Wednesday, February 29, 2012

ஓம் சாந்தி ஓம் -தமிழ் ரீமேக்

ஓம் ஷாந்தி ஓம்


ஓம் சாந்தி  ஓம், அண்மையில் பார்த்த படங்களில் மனதை கவர்ந்தது.அதிலே ஒரு காட்சி filmfare  விருது வழங்கும் விழாவில் படத்தில் நிஜமாகவே ஹீரோ ஆக நடிக்கும் சாருக்கானின் ரெண்டு படங்களும் அபிஷேக் பச்சன் நடிப்பில்   தூம் -5 உம் அக்சய்குமார் இன் கில்லாடி RETURNS உம் பரிந்துரைக்கப் படுகின்றன .ஆனால் சாருக்கானின் படத்துக்கு விருது கொடுக்கப்படுகிறது   .படு காமெடியாக எடுக்கப்பட்ட இந்த காட்சியில் ஹிந்தியில் பிரபல நடிகர்களான அபிஷேக்,அக்சய் ஆகியோர் ஈகோ பாராமல் நடித்திருப்பார்கள் .அதை விட இருபதுக்கு  மேற்பட்ட பாலிவுட் நடிகர்கள் ஒரு பாடல் காட்சியில் தோன்றுகிறார்கள் .படத்தின் கதை நம்பும் படி   இல்லாவிட்டலும் எந்தவித சலிப்பும் ஏற்படாமல் நகைச்சுவை+பிரமாண்டம் கலந்து அருமையாக படைத்து இருக்கிறார்கள் .
  இந்த படத்தை பார்த்த போது என் மனதில் எழும் ஆசை  இதை தமிழில் ரீமேக் செய்ய மாட்டார்களா என்பதே .கதையை சிறிதளவில்(பெருமளவில் ) மாற்றினாலும் பிரமாண்ட இயக்கத்தில் தமிழ் நடிகர்களை ஒருங்கிணைத்து எடுத்தால் சிறப்பாக இருக்கும் உதாரணமாக FILMFARE விருதில் முன்னணி நடிகர்களின் படங்கள் பரிந்துரைக்கப் படும் காட்சியில் அக்சாய் குமார் எதிரிகள் சுடும் துப்பாக்கி ரவைகளை கையால் பிடித்து மா பிசைவது போல குருவி பார்ட் -2 இல் விஜய் விண்வெளியில் இருந்து பூமிக்கு பாய்வது போல ஒரு சீனும் .பில்லா IS BACK படத்தில் தல கடலிலேயே பின்னால் நான்கு அல்லக்கைகளுடன் நடப்பது போலவும் சிவாஜி-THE YOUTH  படத்தில் தலைவர் காலேஜ் மாணவனாக நடிப்பது போலவும் ஒன்பதாம் அறிவு படத்தில்  தி டாவின்சி CODE படத்தில் இயேசுவின் வம்சாவளியினர் இருப்பதாக   கூறப் பட்டது போல சூர்யா அந்த வம்சாவளியில் வந்தவராகவும் அவருக்கு DNA புகுத்துவது   போலவும் காட்சிகள் காமெடியாக எடுக்கலாம் .

ஒரு பாடல் காட்சியில் தமிழ் நடிகர்கள் அனைவரும் வந்து போவது போல எடுக்கலாம் .அதை KVஆனந்த் கோ படத்தில் முயற்சி செய்த போதும் அது சரியாக அமைய வில்லை .பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் கலாச்சாரம் இப்போது தமிழிலும் பரவி வரும் இந்த சூழ்நிலையில் இது நடைமுறை சாத்தியம்தான் .எனினும் பெரும் முட்டுக் கட்டையாய் இருப்பது இந்த படத்தில் யார் ஹீரோ ஆக நடிப்பது என்பது மட்டுமே?

மீண்டும் SILENCER சத்யன் 
SI
 silencer *கடந்த 32 வருடங்களாக இந்த கல்லூரியில் பல மாணவ, மாணவியர்கள் மிகச் சிறந்த முறையிலே இவரால் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பல பேர் இவரால் கற்பழிக்கப்பட இருக்கிறார்கள். எனக்கு ஓர் ஆச்சரியம் ஓர் மனிதன் தன் வாழ்நாளில் எப்படி இத்தனை மாணவிகளை கற்பழிக்க முடியும்? தன் வாலிப வயதிலிருந்தே பலான புத்தகங்களை படித்து படித்து, பற்பல பயிற்சிகளை எடுத்துக் கொண்டு தன்னை இதற்காகவே வலிமைப்படுத்தியிருக்கிறார். நாம் அனைவரும் இவரைப் பின்பற்ற வேண்டும்! இன்று மாணவர்களாக இருக்கும் நாளை உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இவரைப் போலவே கற்பழிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் மறக்கவே முடியாத வாயை புண்ணாக்கிய   நகைச்சுவை வரிகள் ,நண்பன் படச்த்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சத்யன் மீண்டும் விஜயுடன் துப்பாக்கியில் இணைந்து நடிக்கிறார் .இந்த படமும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் .
###############################################################################
பேராதனை  பல்கலைக் கழக மாணவர்கள் பங்கு பெற்ற  வில்லுப் பாட்டு 'காதல் ராஜ்ஜிஜம்' அண்மையில்    கொழும்பு தமிழ் சங்கத்தில் நடை பெற்று பெரும் வரவேற்பை பெற்றது .வில்லிசை அருகி வரும் இந்த காலத்தில் இவர்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது .அதில் பங்கேற்ற  சக நண்பர்களை தொடர்ந்தும் சிறப்பாக கலை பணியாற்ற வாழ்த்துகிறேன் .
 #########################################################################


தனது நகைச்சுவையால் தமிழ் சினிமாவை கட்டி போட்ட தலைவர் கவுண்டமணியின் திருமண நிகழ்வு
 #############################################################################
தமிழ் பாடல்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் முதல் 100 வார்த்தைகள் மதன் கார்க்கியின் ஆராய்ச்சி முடிவு


#################################################################################



உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே ..ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் இருக்கிறது -அப்துல் கலாம்


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...