Friday, December 6, 2013

நெல்சன் மண்டேலா-ஒரு தொகுப்பு



குடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப்
படிக்கத் தெரியாதவர் - ஆயினும் மகனைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைத்தார். 1938ஆம் ஆண்டு அவரது உறவினர் ஜோன்கின்டாபா முயற்சியினால் மண்டேலா; முதலில் "கெல்ட் டவுன்’’ கல்லூரியிலும் -
பிறகு "போர்ட்ஹேர்’’ கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். அப்போதுதான் அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத் தொடங்கியது. அங்கே வெளிப்பட்ட இன வேற்றுமைக் கொடுமையை எதிர்த்து இளைஞர் மண்டேலா தலைமையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படவே; கல்லூரி நிர்வாகம் மண்டேலாவை வெளியேற்றியது. ஆம் - மண்டேலாவுக்கு அவர் நடத்திய உரிமைப் போரில் கிடைத்த முதல் தண்டனை அது! மன்னிப்பு கேட்டுக் கொண்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்று கூறப்பட்டது. அதை மானப் பிரச்சினை என்று கூறி மறுத்து விட்டார்
மண்டேலா. அப்போது மண்டேலா, "எங்களுக்கு சுதந்திர உரிமை இல்லையென்றால், நான் அடைபட்டுள்ள சிறைச்சாலையே திருப்தி அளிக்கக் கூடியது’’ என்று கூறிவிட்டார். அவர் நடத்திய போராட்டங்களின்
தொடர்ச்சியாக நீண்ட கால சிறை வாழ்க்கையைத்தான் அவர் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. சிறைக் கொடுமைகளைப் பற்றி, "சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு ஆளாக்கவில்லை. சிறைக்கு வெளியே என் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை
எண்ணித்தான் நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறேன்" என்று விவரித்திருக்கிறார்.

அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.

1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது.

1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.

மண்டேலாவின் இந்தத் தியாக வாழ்க்கை தென்னாப்பிரிக்க நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல; இந்தப் பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டு புத்துலகம் காணத் துடிக்கின்ற ஏறுநடை இளைஞர்களுக்கெல்லாம் இதய கீதமாகும்.

Conclusion of his three-hour defence speech at his 1964 trial for sabotage and treason:
ANC member Nelson Mandela pictured in 1952
"I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve.
"But if needs be, it is an ideal for which I am prepared to die."
அமெரிக்க பத்திரிகைகளின் தலைப்பு செய்தி 

On his time imprisoned on Robben Island (from Nelson Mandela's autobiography, The Long Walk to Freedom, 1994):



1994 இல் நெல்சன் மண்டேலோ வை ஜனாதிபதியாக்க வாக்களிப்பதற்காக  திரண்ட மக்கள் கூட்டம் .

தென் ஆப்ரிக்காவின் தந்தையாக அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளாக சிறைவாசத்தை விட்டு வெளியில் வந்த தருணம் அந்நாட்டு கருப்பின மக்களிடையே மிக உணர்ச்சி மிக்கதாக இருந்தது. அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக தென் ஆப்ரிக்க பென்ஸ் தொழிலாளர்கள் மண்டேலாவுக்கு கார் ஒன்றை பரிசளிக்க விரும்பினர்.   

மடிபா என்ற நெல்சன் மண்டேலாவின் செல்லப் பெயரில் இந்த காரை மடிபா மெர்க் என்று அழைத்தனர்.



டயானா வுடன் மண்டேலா 
கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ரோ வுடன் 


line break
On reconciliation (on acceptance of the 1993 Nobel Peace Prize, shared with then President FW de Klerk):

At the opening of the 2010 World Cup

1918 Born in the Eastern Capeline break 1943 Joined African National Congress
1956 Charged with high treason, but charges dropped after a four-year trial
1962 Arrested, convicted of incitement and leaving country without a passport, sentenced to five years in prison
1964 Charged with sabotage, sentenced to life
1990 Freed from prison
1993 Wins Nobel Peace Prize
1994 Elected first black president
1999 Steps down as leader
2001 Diagnosed with prostate cancer
2004 Retires from public life
2005 Announces his son has died of an HIV/Aids-related illness



(இவை பல்வேறு இணைய செய்திகளில் இருந்து தொகுக்கப் பட்டவை )

Post Comment

Thursday, December 5, 2013

படிப்பதற்கு நூறு புத்தகங்கள் -for good reading....

