Friday, December 30, 2011

2011 -டாப் படங்கள் ஒரு பார்வை

இந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளிவந்த நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் என்னுடைய பார்வையில் ............................
எனக்கு பிடித்த படங்கள் 


மங்காத்தா

அஜித் குமாரின் 50 வது படம் .வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த இப்படம்  தயாநிதி அழகிரியால் தயாரிக்கப் பட்டு அரசியல் காரணங்களால் சன் பிக்சர்ஸ்  இனால் வெளியிடப் பட்டது .நீண்ட இடைவெளியின் பின் தல யை தலை நிமிர வைத்தது.யாருமே ஏற்பதற்கு தயங்கும் நெகடிவ் ரோலில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அஜித் .அர்ஜுன், திரிஷா,பிரேம்ஜி அஞ்சலி என நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்தில் எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது யுவனின் தீம் மியூசிக் தான் .பில்லா விலேயே கலக்கல் தீம் வழங்கியிருந்தார் .இது அதை விட பல படி மேலே இருந்தது .

படம்130 கோடி வசூல் என சன் பிக்சர்ஸ் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது அஜித்தின் காரியர் இல் மிக சிறந்த படங்களில் ஒன்று .இந்த ஆண்டு வெளியான படங்களில்  மிகவும் கவர்ந்த படம் .என்னுடைய பட விமர்சனம் மங்காத்தா -போக்கிரி 2.


எங்கேயும் எப்போதும் 



முருகதாஸ் தயாரிப்பில் அவரின் உதவி இயக்குனர் சரவணன்  இயக்கிய அருமையான படம்தான் எங்கேயும் எப்போதும் .தமிழ் சினிமாவில் புது விதமான கதை .ஒரு பேருந்து பயணத்தை வைத்துக் கொண்டு சமுகத்துக்கு விழிப்புணர்வு ஊட்டுகின்ற படம்.ஜெய் ,அஞ்சலி,என பலரும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார்கள் படத்தில் என்னை  மிகவும் கவர்ந்தது சென்னையிலே புதுப் பொண்ணு பாடல் காட்சி .

தெய்வ திருமகள் 

இயக்குனர் விஜய் i am sam  படத்தில் இருந்து சுட்ட கதை எனினும் தமிழுக்கு ஏற்ப மாற்றி  அமைத்து அதில் வெற்றியும் கண்டார் .copy  என்பது இல்லை என்றால் இந்த வருடத்தின் டாப் படமாக அனைவராலும் கொண்டாடப் பட்டிருக்கும்.விக்ரம் நடிப்பில் மிளிர்கிறார்  .எனினும் அவரை விட குழந்தை நட்சத்திரமாக அனைவரையும் கொள்ளை கொண்டார் சாரா .என்னுடைய பட விமர்சனம் தெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும்.

காவலன் 

இயக்குனர் சித்திக் மீண்டும் விஜய்க்கு  தேவையான நேரத்தில் கை கொடுத்து இருந்தார் .மலையாளத்தில் தான் இயக்கிய போடி காட் படத்தை தமிழுக்கு மட்டுமல்ல இந்தியிலும் படமாக்கி வெற்றி கண்டுள்ளார் .விஜய் படமாக அல்லாமல் சித்திக்கின் படத்தில் விஜய் என்னும் நடிகர் நடித்து இருந்தார் .படத்தின் பெரும் பலமாக இருந்தது யாருமே எதிர்பாராத     கிளைமாக்ஸ் தான். .படம் வெளியிடுவதில் பல இன்னல்களை சந்தித்து தனது அடுத்த வெற்றிக் கணக்கை தொடங்கியிருந்தார் விஜய் .படத்தில் மிகவும் கவர்ந்த இடம் அனைவரையும் போல  கிளைமாக்ஸ் ரயில் காட்சிதான் .

பல படங்களை பார்த்திருந்தாலும் தனிப்  பட்ட  இயக்குனர்,நடிகர்,நடிகை,இசை விருப்பங்களை கருதாமல் என் மனதுக்கு பிடித்த படங்கள் இவை தான் .


 எதிர் பாராத வெற்றிகள்

 கோ

 இந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட் படங்களில் ஒன்று .kv ஆனந்த் இன் அயன் பிடித்திருந்தாலும் இதை பெரியளவில் எதிர்பார்க்கவில்லை .எனினும் போட்டிக்கு நல்ல   படங்களும் இல்லாத நிலையில் சக்கை ஓட்டம் ஓடியது கோ .ஜீவாவுக்கு பிரேக் கொடுத்த படம் .பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அயன் அளவுக்கு என்னை கவர  வில்லை

காஞ்சனா

ராகவா லோரன்ஸ் கலைஞர் டிவியில் மாத கணக்கில் விளம்பரம் செய்த போது  காஞ்சனா ஆட்டத்தை பார்க்க கடுப்புத்தான் வந்தது .ஏற்கனவே வந்த முனி பெரியளவில் வெற்றி பெறாத நிலையில் காஞ்சனாவை நான் மட்டுமல்ல பலரும் காமெடியாகத்தான் பார்த்தார்கள் .எனினும் காஞ்சனா பெண்களின் அமோக ஆதரவு காரணமாக மிகப் பெரு வெற்றியை பெற்றது .sify  பிளாக் பஸ்ட்டர் ஆக அறிவிக்கும் அளவுக்கு வெற்றி .கோவை சரளாவின் நடிப்பு என்னை கவர்ந்திருந்தது .சரத்குமாரின் வேஷமும் பிடித்திருந்தது .படம் பிடிக்க வில்லை. 

வேலாயுதம்

வழமையான காரம் குறையாத  விஜய் மசாலா . .மசாலா படங்களின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த விஜய்  மசாலா சரியான விதத்தில் கலக்கப் படாததால் தொடர்ந்து ஏமாற்றங்களை  வழங்கி வந்த நிலையில் இந்த படம் பெரியளவில் எதிர் பார்ப்புக்களை உருவாக்க வில்லை .மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் ஏழாம் அறிவு அதி உச்ச விளம்பரங்களுடன் போட்டிக்கு வர இந்தப் படம் எதுவித விளம்பரங்களும் இன்றி வெளிவந்தது .நிச்சயமாக சாதாரண மனிதன் இரண்டில் எதை பார்க்கலாம் என சிந்த்தித்தால் ஏழாம் அறிவை தேர்ந்தெடுத்தான் .
வேலாயுதம் பரவாயில்லை நல்லாய் இருக்கு என்ற கதை மௌத் டாக் மூலமாக பரவ ஏழாம் அறிவு ஏமாற்றவும் அடுத்த வாரமே தியேட்டர்கள் அதிகப் படுத்தும் அளவுக்கு நிலையை பிடித்தது .    
ஆக மொத்தத்தில் வேலாயுதம் எதிர்பாராத வெற்றியை பெற்று விஜயை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளது .

எதிர்பார்த்து ஏமாற்றிய படங்கள் 


ஏழாம் அறிவு 


இந்த வருடம் வெளியான படங்களில் அதிக எதிர் பார்ப்புடன் வெளியான படம் இதுதான் .தமிழனின் வீரத்தை உலகுக்கு பறை   சாற்றிய போதும் கொடுத்த ஓவர் பில்ட் அப் அளவுக்கு படம் இல்லாதாதால் ஏமாற்றி விட்டது .எனினும் குறிப்பிட தக்க வசூலை வாரிக் கொண்டது .


