் ஒபெநிங் ஐ தீர்மானிக்கின்றன .இவற்றை எல்லாம் தாண்டிய முக்கிய காரணி யார் ஹீரோ .படத்தை பற்றி எந்தவித அலட்டலும் இல்லாமல் இது இவரின் படமா கட்டாயம் first ஷோ போக வேண்டும் என்று முடிவு எடுப்பார்கள் ரசிகர்கள் .சில வருடங்களுக்கு முன்னர் இது மட்டுமே ஒபெநிங் ஐ தீர்மானிக்கின்ற காரணியாக இருந்தது .ஆனால் இப்போது ரசிகர்கள் புத்தி கொஞ்சம் அதிகரித்ததால் இதற்கான மவுசு கொஞ்சம் குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் .எனினும் ஒரு படத்தின் ஒபெநிங் ஐ வைத்து அந்த பட ஹீரோவைகிங் ஒப் ஒபெநிங் என்று அழைக்கும் கலாச்சாரம் இன்னும் மாறவில்லை .
ரஜினிரசிகர்கள் கிங் ஒப் ஒபெநிங் ரஜினி என்பார்கள் கமல் ,விஜய்,அஜித் ரசிகர்களும் இவ்வாறே .கொஞ்ச காலத்துக்கு முன்னாடிதான் இணைந்தாரு சூர்யா .இப்ப இவரையும் ஒரு கூட்டம் கிங் ஒப் ஒபெநிங் என்று அழைக்குது .உண்மையில் யார் தான் கிங் ஒப் ஒபெநிங் இதை பற்றி ஆராய வரவில்லை ஒபெநிங் பற்றி சகல விடயங்களையும் அலசி அண்ணன் ஜீவதர்சன் ஒரு பதிவு எழுதி உள்ளார் விரும்பினால் அதை படியுங்கள் .
ஓப்பினிங்(Opening) .


சகுனி சாதனை 
வசூல் நிலைவரங்களை வெளிவிடும் ஊடகங்களில் உள்ளத்தில் நம்பகத் தன்மை வாய்ந்தது behindwoods .5 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு வாரமும் சென்னை boxoffice collection விபரத்தை வெளியிட்டு வருகிறார்கள் .அவர்களின் புள்ளிவிபரப் படி தான் அண்மையில் தமிழ் சினி உலகில் புது புரட்சி நடந்துள்ளது .எந்திரனின் ஒபெநிங் வசூலை சகுனி முறியடித்துள்ளது .


''
சிவாஜி வரும்வரை சந்திரமுகியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வரும்வரை சிவாஜியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியும் எந்திரனின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் நெருங்கவில்லை, ''


சில மாதங்களுக்கு முன்னர் ஜீவா அண்ணாஅலசி எழுதிய பதிவில் இடம்பெற்ற வரிகள் இவை .எனவே தமிழ் சினிமாவின் மிகப் பெரும் தலை களால் இரண்டு வருடங்களாக முறியடிக்கப் படாமல் இருந்த சாதனையை நம்ம new south indian box office king முறியடித்து இருக்கிறார் என்கின்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் .


எந்திரன் ,சகுனி 3 நாள் வசூலை பார்த்தால் 246 காட்சிகள் குறைவாக ஓடி இருக்கு .அதைவிட எந்திரன் 99% அரங்கு நிரம்பிய காட்சிகள் .ஆனால் சகுநியோ 90% அரங்கு நிரம்பிய காட்சி .எப்படி சாத்தியம் என்று பார்த்தால் 2 வருட வித்தியாசம் என்பது மட்டும் தான் காரணம் .டிக்கெட் விலை அதிகரிப்பு .இங்கு என்னுடைய வியப்பு என்னவெனில் சகுனி வரும்வரை மற்றைய படங்களால் எவ்வாறு எவ்வாறு முறியடிக்காமல் போனது .சரி அண்மைய காலங்களில் வெளிவந்த பெரிய படங்களை பார்ப்போம் .