 7ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் பா.ராகவன் தொகுத்த இந்த சிறிய பட்டியல் 

ஒவ்வொருவரும் இப்புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும் என்கிற ஒரு குட்டி அறிமுகத்தோடு இப்பட்டியல் மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார் பாரா. இது டாப்டென் பட்டியலாக இல்லாமல் முன்னும்பின்னுமாக முக்கிய நூல்களை தொகுத்திருக்கிறார்.
உங்களுக்கும் பயன்படும் என்பதால் இங்கு பதிகிறேன் .
1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.

2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.

3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.

4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.

6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.

7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.

8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.

9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.

10. அரசூர்வம்சம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.

12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.

13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.

14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.

15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.

16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.

17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.

18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.

19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.

20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.

21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.

22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.

23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.

24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.

25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.

26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.

27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.

28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.

29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.

30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.

31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.

33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.

34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.

35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.

36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.

37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.

38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்

39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.

40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்

41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி

42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.

43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.

44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.

45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.

46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.

47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.

48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்

49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.

50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.

51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.

52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.

53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.

54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.

55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.

56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.

57. திலகரின் கீதைப் பேருரைகள்

58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.

59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.

60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.

61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.

62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.

63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.

64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.

65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.

66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.

67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.

68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.

69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.

70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.

71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.

72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.

73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்

74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.

75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.

76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.

77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.

78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.

80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.

81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.

82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.

83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.

84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.

85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.

86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.

87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.

88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.

89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.

90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்

91. Made in Japan – அகியோ மொரிடா

92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.

93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.

94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.

95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.

97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.

98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.

99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.

100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.

Post Comment

Friday, July 5, 2013

சிங்கம் -2 -ஒரு பய தப்ப முடியாது


சிங்கம் சூர்யாவின் படங்களிலேயே டாப் 5 படங்களில் ஒன்று ஹரியின் .விறுவிறுப்பான திரைக்கதையில் கர்ஜித்து வெற்றி நடை போட்டது .தன்னை வைத்து ஹிட் அடித்த இயக்குனர்களின் படங்களில் திரும்பவும் நடிப்பது சூர்யா பாலிசி .முருகதாஸ் கஜினி-ஏழாம் அறிவு கே.வி.ஆனந்த் அயன் மாற்றான் ஆனால் ஹரி மேற் கூறியவர்களை போல் அல்லாமல் சூர்யாவின் ஆஸ்தான இயக்குனர் வேல்,ஆறு,சிங்கம் என ஒரு படமும் தோல்வி அடைய வில்லை . இது போதும்சிங்கம் -2 மீதான எதிர்பார்ப்பு ஏவுகணை வேகத்தில் இருப்பதற்கு கண்டம் விட்டு கண்டம் பாய ஹரியால் ஏவப்பட்ட ஏவுகணை குறிக்கோளை அடைந்ததா இல்லையா எனும் ஆவல் காரணமாக வாழ்க்கையிலேயே முதல் தடவையாக vip ஷோ பார்க்க போயிருந்தேன் .

சிங்கம் -2 கதை என்று ஒன்றை உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை அதற்கான காரணத்தையும் சொல்லுவதாய் இல்லை .ஆன்லைன் என்னவெனில் நேரம் படத்தில் வருவது போல இரண்டு சப் வில்லன் ,ஒரு மெயின் வில்லன் சர்வதேச குற்றவாளிகளான இந்த வில்லன்களை இந்தியன் போலீஸ் எப்படி சாமர்த்தியமாக பிடிக்கிறார் என்பதுதான் .




ஹரி 

எனக்கு   படத்துக்கு போக முன்னரே பெரிய டௌவுட்டு அனுஷ்கா இருக்கும் போது ஹன்சிகா ஏன் படத்தில ? ,அது சரி போலீஸ் படம்தானே எதாவது வம்பில அனுஷ்கா சாக ஹன்சிகா ஹீரோயின் ஆவா என்று எந்த பாமர தமிழ்மகனும் ஊகிக்க கூடிய ட்விஸ்ட் வைக்க  திரைக்கதையில் எந்த ஓட்டைகளுமின்றி காட்சிகளை அமைத்து சாதனை படைக்கும்' ஹரி என்ன கேன பயலா ?
படத்தின் மிகப்பெரிய turning பாயிண்ட் ஆன ஹரி வைத்த ட்விஸ்ட் ஐ இங்கே சொன்னால் படத்தின் சுவாரசியம் குறைந்து விடும் என்பதால் தியேட்டரில் காண்க .