ஒஸ்தி 
மாஸ் படங்களில் பல முறை முயன்றும் தோற்ற சிம்பு இம்முறை மாஸ் டைரக்டர் தரணி ,சூப்பர் ஹிட் பட ரீமேக் என புது வியூகத்தில் இறங்க எதிர் பார்ப்பை உருவாக்கி இருந்தது .இந்த படம் பார்த்த போதுதான் சுறா பார்க்கும் போது விஜய் ரசிகர் அல்லாதவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை   உணர்ந்து கொண்டேன்


ராஜபாட்டை 
மாஸ் படங்களை தமிழுக்கு அறிமுகப் படுத்திய விக்ரம் நீண்ட காலத்துக்கு பின் களமிறங்க எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது .வழமையா எந்த படம் பார்த்தாலும் அந்த படத்தின் பாதிப்பு குறைந்தது அரை மணிநேரமாவது இருக்கும் . ஒரு படம் பார்த்த பீலிங் இல்லாமலே தியேட்டரை விட்டு வெளியில் வந்த முதல் படம் இதுதான் .

ஏனையவை 
ஆடுகளம்,சிறுத்தை ,அவன் இவன் பேசப் பட்ட படங்கள் என்னை எந்த விதத்திலும் கவரவில்லை .மயக்கம் என்ன கண்டிப்பாக என்னை மயக்கிய படம் .மனதை பாதித்த படம் .பலராலும் பாராட்டப் பட்ட ஆரண்ய காண்டம் ,குள்ள நரி கூட்டம் ,மௌன குரு நான் இன்னும் பார்க்கவில்லை

ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு பீலிங் .அந்த வகையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து இருக்கும் .இது முற்று முழுதாக என் பார்வைதான் .மீண்டும் சந்திப்போம் .
-உங்களில்   ஒருவன்     

Post Comment

Friday, December 23, 2011

மங்காத்தா வசூல் 130 கோடி .உண்மையா -ஒரு அலசல்


 .
''தற்போது படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்த நிலையில் இப்படத்தின் ஒரு காட்சி கூட எந்த திரையரங்கிலும் இல்லையாம். இந்நிலையில் படத்தினை பற்றி மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் உலவுகிறது''. 


வீரகேசரி வெளியிட்ட செய்தி இது
 இன்று வேலாயுதம் படம் வெளிவந்து 60 நாள் .பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரம் தான் இது .அல்ல விடில் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்  (behindwoods)நிலைவரங்களை பார்த்தால் தெரியும் இப்போதும் படம் ஓடிக் கொண்டு இருப்பது .

''படம் வெளியான ஒரு வாரத்தில் மட்டுமே படம் கல்லா கட்டியதாம். பின்பு படத்தின் வசூல் நிலைமை சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லையாம். அத்துடன் சுமார் 50 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரையில் 40 கோடியினையே வசூலாக பெற்றிருக்கிறதாம். இனியும் இப்படத்தின் மூலம் வருமானம் ஈட்டமுயாது என்ற நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரும் மனக் கவலையில் இருக்கிறாராம். ''
இதில் இருந்தே தெரிகிறது எழுதியவரின் மனநிலை .90 கோடிகளை கடந்து வெற்றி பெற்றுள்ளதாக  படத்தை தயாரித்த  ரவிச்சந்திரனும் வெளிநாட்டு     உரிமை பெற்ற ஐங்கரன் நிறுவனமும் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இப்படி நடுநிலை தவறாத பாரம்பரிய தமிழர் பத்திரிகையான வீரகேசரியின் நம்பகத்தன்மையில் சந்தேகம் வருகிறது .இந்த செய்தியை 1700  க்கு மேற்பட்டவர்கள் முக புத்தகத்தில் பகிர்ந்துள்ளனர் .பிழையான செய்தி என பலரும் சுட்டிக் காட்டிய பின்னும் இதை வீரகேசரி நீக்க வில்லை .
வீரகேசரியில் வெளியான செய்தி
ஒருவரின் வெற்றியில் இவ்வளவுக்கு பொறாமை படும் இவ்வாறானவர்களின் செய்தியை ஒரு பொறுப்பான பத்திரிக்கை வெளியிட்டிருப்பது பதிவர்கள் தங்கள் எண்ணத்தில் தோன்றிய தங்களின் கருத்துகளை வெளியிட அதை copy  அடித்து உண்மை செய்தி போல பிரசுரிக்கும் கீழ்த்தரமான இணையத்தளங்களுடன் வீரகேசரியையும் ஒப்பிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளியுள்ளது .வீரகேசரி குழுமத்துக்கு நான் தாழ்மையாக வேண்டுவது என்னவென்றால் செய்திகளை பிரசுரிக்கும் போது உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிடுவதோடு   இந்த பிழையான செய்தியை நீக்கி உங்கள் நன் மதிப்பை தக்க வைத்து கொள்ளுங்கள் .






ங்காத்தா வசூல் 130  கோடி 

தல நடிப்பில் வெளிவந்த மங்காத்தா படத்தின் வசூல் தொடர்பில் பல வதந்திகள்   வெளியான நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மங்காத்தா வசூல் 130 கோடி என உத்தியோகபோர்வமாக அறிவித்துள்ளது .சினிமா விமர்சகர்கள் பலர் அண்ணளவாக 80 கோடி என கணித்துள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள கணக்கு அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று நினைப்பீர்களேயானால் அது உங்களின் பிழை .எந்திரன் உலக சாதனை புரிந்த படம்தான் எனினும் அதன் வசூலையும் மிகைப் படுத்தித்தான் வெளியிட்டு இருந்தார்கள் .இதன் உண்மை தன்மையை அண்ணன் ஜீவதர்சனிடம்(http://www.eppoodi.blogspot.com/ )தான் கேட்க வேணும் எனினும் நான் நேரடியாக  டிவியில் பார்த்த சிங்கம் இசை வெளியீட்டு விழாவில் அயன் திரைப்பட வசூலை வேட்டைக்காரன் முறியடித்ததாக அப்போதைய நிறைவேற்று அதிகாரி சக்சேனா அறிவித்ததை நீங்கள் நம்பினால்  மங்காத்தா வசூலையும் நம்பலாம் behindwoods செய்தி குறிப்பு 


 சிங்கம் இசை வெளியீட்டு விழா
 நண்பன்
நண்பன்  பாடல்கள் இன்று வெளியாகின .பாடல்கள் அனைத்துமே வரவேற்பு பெற்று வருகின்றன .ஏழாம் அறிவு பாடல்கள் copy என பலரும் விமர்சித்த நிலையில் நண்பன் பாடல்களை பலரும் எதிர் பார்த்து இருந்தனர் .எனினும் பாடல்கள் இசை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
.மதன் கார்க்கி இரண்டு பாடல்களை எழுதி உள்ளார் .காதல் என்பதை 16 மொழிகளில் வெளிப் படுத்தியுள்ளார்
அஸ்க்-Ask - Turkish
லஸ்கா-Laska - Šløvak
ஏமோ-Amøur - French/Španish
ஐ-Ai - Chinese
அஸ்த்-Ast - Icelandic
லைபே-Liebe - German
அஹாவா-Ahava - Hebrew
போலிங்கோ-Bølingø - Lingala
சிந்தா -Cinta - Malay
இஷ்க்-Ishq - Arabic
மைலே-Meile - Lithuanian
லவ் -Love - Ènglish
இஷ்ட-Ishtam - Telugu
பிரேம-Prema- Malayalam
பியாரோ -Pyaaro- Hindi
காதல்-Kaathal - Tamil 

 வெளியான பாடல்களில் அஸ்கு பாடல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது .விஜய்க்கு பிடித்த பாடலும் இதுதான் .
மதன் கார்க்கியின் பாடல் வரிகள் அருமை
''ப்ளுடோவில் உனை நான் கூடேற்றுவேன்..
.விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன் .. 
முக்கோணங்கள் படித்தேன் உன் மூக்கின் மேலே ....
விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின்மேலே ..
மெல் இடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் .