சகுனி

No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 648
Average Theatre Occupancy over this weekend : 90 %
Collection over this weekend in Chennai: Rs. 22,719,252

Verdict: Good Opening

okok
ஏப்ரல் 13-15
No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 522 
Average Theatre Occupancy over this weekend : 90 %
Collection over this weekend in Chennai: Rs. 1,73,32,944 


3
No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 549 
Average Theatre Occupancy over this weekend : 90 % 

Collection over this weekend in Chennai: Rs. 13,137,309 -

நண்பன் 
No. Days Completed: 4
No. Shows in Chennai over this weekend576
Average Theatre Occupancy over this weekend: 95%
Collection over this weekend in Chennai: Rs. 13,768,806

ராஜபாட்டை -0.96c -3 நாட்கள்


ஒஸ்தி 
No. Days Completed4
No. Shows in Chennai over this weekend612
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 1,33,22,304
Verdict: Good Opening


வேலாயுதம் 
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend492
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,701,270
Total collections in Chennai: Rs. 1.95 Crore

ஏழாம் அறிவு -
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend594
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 13,217,553
Total collections in Chennai: Rs. 2.20 Crore2.20c  -5 நாட்கள்


மங்காத்தா
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend774
Average Theatre Occupancy over this weekend: 95%
Collection over this weekend in Chennai: Rs. 1,79,35,278



இவற்றில் மங்காத்தா அதிகப்படியாக 774 காட்சிகள்  காண்பிக்கப்பட்டு 95% அரங்கு நிறைந்த காட்சிகளோடு 1.8 கோடியை 5 நாட்களில் பெற சகுனியோ 126 காட்சிகள் குறைவாக காண்பிக்கப் பட்டும் 3 நாட்களில் 2.2 கோடியை அள்ளிஇருக்கிறது .இரு படங்களும் அண்ணளவாக ஒரு வருட இடைவெளியில் வந்தவை என்பதை தவிர இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேறு காரணம் தெரிய வில்லை .
இங்கு பொதுவாக தெரிவது என்னவெனில் அதிக ஒபெநிங் பெற வேண்டும் என்றால் அதிக தியேட்டர் கிடைக்க வேண்டும் அதற்கு சோலோ வாக படம் ரிலீஸ் பண்ண வேண்டும் .அது தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கையிலேயே தங்கி இருக்கிறது 
ஏழாம் அறிவு ,வேலாயுதம் ஒரே நேரத்தில் வெளிவந்தமையால் காட்சிகள் 600 ஐ தாண்ட முடியவில்லை எனவே எந்திரன் வசூல் உடைப்பது கடினமாகி விட்டது .நண்பனும் வேட்டை படத்துடன் வந்ததால் 576 காட்சிகளே திரையிட முடிந்ததால் இயல வில்லை .ஆனால் மங்காத்தா ,ஒஸ்தி ,3,okok  தனித்து சோலோ வாக வெளிவந்தவை .இவற்றில் மங்காத்தா தவிர ஏனையவை சகுனியை விட குறைவான அளவில் வெளியிடப் பட்டவை .
ஆக மங்காத்தா படத்துக்கு சந்தர்ப்பம் இருந்தும் தவறியுள்ளது .ஆனால் மங்காத்தா வுடன் ஒப்பிடும் போது சகுனி அதிக ஒபெநிங் ஐ பெற்றமைக்கான காரணம் டிக்கெட் விலை அதிகரிப்பாக மட்டுமே இருக்க முடியும் .

3,okok  ஆகியவை 15 நாள் இடைவெளியில் வந்தவை .27 காட்சிகள் குறைவு என்ற போதும் 42 லட்சங்களை okok  அதிகம் பெற்றமைக்கான காரணத்தை (occupancy same  90%) யாரவது சினிமா வல்லுனர்களிடம் எதிர்பார்க்கிறேன் .ஏனெனில் 15 நாட்களில் டிக்கெட் கட்டணம் இவ்வளவு வித்தியாசப்படுமா ?
ஆனால் okok  பெற்ற வசூலுடன் ஒப்பிடும் பொது சகுனியின் வசூல் ஏற்றுக் கொள்ளக் கூடியதே .
இந்த முடிவுகளில் இருந்து நாம் உய்த்தறிவது என்னவெனில்அடுத்து வெளிவர இருக்கும் பெரிய படமான பில்லா-2 சோலோ ஆக ரிலீஸ் ஆவதால் கண்டிப்பாக 650 ஐ விட அதிக காட்சிகள் காண்பிக்கப்படும் .occupancy உம 90% ஐ விட குறைய வாய்ப்பில்லை என்பதால் கண்டிப்பாக சகுனியை விட கூடுதல் ஒபெநிங் வசூல் வர வேண்டும் .