புல்லில் பூத்த பனி நீ... -ஒரு
கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணனி.. -உன்
உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போல
பிள்ளை மெல்லும் சொல்லை போல...''
மதன் கார்க்கி எழுதிய இரண்டு  பாடல் வரிகள் அவரின் இணையதளத்தில் முழுமையாக பெற்று கொள்ளலாம்
மதன் கார்க்கியின் இணையத்தளம் 

ஏனைய பாடல்களும் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன .நண்பன் இசை வெளியானதில் இன்றைய தினம் திரைக்கு வரும் ராஜ பாட்டை யை மறந்து விட வேண்டாம் .படம் நல்ல மசாலா பொழுது போக்கு படம் என விமர்சனங்கள் வெளி வந்தவண்ணமுள்ளன  .அத்துடன் சாருக்கானின் டான் -2 வும் இன்று வெளியாகிறது .

நேரமின்மை காரணமாக வலையுலகில் ஒதுங்கி இருந்தாலும் முக புத்தகம் மூலமாக என்னை எழுத தூண்டும் அனைவருக்கும் நன்றிகள் .
 -உங்களில் ஒருவன் 







Post Comment

Wednesday, December 7, 2011

2012- அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது?

அடுத்த ஆண்டு வெளியாகும் படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது என சினிமா விகடன் நடத்திய கருத்துக் கணிப்பில் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'நண்பன்', அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்திற்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ' நண்பன் ' திரைப்படம்  - 1,19, 668 வாக்குகளும், 'பில்லா-2'  திரைப்படம் 1,08,339 வாக்குகளும் பெற்றன. மற்ற படங்களுக்கு கம்மியான வாக்குகளே கிடைத்தன.
வழமை போல விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக் கொண்டுள்ளார்கள் .சில மாதங்களுக்கு முன்னர் சிறந்த யூத் நடிகர் யார் என்று இதே தளம் நடத்திய வாக்கெடுப்பிலும் கடும் போட்டியின் மத்தியில் அஜித் வென்றமை குறிப்பிடத்தக்கது .இது விஜயின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதை காட்டுகிறது .
எனினும் இந்த வாக்கெடுப்பு முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை என்பதற்கு மாற்றான்,கோச்சடையான்,விஸ்வரூபம்  என்பன சில நூறு வாக்குகள் மட்டுமே பெற்றதில் இருந்து அறியலாம் .
 சினிமா விகடன் கருத்துக் கணிப்பு .

நண்பன்
  விஜயின் காரியரில் பெஸ்ட் படமாக அமையலாம் என பலரும் எதிர்பார்க்கும் நண்பன் பொங்கலுக்கு வெளி வருகிறது .பாடல்கள் இம்மாதம் 15 ம் திகதி வெளியாக உள்ளன.3  IDIOTS   படத்தை பல தடவைகள் பார்த்து விட்டேன் .அமீர் கான் கலக்கி இருப்பார் .அதை விஜய் முறியடிப்பாரா என அறிய சில வாரங்கள் காத்துத்தான் ஆக வேண்டும் .காமெடியில் கண்டிப்பாக கலந்து கட்டி அடித்து விடுவார் .செண்டிமெண்ட் காட்சிகள் திறமையை நிருபிக்க   வேண்டும் .படத்தில் ஜீவாவை விட ஸ்ரீகாந்த் அதிக முக்கியம் பெறுவார் .ஆனால் இப்போது ஜீவாவுக்கு ஸ்ரீ காந்த் ஐ விட மார்க்கெட் அதிகம் .ஷங்கர்  மாற்றங்கள் செய்வாரா தெரியவில்லை .சத்திய ராஜ் எவ்வித சந்தேகமும் இல்லாமல் பேராசிரியர் வேடத்தை ஈடு செய்வார் .இலியானா,சத்யன்,LORANCE ,S,J.சூர்யா என நட்சத்திர பட்டாளமே உள்ளது



ஒஸ்தி
  STR நடிக்கும் மாஸ் படமான ஒஸ்தி வெளியாகிறது .தரணி  நீண்ட இடைவெளியின் பின் தமிழில் இயக்கம் படம் இது .மாஸ் படங்களை தூள் ,தில்,கில்லி என மாஸ் படங்களின் பிரதம கர்த்தா ஆன தரணி குருவியில் சிறிது சறுக்கினார் .மீண்டும் தனது திறமையை காட்டுவாரா? .STR ஐ பொறுத்த வரை பல்வேறு துறைகளில் தனது திறமையை காட்டினாலும் மாஸ் ஹீரோவாக இன்னும் ஜொலிக்க   வில்லை என்றுதான் சொல்ல வேண்டும் .குத்து,காளை,சிலம்பாட்டம்   என பல படங்களில் முயன்றாலும் இன்னும் சரி வர வில்லை .இந்தியில் பெரு   வெற்றி பெற்ற டபான்க் படத்தின் ரீமேக் ஆன இது STR ற்கு மாஸ் அந்தஸ்தை பெற்று தரும் என்று நினைக்கிறேன் .டபான்க் படத்தின் கிளைமாக்ஸ் இல் சல்மானின் சட்டை கிழிந்து அவரின் சிக்ஸ் பக் வெளிப்படும் தமிழிலும் அந்த காட்சிக்காக STR மும்முரமாக உழைத்து உள்ளார் .உழைப்புக்கான பலன் சில தினங்களில் தெரியும்
.பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன ஒஸ்தி இசை வெளியீட்டு விழாவில் சிம்பு விஜய் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது .அஜித்தின் பரம ரசிகரான சிம்பு வின் படத்துக்கு விஜய்  சென்றமைக்கு முக்கிய காரணங்கள் விஜயின் இதுவரை வெளிவந்த படங்களின் பெஸ்ட் படமான கில்லி யை கொடுத்த தரணி தான் .அத்துடன் விஜய் இப்போது புதிய பாணியில் எல்லோரையும் அனுகுவதின் ஒரு அம்சமாகவும் இதை எடுக்கலாம் .சிலம்பாட்டம் படத்தில் ஒரு காட்சியில்'' மலேசியாவில் இருந்து வர்றீங்களே நீங்க குருவியா'' என சந்தானம் கேட்க இல்ல பில்லா என்று சிம்பு சொன்னதை விஜய் மன்னிக்கலாம் ஆனால் விஜய் ரசிகர்கள் மன்னிப்பார்களா என தெரிய வில்லை .ஒஸ்தி வெற்றி பெற வாழ்த்துக்கள் STR .  

கொலைவெறி  
 தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் இதுவரை பல்வேறு சாதனைகளை கடந்து உள்ளது.

புதிய சாதனையாக YOUTUBE இணையதளம் RECENTLY MORE POPULAR என்கிற பிரிவில் WHY THIS KOLAVERI வீடியோ பதிவிற்கு தங்க மெடல் கொடுத்து கெளரவித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமா பாடலொன்று YOUTUBE இணையத்தின் மூலம் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. உலகத்தின் பல பகுதிகளில் இப்பாடல் பிரபலமாகி விட்டது. YOUTUBE இணையத்தில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 1.8 கோடியை தாண்டியுள்ளது.150000 ற்கு மேற்பட்ட likes  கிடைத்துள்ளது .இது தமிழ் சினியுலகத்துக்கு   கிடைத்த பெருமை ஆகும் .
 
துப்பாக்கி  
எப்புடி இருக்கு 
 #################################################################################
என்னுடைய பதிவு ஒன்று பல தளங்களில் உலா வருவதாக நண்பர்கள் முலம் அறிந்தேன் .அதிலே கிடைக்கப் பெற்ற ஒன்றுதான் இது .சில மாதங்களுக்கு முன்னர் நான் எழுதிய பதிவு இது
சூர்யா விஜய்க்கு செய்தது சரியா ? .

அதை உருவி எடுத்து பிரசுரித்த new yarl.com இனது பதிவு இது .
new  yarl .com copy  
.விளங்குகிறதா இணையத்தளங்கள் செய்யும் வேலை ......சில மாதங்களுக்கு முன்னர் எனது ப்ளாக் கில் நான் எழுதியதை சுட்டு .......#சீ சீ இவர்கள் இன்னும் மயக்கம் என்ன திரைப்படம் பார்க்கவில்லையா 
 

Post Comment

Sunday, November 27, 2011

மயக்கம் என்ன -மயக்கியதா

மயக்கம் என்ன 
மயக்கம் என்ன வெளிவந்து  ஓடிக் கொண்டு இருக்கிறது படத்தை பற்றி வெவ்வேறு  விதமாக   கருத்துகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன  சில பதிவர்களின் பார்வையில்  மயக்கம் என்ன 
மயக்கம் என்ன - திரை விமர்சனம் -செங்கோவி 

எனினும் behindwoods  மயக்கம் என்ன படத்துக்கு 3.5/5 கொடுத்து இருக்கிறார்கள் .வேலாயுதம்,ஏழாம் அறிவு க்கு 3/5 தான் கொடுத்து இருந்தமை குறிப்பிடத் தக்கது . Behindwoods மயக்கம் என்ன review.
என்னுடைய நண்பன் கொழும்பில்   படம் பார்த்துவிட்டு எனக்கு அனுப்பிய   செய்தி 

"மயக்கம்  என்ன " ஒரு  கலைஞனின்  பயணம் . சாதிக்க  வேணும்னு   ஆசைபடுறவங்க  பார்க்க வேண்டிய   படம் .  பார்க்க வேண்டிய   படம் .பார்க்க வேண்டிய   படம் .

மயக்கம் என்ன -ஒருவன் நல்லா இருக்கு எண்டுறான் .இன்னொருத்தன் மொக்கை எண்டுறான் # இதுக்குத்தான் சொல்லுறது படம் பார்க்குறது எண்டு முடிவு எடுத்தால் first show பார்க்கணும் எண்டு
கண்டியில் (aerena) இப்போதும்  வேலாயுதம்,ஏழாம் அறிவு  ஓடிக் கொண்டு இருப்பதாலும்   கொழும்பு   செல்ல நேரம் இன்மையாலும் படம் பார்த்தால் விமர்சனம் எழுதுகிறேன் 
************************************************************************************************************
பிரபலங்களின் குடும்ப படங்கள் சில  
 
ரஜினி   பற்றி படித்த வியப்பான தகவல்கள் சில உங்களுக்கு பகிர்கிறேன்
'பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!

ரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏவி.எம். தயாரிப்பு!

ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!

ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone whereas my problem is stomach''

ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

ரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம்கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்!

பாலசந்தர் மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன் பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி!
திரையுலக வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர் காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக் கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்!

இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்!

இன்னும் ரஜினி பற்றிய தகவல்கள் அடுத்த பதிவிலும் .......

நான் இந்த தகவல்களை ஒரு தளத்தில்தான் பெற்றேன் எனினும் இதன் மூலம்   எது என்று தெரிய வில்லை ஆதலால் அந்த தளத்தின் லிங்க் கொடுக்க முடியவில்லை 


***********************************************************************************
நண்பன் official trailor 
இதை பார்க்கும் போது  3-idiots எந்த வித மாற்றமும் இல்லாமல்  re make செய்யப் பட்டுள்ளது ,காவலனில் தேவை இல்லாமல்  புகுத்தப் பட்ட விஜயிசம் இதிலே தவிர்க்கப் பட்டு  இருக்கும் என்ற எதிர்பார்ப்பே உருவாகிறது . நான் எதிர் பார்த்ததும் இதைத்தான்.
என் ப்ரெண்ட போல யாரு மச்சான் ..!
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான் ..!
நீ எங்க போல எங்க மச்சான் ..!
என என்னி என்னி ஏங்க வச்சான் ..!
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான் ..!
நம் கண்ணில் நீர பொங்க வச்சான் ..! ♥ ♥
**********************************************************************************
 உலகிலேயே அழகிய பல்கலை கழகங்களில் ஒன்றான கண்டியில் அமைந்திருக்கும் பேராதனை பல்கலை கழகத்தின்   அழகை ரசிக்க விருப்பமா   இங்கே  க்ளிக் செய்யுங்கள் 
beauty of pera
****************************************************************************
 தொடர் பதிவாக எழுத ஆரம்பித்த விஜய் ,சூர்யா வென்றது யார் ? .தொடர்ச்சி விரைவில் வெளிவரும்  என்பதை தெரிவித்து கொள்ளுகிறேன்   

Post Comment

Tuesday, November 8, 2011

வேலாயுதம் -ஏழாம் அறிவு -மங்காத்தா எது டாப் -ஒரு அலசல்

இந்த வருடத்தில் விஜய் ,அஜித்,சூர்யா,விக்ரம் படங்கள் வெளியாகி விட்டன .இவற்றில் எது அதிக வசூல் பெரும் என்பது சினி உலகம் சார்ந்த அனைவரினதும் எதிர் பார்ப்பு ஆகும் .அந்த வகையில் சினி உலகின் மையம் ஆக விளங்குகின்ற சென்னையில் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்கள் பெற்ற வசூலை அலசி ஆராய்வதே இந்த பதிவு .

வேலாயுதம்-ஏழாம் அறிவு 
இந்த தீபாவளிக்கு வேலாயுதம்,ஏழாம் அறிவு ஆகியன மோதின .சென்னை யில் ஏழாம் அறிவு 5நாள் முடிவில் இருந்த நிலை இது .
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend594
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 13,217,553

Total collections in Chennai: Rs. 2.20 Crore


வேலாயுதம் இருந்த நிலை இது .
No. Days Completed5

No. Shows in Chennai over this weekend492

Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,701,270
Total collections in Chennai: Rs. 1.95 Crore


ஏழாம் அறிவுக்கு ஏற்கனவே இருந்த உச்ச எதிர்பார்ப்பு (வேலாயுதத்தை விட ) காரணமாகவும் தயாரிப்பாளர் உதயநிதி அதிக திரையரங்குகளை பெற்ற காரணத்தாலும் முதல் வார இறுதி நாட்களில் ஏழாம் அறிவு 594காட்சிகளும்  வேலாயுதம் 492காட்சிகளும் காண்பிக்கப் பட்டன .5நாள் முடிவில் ஏழாம் அறிவு 2.20கோடியும் வேலாயுதம் 1..95கோடியும் வசூலித்தன.(விசேட காட்சிகள் சேர்க்கப் படவில்லை).ஏழாம் அறிவு முதல் இடத்தில் இருந்தது .எனினும் சராசரி திரையரங்குகளின் occupancy  விகிதம் இரண்டு படங்களுக்கும் சமமாக இருந்தது (90%).