நம்பகத்தன்மையில் சந்தேகம் 
behindwoods  பல வருடங்களாக அனைத்து சினிமா ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ள பட்ட விபரங்களை தந்து வந்தது .ஆனால் அண்மைக் காலத்தில் சந்தேகங்கள் வலுப் பெற்று வருகின்றன .சென்னையை பொறுத்த வரை எந்திரன் அதிகப் படியாக 17 கோடிகள் வசூலித்தது .தசாவதாரம்,ஏழாம் அறிவு என்பன 9 கோடி தாண்டிய படங்கள் .மங்காத்தா ,வேலாயுதம் 8 கோடி தாண்டியவை . இப்படி இருக்கும் போது அண்மையில் வெளிவந்த ஓகே ஓகே 16 கோடிகளை சென்னையில் வசூல் செய்தது என்பது யாராலுமே ஏற்றுக் கொள்ள முடியாத கணக்கு .படம் வெற்றிதான் அதில் மறுப்பு இல்லை .ஆனால் 16 கோடி என்றால் படம் சென்னையில் மட்டும் விண்ணை தாண்டி ஓடியதா ஏனெனில் சென்னையின் வசூலை வைத்து முழு வசூலையும் கணிக்க முடியாது எனினும் ஓரளவுக்கு படத்தின் வசூல் நிலைவரங்களை ஊகிக்கலாம் .சென்னையில் எந்திரனின்வசூலை நெருங்கிய okok மொத்த வசூல் சாதாரண வெற்றி படத்தின்வசூலே .
மேலே உள்ள விபரங்களில் ஏழாம்அறிவு ,வேலாயுதம் படங்களின் விபரங்களில் மட்டும் வித்தியாசமாக Total collections in Chennai  என்று புதிய கணக்கு காட்டி .இருக்கிறார்கள் அதுவும் விளங்க வில்லை .


எல்லாவற்றுக்கும் மேலாக  வெளியான சகுனி வசூலில் குளறுபடி நடந்து இருக்கிறது .வசூல் இருபது லட்சத்தால் கூடி இருக்கிறது .
.

Rajinikanth starrer Endhiran has made it to the all time highest grossers list of India. Endhiran has taken the second spot in the list with a massive Rs 200 crores at the box office. Aamir Khan’s 3 Idiots leads the list with Rs 202 crores.
அண்மையில் வெளியான செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாக 350 கோடி கடந்த வசூல் என அறிவிக்கப் பட்டு அனைவராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட எந்திரனின் வசூல் 200 கோடி என புதிதாக கதை விடுகிறது .3 idiots 202 கோடி வசூலுடன் இந்தியாவின் முதல் இடத்தில் உள்ளதாக அந்த செய்தி கூறுகிறது .எது உண்மை எது பொய் என அறிய முடியாமல் ரசிகர்களை குழப்புகிறார்கள் .

எது எப்படியோ இதை விட நடுநிலையாக boxoffice விபரங்களை தர ஒருவரும் இல்லாத நிலையில் தொடர்ந்து இவர்களின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதை விட வேறு வழியில்லை

முக்கிய குறிப்பு
மேலே தரப்பட்டவை அனைத்தும்சென்னைவசூல் மட்டுமேஒபெநிங் வசூலுக்கும் படத்தின் வெற்றிக்கோ மொத்த வசூலுக்கோ எந்தவித  சம்பந்தமும்இல்லை .

Post Comment

Thursday, June 28, 2012

விஜய் ஸ்பெஷல்

ஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங்! ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்ஸ்...

* முதல் நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த 'செந்தூரப்பாண்டி', விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை மிகவும் பெருந்தன்மையோடு இப்பவும் ஒப்புக்கொள்வார் விஜய்!








* பின்னணிப் பாடகராக 'தேவா' படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் 'சச்சின்' வரை 23 பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் ஏனோ  பாடுவதைத் தவிர்த்து வந்தவர், தற்போது 'துப்பாக்கி' படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.




* விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்குவரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். இந்த காஸ்ட்யூம் டிசைன் சினிமா வரைக்கும் போகிற வாய்ப்பு இருக்கிறது!

* திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வார் விஜய். அன்றைக்கு மாணவர்களோடு உட்கார்ந்து கலகலப்பாக உரையாடும் விஜய்யை நீங்கள் இதற்கு முன் கண்டிருக்க மாட்டீர்கள்!

* ஜூன் 22 பிறந்த நாளன்று எங்கே இருந்தாலும் ஓடி வந்து தாயின் அருகில் இருக்கவே விரும்புவார். வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பிவந்து அன்று முழுவதும் அம்மா பக்கமே இருக்கிற அம்மா பிள்ளை விஜய்!

* எவ்வளவு வேலை, ஷூட்டிங் முடிந்து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்குவார். அதிசயிக்கும்படியான பெருவாரியான டிவிடி கலெக்ஷன் வைத்திருக்கிற பெருமை அவருக்கு உண்டு!



* நான்-வெஜ் உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. அதுவும் அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை!

* விஜய்க்கு நகைகளின் மீது அவ்வளவாக ஆசை கிடையாது.

* ஹிந்தியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந்திப் படங்களுக்கு முதல் நாள்... முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்!



* ஜாலி மூடில் இருந்தால் மனைவி சங்கீதாவை 'ஹாய் கீஸ்' எனக் கூப்பிடுவார். எப்பவாவது கொஞ்சம் கோபமாக இருந்தால் 'வாங்க போங்க'தான்!



* வருஷத்துக்கு ஒரு தடவையாவது மனைவி, குழந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு. சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்சநாள் இருந்த பிறகு, பயணம் அதற்கடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடையும். எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பையன் சஞ்சய்தான்! 

* தி.நகரில் சூர்யாவின் அடுத்த வீட்டுக்காரராக இருக்கிற டைரக்டர் பாரதிராஜா, கொட்டிவாக்கத்தில் விஜய்க்குப் பக்கத்துவீட்டுக்காரராக இருக்கிறார்!

* விளையாடுவதற்கு மிகவும் பிரியப்படுவார். கொட்டிவாக்கம் வீட்டில் இப்போது விளையாடுவது டென்னிஸ். இப்ப இவருக்கு விடாப்பிடியாக ஜோடி கட்டுவது அவரது மகன் சஞ்சய்தான்!

* சஞ்சய்யின் ஒவ்வொரு வயது கூடும்போதும் அவனது நடவடிக்கைகளை வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். 20 வயது ஆனதும் அவனது பிறந்த நாளுக்கு விஜய் அளிக்கப்போகிற பெரிய பரிசு அதுதான்!


* அப்பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல, பேசிக் காட்டியது 'அண்ணாமலை' பட வசனம்தான். அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார்!

* நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித்தானாம்!

* நெருக்கமான கல்லூரி நண்பர்களை அழைப்பது 'மச்சி'. மற்றவர்களை விஜய் அழைப்பது 'என்னங்கண்ணா!'

* கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய். நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தோடு வந்தால், அழகிய தோசை வார்த்துக் கொடுப்பது இந்த அழகிய தமிழ் மகன்தான். அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்குமாம்!

* எப்போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்!

* வீட்டின் வராந்தாவில் காத்திருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு. 


* அம்மா ஷோபா சந்திரசேகர் இசை கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்துவார். அம்மாவின் கச்சேரிகளுக்கு முதல் ஆளாக ஆஜர் ஆவார் எப்போதும்!

* மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் அப்பாவின் நடிப்பில் ஆர்வமாக இருந்தாலும் படிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். நாலு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் விளையாடுகிறாள் சாஷா!

* எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிற மொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய். தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார்! சமீபத்தில் பிரபுதேவாவின் விருப்பத்திற்காக 'ரவுடி ரத்தோர்' படத்தில் அக்ஷய் கன்னாவுடன் ஒரு குத்தாட்டம் போட்டார்.



* விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. உலக அழகி ப்ரியங்கா சோப்ரா அறிமுகமானது விஜய்யுடன் ஜோடி சேர்ந்த  'தமிழன்' படத்தில் தான். 

* ஜாலியாக ரிக்கார்டிங்கில் உட்கார ஆசைப்படுவார் விஜய். எப்பவும் அவரது சமீபத்திய பாடல்களின் முணுமுணுப்போடுதான் காணப்படுவார் விஜய்!