சரி ஒரு வார நிறைவில் 
ஏழாம் அறிவு 
No. Weeks Completed1
No. Shows in Chennai over this weekend495
Average Theatre Occupancy over this weekend: 85%
Collection over this weekend in Chennai: Rs. 10,386,048
Total collections in Chennai: Rs. 4.56 Crore 

வேலாயுதம்

No. Weeks Completed1
No. Shows in Chennai over this weekend498
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,068,930
Total collections in Chennai: Rs. 4.36 Crore 

ஏழாம் அறிவு முதல் வார இறுதியில் 594ஆக இருந்த காட்சிகளின் எண்ணிக்கை அடுத்த வார இறுதியில்495ஆக குறைவடைந்தது (99 குறைவு  ) வேலாயுதம் 492 இலிருந்து 498 ஆக அதிகரித்தது .(6  கூட).ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் வேலாயுதத்தை விட 104 காட்சிகள் அதிகமாக காண்பிக்கப் பட்ட ஏழாம் அறிவு அடுத்த வார இறுதியில் சடுதியாக குறைவடைந்து வேலாயுதத்தைவிட 3 காட்சிகள் குறைவாக வீழ்ச்சி அடைந்தது .ஏழாம் அறிவு திரையரங்கு கிடைப்பனவு விகிதம 90 இலிருந்து 85 ஆக குறைவடைந்தது .ஆனால் வேலாயுதம் தொடர்ந்து 90 ஆகவே இருந்தது .வழமையாக நாட்கள் செல்ல செல்ல வார இறுதி காட்சிகளும் ,திரையரங்கு occupancy வீதங்களும் குறைவடைவதே வழமை .ஆனால் வேலாயுதத்துக்கு காட்சிகள் அதிகரித்தும் occupancy  மாறாமலும் இருப்பது அது திடமான நிலையில் உள்ளதை காட்டுகிறது .

.
ஆக ஏழாம் அறிவு 4 .56கோடியும் வேலாயுதம் 4 .36கோடியும் பெற்றுள்ள போதும் ஏழாம் அறிவு வீழ்ச்சி பாதையில் செல்ல வேலாயுதம் முதல் இடத்தை பிடித்துள்ளது .

வேலாயுதம்-மங்காத்தா 



மங்காத்தா எவ்வித போட்டியும் இல்லாமல் தனித்து வெளி வந்தது . வார இறுதியில் 615 காட்சிகள் காண்பிக்கப் பட்டன .வேலாயுதம் 498 மங்காத்தா  திரையரங்கு occupancy 80 % ஆக இருந்தது .ஒரு வாரத்தின் பின்னர் 4 .24 கோடி வசூல் செய்துள்ளது .அதிக காட்சிகள் (117 ).திரையிட்ட போதும் வேலாயுதம் பெற்ற வசூலை விட குறைவாகவே பெற்றுள்ளது .


சகல விபரங்களும் உண்மையான தகவல்கள் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற http://www.behindwoods.com.இனால் வெளியிடப் பட்டவை .


உலக அளவிலான வசூல் விபரங்களை  பல்வேறு இணையத் தளங்களும் வெளியிட்டுவருகின்ற போதும்அவை உறுதிப் படுத்தப் படவில்லை .


தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் .
**********************************************************************************
இது நம்ம ஏரியா 




Flower garlands from critics and websites for Velayudham:
SIFY:
Velayudham is No:1 in overseas market!

AYNGARAN:
East or West Vijay is always the best and so are his fans
...
BOLLYWOOD INDUSTRY TRACKER TARAN ADARSH:
Tamil film #Velayudham is rocking internationally. Opening weekend biz in UK and USA is excellent.

INDIAGLITZ:
Vijay is the undisputed 'King of Openings'

BEHINDWOODS:
Velayudham is finally emerging as the Diwali winner

NIKHIL MURUGAN, FILM TRACKER:
Ilayathalapathi,A single man doesn't speaks,but the whole world is speaking about his Success in Velayutham..

SRIDAR PILLAI INDUSTRY TRACKER:
Critics go ga-ga over Vijay's Velayudham.. The unanimous Diwali choice of
reputed critics in Hindu, TimesOfIndia, IndianExpress & DeccanChronicle is Velayudham..

THE HINDU:
One man entertainment troupe VIJAY in the lead, “Jayam” Raja has a clear WINNER this DIWALI

CNN IBN:
Velayutham collected 40c in 5days (movie budget is around 42c)

VIKADAN:
ஏழாம் அறிவை விட குறைந்த தியேட்டர்களில் வேலாயுதத்தை வெளியிட்டாலும் 40 கோடி வசூல்

DNA INDIA.COM:
Velayudhams victory over 7aam Arivu surprises all

GENELIA:
Hw much bigger does it get.. Yayyyy.. Vijay's 'Velayutham' makes Rs 40 crore worldwide

SALEM DISTRIBUTOR:
51 padangalin vasoolai vizhungiya tsunami intha Velayutham

SIMBU:
Velayutham, mass movie

FILM CRITIC MATHAN:
Velayutham, a declared hit.. Vijay, darling of masses

MANORAMA MAGAZINE:
Ilayathalapathy Vijay's Velayutham Record Breaking collections In Kerala

SPB CHARAN:
Saw VELAYUDHAM. Very good entertainer.

SIBI RAJ:
Watched vela firstday @LA .very nice :) thalaivar performance super especialy wen sarnya dies . Heard from a distributer in Salem tat it broke al t records in Salem :-)

REDIFF.COM:
Velayudham wins the Diwali race in Kerala

TIMES OF INDIA:
Vijay sure to make hat-trick Hits with Nanban for Pongal

PUTHIYA THALAIMURAI:
Velayutham declared as the massive hit of diwali

600024.COM:
On Deepavali day, Velayutham has definitely cleared the fence with a huge six.

METRO MATINEE.COM:
As a big break once; for Rajinikanth Basha, for Vijay its Velayudham !!

IBN LIVE:
Vijay's 'Velayutham' leads the race in south

REDIFF:
Among the three, it was Vijay who seemed to have won the Diwali race. it's paisa vasool.

HINDU:
No pretensions, no big talk, Velayudham simply enters and entertains!
You get what you know you would — action unplugged!

DECCAN CHRONICLE:
Vijay back with his trademark entertainer,
Velayudham a great watch for this festival season.

INDIAGLITZ:
A right choice for the festival mood.

TAMIL GALATTA.COM:
Ilayathalapathy Vijay has once again proved that he is the king of box office in Kollywood.

BEHINDWOODS:
Velayutham took a grand opening on Diwali day and being a mass commercial entertainer, fans and especially family audiences are eager to watch Vijay on the big screen.

SONY MUSIC:
'Velayudham is a super smash hit'

PLUZ MEDIA:
In spite of other big releases, Velayudham has taken a front seat WINNING THE DIWALI RACE

INDIAGLITZ:
'Velayudham producer Aascar films V Ravichandran is happy that his film has made a huge box office hit this Diwali'

TOP10CINEMA:
Theatre owners and exhibitors have demanded for additional prints for VELAYUTHAM. The repeat audiences are rushing into the theatres

ACTOR VAIBAV:
Velayudam rocked::)) good masala flick from thalapathi::))

PREMJI AMARAN:
VelaYudam super thalabathi rocked in it Super fights and action Full entertainment and mass and heroism I liked it

VENKAT PRABU:
Velayudham Thalapathy rocked!! Mass commercial flick from raja sir!!

SINGER KRISH:
Watching "Velu" for the again...

INDIAGLITZ:
Deepavali in front of cinema halls screening 'Velayudham'

ACTOR RAVI:
Velayudham rockin theatres all over the world. Amazing feedback. Can't ask 4 more. It's been a grt Diwali. Thnx to all ilayathalapathy fans

GENELIA:
My Diwali present- Velayudham turning out huge, thank u all, feels awesome whn audience reactions n critcs reviews r both gr8.. Happy me☺

SINGER KRISH:
Loved velayudham. . i loved vijay anna's intro! super mass. . anna's performance is something different.. loved it!!

SIFY:
Velayudham - (4 stars) ; verdict - Paisa Vasool
Ra.one - (2.5 stars)
7am Arivu - (2 stars) ; verdict - Average

UTV CHIEF:
Velayudham is a well made commercial entertainer. Loved the climax scenes & fight. Vijay-M.Raja rock as a team. Diwali treat for everyone.

SULEKHA.COM:
Velayutham a full length entertainer promises to take Vijay`s career to another level of stardom

SEVANTHI:
German November First Week 7 Am Arivu Show Cancel : Velaudham Will Show on Same Screen Number At Same டைம்

Post Comment

Sunday, November 6, 2011

விஜய் ,சூர்யா வென்றது யார் ?

அண்மைக்கால தமிழ் சினிமா சம்பந்தமான விடயங்களை என்னுடைய பார்வையில் அலசி ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் .பதிவு நீண்டு கொண்டிருக்கிறது .எனவே தொடர் பதிவாய் அமையும் .
இதன் முந்தய பகுதியை படித்தால்தான் இங்கே தொடர முடியும் 
மங்காத்தா வா ? வேலாயுதமா? எது டாப்.


ஏழாம் அறிவு 


ஏழாம் அறிவு இந்த வருடத்தின் எதிபார்ப்புக்கு உள்ளான   படங்களில் முதல் இடத்தில் இருந்த படம் ( including behindwoods ) .அதன் படப் பிடிப்பும் இந்த வருட ஆகஸ்ட் மாதத்தை இலக்கு வைத்து தொடங்கப் பட்டு  சற்று தாமதமாகியது .தமிழ் சினி உலகில் பர பரப்பு தொற்றிக் கொண்டது வேலாயுதம் ,ஏழாம் அறிவும் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப் பட்டமைதான் .நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இது ஒரு போதும் சாத்தியப் படாது .கண்டிப்பாக ஒரு படம் பின்வாங்கும் இல்லை முன் வாங்கும் .ஆனால் கடைசி வரை இதை நிறுத்த பலரும் முயற்சித்த போதும் எதுவும் கை கூடாமல் மீண்டும் சினிமா ரசிகர்களுக்கு தித்திப்பை ஏற்படுத்தி விட்டன .
எவ்வாறு சாத்தியம் ஆயிற்று  

(இப்போது நான் சொல்பவை தீபாவளிக்கு முன்னான நிலை என்பதை அனைவரும் கருத்தில் கொள்க  .)

ஏழாம் அறிவு சூர்யா முருகதாஸ் ஹரிஸ் கூட்டணியில் பிரமாண்ட தயாரிப்பு (85  கோடி ).சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் (இந்த நால்வருள் ) கடைசி படங்கள் அனைத்தும் வெற்றி (ரத்த சரித்திரம் வேறு வகை வேறு மொழி )சகல வித்தத்திலும் நடிப்பு (வாரணம் ஆயிரம் ),துடிப்பு (அயன் ),மசாலா (ஆதவன் ),மாஸ் (சிங்கம் ) என சகல பரிமாணத்திலும் விண்ணை தாண்டிய வளர்ச்சி அதன் உச்ச கட்டம் மாற்றான் படத்தில் இவரின் சம்பளம் தெலுங்கு உரிமையையும் சேர்த்து 25  கோடி .மற்ற நடிகர்களை விட 10  கோடி  தாண்டினார் .தல தளபதியை எல்லாம் ஓரங்கட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார் .இந்த நிலையில் இருக்கும் போது


விஜய் ?

விஜய் பொருத்தமற்ற  கதை தேர்வு   ,புது இயக்குனர்கள் ,அதிக பில்ட் அப் என தன்னை தானே அழித்துக் கொண்டார் .ஆதி,குருவி,வில்லு ,வேட்டை காரன்(வசூலில் வெற்றி   ) ,சுறா என தோல்வியை கொடுத்தார் .இது சினிமா ரசிகர்களிடையே புதிய புரட்சியை ஏற்படுத்தியது .இந்த படங்களால் சலிப்படைந்த விஜய்க்கு எதிரான கூட்டம் ஒன்று புதிதாய் முளைத்தது .இவர்களின் அளவு விஜய் ரசிகர்களை விட  அதிகமாகும்  அளவுக்கு  முன்னேறியுள்ளது  .சினி உலகில் அதிக கேலிக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளானார் .அத்துடன் விஜயின் அரசியல் பிரவேசத்துக்கான அறை கூவலும் பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியது .விஜயின் எதிரியாய் திரும்பியவர்கள் அனைவரிலும் பெரும்பாலானவர்களின் தெரிவு சூர்யா ஆகவே இருந்தது .அஜித் நடிக்கும் படங்களின் அளவு ஒப்பீட்டு ரீதியில் குறைவாயும் அதிலும் பல தோல்வியாய் அமைந்தது .(அசல்,ஏகன்,ஆழ்வார் ) விக்ரமின்   நிலை இன்னும் மோசமாக இருந்தது .பீமா,கந்தசாமி,ராவணன் என நடித்த படங்களே சொற்பம் அதிலும் அனைத்துமே தோல்வி(?).ஆனால் சூர்யாவோ வாரணம் ஆயிரம்,அயன்,ஆதவன்,சிங்கம் என டாப் கியரில் சென்றார் .போட்டிக்கு யாரும் இல்லை .தனி சாம்ராஜ்ஜியம்   நடத்தினார் ரசிகர்கள்  ஆதரவு பெருகியது ..பெண்கள்  அவரின் சிக்ஸ் பக் க்கு மயங்கினார்கள் .கடின உழைப்பு ,சரியான கதை தேர்வு ,பெரிய இயக்குனர் ,சிறந்த இசை அமைப்பாளர் என எல்லாமே பெஸ்ட் ஆக இருந்தது .

எனவே ரஜினி கமலுக்கு பின் அஜித் விஜய் என்ற நாமமே ஓங்கி ஒலித்தது .எனினும் சூர்யா அவற்றை வெற்றிகரமாக உடைத்து முன்னணிக்கு வந்தார் .