* வெளிநாடு படப்பிடிப்பு செல்லும் போதும் சரி, வரும் போதும் சரி முதலில் அம்மாவிற்கு ATTENDANCE கொடுத்து விட்டு தான் தனது கொட்டிவாக்கம் வீட்டிற்கு செல்கிறார்.



* ஒவ்வொரு படம் முடியும் போதும் அதில் பங்குபெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு கொடுத்து மகிழ்வது விஜய் வழக்கம்.


தகவல் -சினிமா விகடன் 

Post Comment

Tuesday, June 12, 2012

பில்லா 2 -ஒரு அலசல்

பில்லா 2 இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்களில் ஒன்று .இரு மாதங்களாக இழுத்தடித்து எதிர்வரும் 22 ம் திகதி வெளிவர உள்ளது (அதுவும் இன்னும் நிச்சயம் இல்லை).பில்லா 2 இன் வெளியீட்டை எதிர்பார்த்து இரு வாரம் கழித்து தமது படத்தை வெளியிட காத்திருந்த சகுனி படக்குழுவினர் கடைசியில் எதிர்வரும் 22 படம் வெளிவரும் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர் .அப்போ தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து ரெடி .சரி இரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதை விநியோகஸ்தர்கள் விரும்பாவிடினும் சூழ்நிலைகள் இடம் கொடுத்தால் மட்டுமே போட்டியை தவிர்க்க முடியும் .இந்நிலையில் வெட்டியாய் இருக்கும் நான் அடுத்து என்ன பதிவு எழுதுவது என திணறிக் கொண்டிருந்த போது ஏன் இந்த இரண்டு படங்களையும் அலசி ஆராய விழைந்ததன் விளைவுதான் இது .

பில்லா -2


அஜித்குமாரின் 51 வது படம் பில்லா 2.அவரின் 50 இல் சிறந்த ஐந்தில் ஒன்று  பில்லா என்ற ஒரு காரணமே காணும் இந்த படத்தின் உச்ச கட்ட எதிர்பார்ப்புக்கு .அதைவிட 50 இல் சிறந்த இன்னொன்று தான் அவரின் 50 மங்காத்தா .கடந்த வருடத்தின் சிறந்த படமாக திகழ்கிறது (?).ஆகவே அதைவிட எதிர்பார்ப்பு எகிறுகிறது .பில்லாவின் முன் அத்தியாயமாய் உருவாகும் பில்லா 2 ஒரு சாதாரணமான இளைஞன் எவ்வாறு சர்வதேச டான் ஆக மாறினான் என்பதே மைய கதை .பில்லாவை இயக்கிய விஷ்ணுவர்த்தனே முதலில்இயக்குவதாய் இருந்து பின்னர் இயக்குனர் சக்ரி டோலேடி இடம் கைமாறியுள்ளது .இவர் தமிழில் ஏற்கனவே உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கியிருந்தாலும் அதிலே கமலின் பங்கு அதிகம் இருந்ததால் அவரின் திறமையை முழுமையாக அறிய முடியாது .தெலுங்கில் ஒரு படத்தை இயக்கியிருந்தாலும் தமிழில் தன்னை நிரூபிக்க இதுதான் சந்தர்ப்பம் .இவரில் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்கள் கூட ஒரு நிமிட டீசெர் பார்த்த பின் இவரில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் .டீசெர் பலத்த வரவேற்பை பெற்றமை அனைவரும் அறிந்ததே .

அஜித் மங்காத்தா வில் வயதான தோற்றத்தில் நடித்து இருந்தாலும் இது பில்லாவை விட இளமையாக இருக்க வேண்டும் என்பதால் கடுமையாக மினக்கெட்டு ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார் .எனினும் பில்லாவை விட இளமையான டேவிட் பில்லா வாக தன்னை காண்பிப்பது கஷ்டம் தான் .எனினும் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை .


பார்வதி ஓம குட்டன் ,ப்ருணா ,வித்யுத் ஜம்பால் ஆகியோர் அறிமுகமாகின்றனர் .ஜம்பால் துப்பாக்கி படத்தின் வில்லன் என்பது குறிப்பிடத் தக்கது .அத்துடன் பழைய டீம் பிரபு ,ரகுமான் .யுவன் அஜித் கூட்டணியில் 6 வது படம் .பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டன .இந்த கூட்டணியின் பாடல்கள் என்றும் சோடை போனது இல்லை .பில்லா ,மங்காத்தா வுடன் ஒப்பிடும் போது பாடல்கள் சுமார் ரகம்தான் எனக்கு .பில்லா ,மங்காத்தா தீம் மியூசிக் இல் அடித்து தூள் கிளப்பியிருப்பார் யுவன் .பில்லாவின் சாயல் என்பதாலோ என்னவோ அந்த அளவுக்கு தீம் என்னை ஈர்க்கவில்லை .உனக்குள் மிருகம் வரிகள் என்னை கவர்ந்து உள்ளன .


படத்தின் பலம் 
படம் வெளிவர முன்னர் உள்ள எனது கணிப்பின் படிபடத்தின் பலம் என்று பார்த்தால்
இந்த படத்தை பொறுத்தவரை
1-தல
2-தல
3-தல
ஏனெனில் இந்த படம் முழுக்க அஜித்தையே நம்பி இருக்கிறது .பில்லாவின் வெற்றியில் விஷ்ணுவர்த்தனின் பங்கு இருந்தது .எனினும் அஜித் மீதான நம்பிக்கை காரணமாக அவரையே கழற்றி விட்டுள்ளது தயாரிப்பு தரப்பு .அஜித்தின் படம் வெற்றியோ தோல்வியோ ஒபெநிங் செமை என்பது அசலிலேயே தெரிந்து இருக்கும் .எனவே படத்தை எந்தளவுக்கு அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார்களோ அந்த அளவுக்கு ஒபெநிங் வசூல் அள்ளலாம் .

4-படத்துக்கான பெரும் எதிர்பார்ப்பு
பில்லாவின் அபார வெற்றி காரணமாக அஜித் ரசிகர் மட்டுமின்றி அனைவரும் இப்படத்தை எதிர்பார்த்து உள்ளனர் .எனவே மங்காத்தா வை விட இப்படத்துக்கு ஒபெநிங் அதிகமாக இருக்கும்
5-அண்மைக்காலமாக பெரிய (இதன் விளக்கம் உங்களுக்கு தெரியும் தானே )நடிகரின் படங்கள் எதுவுமே வெளியாக வில்லை .இந்த வருட தொடக்கத்தில் வெளியான நண்பன் தான் பெரிய படம் .எனவே அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் இப்படம் பார்க்க ஆவலுடன் உள்ளனர் .


படத்தின் பலவீனம் 
படத்தின் பலவீனம் என்று பார்த்தால் மேலே கூறப்பட்ட சில விடயங்களே பலவீனமாகவும் மாறும் .எப்படி எனில்
அதிக எதிர்பார்ப்பு
படத்தை பார்க்கும் ரசிகர்கள் பில்லா வுடன் தான் ஒப்பிடுவார்கள் படம் சற்று பிசகினாலும் என்னடா இது பில்லா அளவுக்கு இல்லை என்று அஜித் ரசிகர்களே புலம்புவார்கள் என்றால் மற்றவர்களை சொல்லவும் வேண்டுமா .இதையே சாக்காக கொண்டு பெரும் பிரளயமே நடத்துவார்கள் .ஏழாம் அறிவு அடி வாங்க முக்கிய காரணம் இதுதான் .அதைவிட கடைசி யாய் வெளிவந்த மங்காத்தா வின் வெற்றியோடும் ஒப்பிடுவார்கள் .
தல தொடர்ந்து ஒரே மாதிரி கரக்டர் இல்படங்களில் (பில்லா ,அசல் ,மங்காத்தா)
நடப்பதால் சாரி நடிப்பதால் கோட் சூட் கூலிங் கிளாஸ் என அவரின் ரசிகர்களுக்கே ஒருவித சலிப்பை உண்டு பண்ணலாம் .

சென்னை யில் வசூலில் எந்திரன் தவிர மற்ற படங்கள் பத்து கோடியை தாண்ட முடியாமல் இருக்க அண்மையில் வந்த ஓகே ஓகே 16 கோடியை தாண்டி இருக்கிறது .எனவே இனிவரும் படங்கள் அதை தாண்டுமா என்பதை பில்லா 2 இன் முடிவில் இருந்து அறியலாம் .
################################################################################


சகுனி அடுத்த பதிவில் 
ஆமா யாரு மாமா ?

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...