விஜய் சூர்யாவுக்கு நிகர்மாறாக செய்து தோல்வியில் துவண்டு பட்டுணர்ந்து தனது பழைய பாணியில் காவலனை கொண்டு வந்தார் .இன்று வரை விஜயிடம் நான் எதிர்பாத்து இராத ஒன்று முக்கிய மைல் கல் படமான 50 வது படமான சுறாவை என்னென்று தேர்வு செய்தார் .எப்படி அந்த கதையை நம்பி படம் நடித்தார் என்பதுதான் .சரி அதை விடுவோம்  காவலன் நீண்ட நாட்களின் பின் வெற்றியை தந்தது .எனினும் படத்தை வெளியிடுவதற்காக பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல .கடைசியில் மானப் பிரச்சினையாய் போய் விட தனது சொந்த பணத்தில் செலவு செய்து சொன்ன படி பொங்கலுக்கு கொண்டு வந்தார் .அரசியல் எதிர்ப்புக்களின் மத்தியிலும் படம் வெற்றி பெற்றது .எனினும் கார்த்தி யின் சிறுத்தையுடன் போட்டி போட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது .அக்சன்  மசாலாவான   சிறுத்தையுடன் காதல் படமான காவலன் கஷ்டப் பட வேண்டி வந்தது .எனினும் விஜய் ரசிகர்களை பெரிதளவில் கவரா விட்டாலும் அவர்கள் சச்சின்,வசீகரா வில் செய்ததை போல படத்தை தவிர்க்க வில்லை .பொது மக்கள் மத்தியில் சரிந்திருந்த இமேஜ் ஓரளவு சரியானது .இணையங்கள் ,பத்திரிகைகளும் வரவேற்பு அளித்தன. 

மீண்டும் வேலாயுதம் 
காவலன்   வென்று விட்டது.அதற்கு பின் கதை ,இயக்குனர் தெரிவில் நிதானம் காட்டி மிகப் பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்..ஆனால் அதற்கு முன் ஒப்பந்தமான வேலாயுதம் .படம் தெலுங்கு ஆசாத் ரீமேக் என்றவுடன் படத்தின் கதை வெளியாகி விட்டது .படத்தின் கதையை அடுத்து மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான் .பழைய படங்களின் நிலைதான் இதற்கும் என விஜய் எதிரிகள் பிரச்சாரம் செய்தார்கள் .படத்தை விஜய் ரசிகர்கள்  தவிர ஒருவருமே எதிர்பார்க்க வில்லை .



இங்கேதான் தொடங்குது விஷயம் .ஏழாம் அறிவு படப் பிடிப்பு முடிந்தது .படத்தை தீபாவளிக்கு வெளியிட்டால்   நல்ல காசு பார்க்கலாம் .வேலாயுதம் வருதே .(யார் முதலில் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்கள் தெரிந்தவர்கள் ஆதாரத்துடன் சொல்லலாம் )அது வந்தால் என்ன இரண்டு மூணு நாளுக்கு நல்ல ஒபெநிங் இருக்கும் பிறகு படுத்துடும் .நம்ம கதையும் பலம் எல்லாம் பலம் கண்டிப்பா இதை அடிக்க முடியாது .இதை விட்டால்  விஜயை விட சூர்யா தான் டாப் என காட்ட சந்தர்ப்பம் இல்லை பிறகு நண்பன் ,முருகதாஸ் படம் கௌதம் படம் என எதிர்ப்பார்ப்பு கூடி விடும் .இதுதான் சரியான சந்தர்ப்பம் என உதயநியுடன் சேர்ந்து சூர்யா திட்டம் இட்டார் .
சிலர் இதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் சூர்யா விஜயின் பால்ய சிநேகிதன்  ஆச்சே சூர்யா விஜய்க்கு இப்படி செய்வாரா என்று கேட்பீர்கள் அவர்கள்  கண்டிப்பாக இந்த பதிவை படித்து விட்டு தொடருங்கள் .



இந்தப் பதிவெலே சொல்லாத விடயம் ஒன்று  வேறு ஒரு   பதிவில் சொல்லி இருக்கிறேன் தேவை கருதி மீண்டும் சொல்கிறேன் .திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டமடா ஜெயிக்கிறவன் தோப்பான்  தோக்கிறவன் ஜெயிப்பான் என்று ஒரு பஞ்ச் பேசியிருப்பார் விஜய் .ஆதவன் படத்தில் ''டமக்கு டமக்கு'' பாடலில் வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா என்று ஒரு வரி வரும் .பாடலில் வரி வந்ததுக்கு சூர்யாவா காரணம் என்று கேட்பவர்களுடன் நான் வாதாட தயாரில்லை .சூர்யாவுக்கு தெரியாமல் இந்த வரி சேர்க்கப் பட்டு இருக்க முடியாது .

இந்த முடிவை கண்டு பட விநியோகஸ்தர்கள்      திரையரங்கு உரிமையாளர்கள் குழம்பினார்கள் .எந்த படத்தை திரையிடுவது .ஒருவரின் படத்தை வெளியிட்டால் மற்றவரை பகைக்க வேண்டி வருமே என்று .இயன்ற வரை ஒரு பட வெளியீட்டை மாற்றுவதற்கு இரு படக் குழுவினரிடமும் ஆலோசித்தார்கள் .வேலாயுதத்தை ஒரு கிழமை முதல் வெளியிடுமாறு ஏழாம் அறிவு தரப்பால் சொல்லப் பட்டது .இல்லை பிந்தி வெளியிடுமாறு . இதிலே   ஒரு மிகவும் சுவாரசியமான  சம்பவம் நடைபெற்றதாக நான் அறிந்தேன் எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு    தெரியாது .அது என்னவெனில் .....

தொடரும்......... 

#####
அடுத்த  பதிவில் அந்த சுவாரசியமான விடயங்களுடன் வேலாயுதமா மங்காத்தா வா இல்லை ஏழாம் அறிவா டாப் என்பதற்கான விடையும் தொடரும்  .

கருப்பு எழுத்தில் உள்ளவற்றை வாசிக்கும் பொது தீபாவளிக்கு முந்தய மனநிலை உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் . 

**இந்த தொடரில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பற்றி உங்கள்   கருத்துக்களை தெரிவியுங்கள் .FACEBOOK மூலமாகவும் தெரிவிக்கலாம் . 
##################################################################################
கவனிக்க 


இந்த பதிவில் ரஜினி பற்றி குறிப்பிட்டிருந்த விடயங்களில் பல விமர்சனத்துக்கு    உள்ளாகியதாலும்  நான் எதோ நினைத்து எழுத கடைசியில் அது வேறு அர்த்தத்தில் வந்து விட்டது .வாசகனாக   படித்துப் பார்க்கும் போது அந்த பிழை தெரிந்தது  நான் கருப்  பொருளாக கொண்ட விடயத்துக்கு நேற்று பதில் கிடைத்ததாலும் அவற்றை பதிவில் இருந்து நீக்கி விடுகிறேன் .அந்த  வரிகளால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் . உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி .

Post Comment

Thursday, November 3, 2011

மங்காத்தா வா ? வேலாயுதமா? எது டாப்

அண்மைக்கால தமிழ் சினிமா சம்பந்தமான விடயங்களை என்னுடைய பார்வையில் அலசி ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் .பதிவு நீண்டு கொண்டிருக்கிறது .எனவே தொடர் பதிவாய் அமையும் .

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி,கமல் ,விஜய் ,அஜித் ,விக்ரம் ஆகியோரே இப்போது மார்கெட் உள்ள முன்னணி நடிகர்கள் .இவர்களின் படங்கள் வெளி வந்தாலே தமிழ் சினிமா பரபரப்புக்கு உள்ளாகும் .அது  யார் இயக்கம் ,யார் இசை ,எந்த வகை படம் என்பதையும் தாண்டியது .இவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளி வந்தால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் .ஏனெனில் யார்  முன்னணியில் உள்ள நடிகர் என்பதை இதை வைத்து தான் ரசிகர்கள் கணிப்பார்கள் .சில வருடங்களுக்கு முன்னர் வருஷம் ,பொங்கல் ,தீபாவளி என்றால் நிச்சயம் இவர்களின் படங்கள் போட்டிக்கு வெளி வந்து ரசிகர்களை குஷிப் படுத்தும் .அதிலும் தீபாவளி ரசிகர்களுக்கு செம விருந்தாக இருந்தது .விஜயின் திருமலை ,அஜித்தின் ஆஞ்சநேயா ,விக்ரம் சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் என ஆங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளி வந்தன .

அதற்கு பின்னர் ஒவ்வொரு பண்டிகையிலும் யாராவது இருவர்  சில வேளைகளில் மூவர் என மோதிக் கொண்டனர்.எனினும் கால ஓட்டத்தில் தமிழ் சினிமாவின் பாதை மாற்றமடைந்தது  நவீன தொழிநுட்ப உலகில்  ஒரு படம் முன்னரை போல் 250,200,150,கடைசியில் 100 நாட்களை தாண்டுவதே மிகவும் கடினமாக இருக்கிறது .படம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே இனைய தளத்தில் காணக் கூடியதாக உள்ளமை ,திருட்டு vcd  களின் ஆதிக்கம் என்பவற்றால் திரையரங்குகளில்    ஓடும் நாட்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தது .  எனவே தயாரிப்பாளர்கள் ,விநியோகஸ்தர்கள் புதிய உத்தியை கையாள தொடங்கியுள்ளனர் .அது என்னவெனில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்ட காசை எடுக்கும் நுட்பம் ஆகும் .இதிலே நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் அதிகளவில் இருக்கின்றன .இந்த பிரச்சினை காரணமாக் முன்னணி நடிகர்கள் இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியிட முடியாத நிலை தோன்றியது .திரையரங்குகளை பெறுவதில் சிக்கல். ஒரு படத்தினால் மற்ற படத்தின் வசூல் குறைவடையும் எனவே சீக்கிரம் பணத்தை எடுக்க முடியாது . இந்த பிரச்சினைகளால் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் நிகழ்வு தவிர்க்கப் பட்டு தடுக்கப் பட்டு வந்தது 



.2009 தீபாவளிக்கு ஆதவன் ,வேட்டைக்காரன் என்பன களமிறங்கிய போதும் படம் வெளியிட்ட உதயநிதி,கலாநிதி மாறன் ஆகியோருக்கு இடையேயான சமரச பேச்சின் பின்னர் வேட்டைக்காரன் தாமதித்து டிசம்பரில் வெளியானது .2010  இல் சுறாவையும்,சிங்கத்தையும் போட்டிக்கு களமிறக்கி யாருக்கு மவுசு அதிகம் என அறிய விரும்பியது சன் குழுமம் ஆனால் பாதிப்பு தனக்குத்தான் என்பதை அறிந்து பின் வாங்கியது.



 .  படங்களின் வெற்றிக்கு விநியோகச்தரின் விளம்பரம் முக்கியமான நிலை ஏற்படுத்தப் பட்டது .சன் டிவி நேரடியாக படங்களை விநியோகிக்க தொடங்கிய பின் இது மேலும் வலுவடைந்த்தது .உதயநிதி,தயாநிதி அழகிரி ஆகியோர் புது நிறுவனம் தொடக்கி போட்டிக்கு களமிறங்க ஆட்சியும் கைகொடுக்க இவர்களின் பிடிக்குள் தமிழ் சினியுலகம் வந்தது .எதிர்பார்ப்புக்கு உள்ளாகும் படங்களை இவர்கள் வாங்கி விடுவார்கள் .விற்க மறுக்கும் படங்களை ஓட விட மாட்டார்கள் .


சித்திரம் பேசுதடி என்ற படம் வெளியான கதை உங்களுக்கு தெரிந்து இருக்கும் .படம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி ஒரு வாரத்தின் பின்னர்தான் வாய் வழி பேச்சின்(WORD OF MOUTH )  படி பேசப் பட்டு பின்னர் பிய்த்துக் கொண்டு ஓடியது .ஆனால் இப்போது அந்த நிலை வருவது கடினம் .படம்    நல்லாய் இருக்கு என்ற கதை பரவ முன்னரே தியேட்டரை விட்டு தூக்கி எறியப் பட வரலாறு உண்டு .தென் மேற்கு பருவட்காற்று ,ஆரண்ய காண்டம் என்பன சிறந்த உதாரணங்கள் ஆகும் .மைனாவும் ,அங்காடித்தெரு வும் ஓடும் போது இவை ஓடாமல் போனமைக்கு காரணம் சிறந்த விளம்பரம் இன்மையே ஆகும்.
 இதன் உச்ச கட்டமாக அமைந்தது விஜயின் காவலன் வெளியீடுதான் .காவலன் வெளியீட்டுக்கு நடந்த கதை அனைவரும் அறிந்ததே .



சரி இப்போது ஆட்சி மாற்றம் நடந்த போதும் திரையுலகை அவர்கள் இழக்க வில்லை என்பதே உண்மை சிறிது காலம் அடங்கியிருந்த போதும் இப்போது மீண்டும் வீறு கொண்டு எழுந்து விட்டார்கள் 
.
இந்த வருடம் விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம் அனைவரும் மோதுகிறார்கள் 

சரி விசயத்துக்கு வருவோம் நான் மேலே சொன்னது போல முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்றாக வெளியாவது தடுக்கப் பட்டு வந்தது .எனினும் தெய்வதிருமகள்,மங்காத்தா,வேலாயுதம் ,ஏழாம் அறிவு என்பன ஒரே நேரத்தில்  முடிவடையும் தருவாயில் இருந்தன .ஒரே வருடத்தில் நான்கு பேரின் படங்களும் வெளி வருவதே சந்தர்ப்பம் இல்லாமல் இருந்த தருணத்தில் ஒரே காலப் பகுதியில் வெளியாக இருந்தமை பர பரப்பை ஏற்படுத்தியது . மங்காத்தா மே 01 உம ,வேலாயுதம் ஜூன் 22 ஐயும் குறிவைத்து எடுக்கப் பட்டவை .படப் பிடிப்பு தாமதமாக தெய்வ  திருமகள் முதலில் வெளியானது.

 பின் மங்காத்தா ,வேலாயுதம் ஒரே நேரத்தில் வெளியாகலாம் என்ற நிலை உருவானது .ஆனால் அண்மைக் காலமாக வலுப் பெற்று வரும் தல,தளபதி நட்பு காரணமாக அது தவிர்க்கப் பட்டு முதலே வெளியிட திட்டமிட்ட படம் என்பதால் மங்காத்தா வெளியானது .எனவே வேலாயுதம் தீபாவளிக்கு பிற் போடப் பட்டது .அதற்கு பின் நடந்தவைதான் சுவாரசியமான விடயங்கள் .


அடுத்த பதிவில் தொடரும் ....தலைப்புக்கான விடையும் 

##################################################################################
தல  தான்   தான் என அறியாத  தல 

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...