ஹரி படத்தின் வழமையான டாட்டா சுமோக்கள்,அரிவா,வெள்ளை வேஷ்டி சட்டை யை formality க்கு use பண்ணி இருந்தாலும்,இது இன்டர்நேஷனல் படம் என்பதால் ஏரோ பிளேன் கப்பல் ,போட் நவீன ரக கார் என அடி பின்னுகிறார் படம் ரெண்டே முக்கால் மணி நேர படமாக இருந்தாலும்,எந்த இடத்திலும் பார்வையாளர்களை தூங்க வைக்கமால் இருப்பதில் சூர்யாவுக்கு அடுத்த பங்கை படத்தின் செகண்ட் ஹீரோவான சிவப்பு நிற போலீஸ் ஜீப் செய்கிறது .









படத்தில் ஒரு இலங்கை வில்லனும் வருகிறார்.ஆம்,ஒரு சிங்கள வில்லனை அழைத்து சிங்கத்தை போட்டுத்தள்ளும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள் வில்லன் க்ரூப்.ஆனால் இறுதியில் தாங்களே அவனை போட்டுத்தள்ளி யிருந்தார்கள்.இந்த இடத்தில் ஹரியை பாராட் டியே தீர வேண்டும் முருகதாஸ் ஏழாம் அறிவு என்று ஒரு படத்தை எடுத்து விட்டு இதை பார்க்காதவன் தமிழனே இல்லை எனும் அளவுக்கு மீடியா முழுதும் விளம்பரம் செய்ய வேண்டி இருந்தது .ஆனால் ஹரியின் ஸ்வீட்  அண்ட் சிம்பிள்ஆன 3 நிமிட காட்சி மூலம் புலம் பெயர் இருக்கும் நாடுகளில் அமோக ஆதரவை பெறுகிறார் ஹரி .ஹன்சிகா தனது  காதலை சொல்லும் போது  சூர்யா மறுத்து இருக்கலாமே தான் வேறு ஒருவரை லவ் பண்ணுவதை     சொல்லி இருக்கலாமே ,ஹன்சிகாவை வைத்து இழுத்தடித்து இருக்கிறார்கள் என்று  பக்கத்தில் இருந்து படம் பார்த்த பன்னாடை சொல்லி இருந்தது .அந்த ஹன்சிகாவை பயன்படுத்திதான் சூர்யா வில்லன் கூட்டத்தை பிடிக்க போகிறார் என்ற ட்விஸ்ட் ஹரியால் மட்டுமே முடியுமான ஒன்று . 


சூர்யா 

ஹாரி தான் இப்படி என்றால்,இயக்குனரின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் குரல் கொடுத்திருக்கிறார் சூர்யா.சூர்யாவின் குரல் பிரமாதம்.தமிழ் சினிமா வரலாற்றிலேயே தியேட்டரில் படம் ஓடும் போது ஒரு பய தூங்க முடியாது என்ற மகத்தான சாதனையை சிங்கம் -2 படைத்து இருக்கிறது .எங்கேயாவது ஒரு பாடல் காட்சிக்கு தூங்குவோம் என முடிவெடுப்பவர் களையும் தனது இனிமையான குரல் வளத்தால் எழுப்பி விடுகிறார் சூர்யா .அதுவும் இனிமையான ஆங்கிலத்தில் வில்லனுடன் சூர்யா பேசும் காட்சிகளுக்கு உருகாதவர்கள் எவருமே இருக்க முடியாது
  



 என் பார்வையில் பிளஸ்  மைனஸ் 
சூர்யா போலீஸ் யூனி போம் க்கு  மாறும் காட்சி ,கல்யாண வீட்டில் இரவு வரும் வில்லன்களை  எதிர் கொள்ளும் காட்சி ,கிளைமாக்ஸ் இல் சிங்கம் முன்னால்  ஓட பின்னால்  இரண்டு ஜீப் உறுமி கொண்டு சிங்கத்தோடு ஓட வில்லன் பார்த்து மிரளும் காட்சி ,சந்தானத்தின் அநேக காட்சிகள்  அதிலும் எந்திரன் ஒபெநிங் ,விஸ்வரூபம் மாஸ் ,அனுஷ்காவுடன் சிங்கம் பாட்டு என  பல காட்சிகள் என்னை கவர்ந்து இருந்தன .
.விவேக் படத்தில் நடிக்காமலே விட்டு இருக்கலாம் ஏனெனில் அந்த கரெக்ட்டர் காமெடி பண்ற கரெட்டர் இல்ல .மெயின் ஆபிரிக்க வில்லன் மிரட்டி இருக்கிறார் ஆனாலும் ஹீரோவுக்கு போட்டியாக தானும் ஆங்கிலத்தில் கத்துவது சகிக்க முடிய வில்லை ,மேலதிகாரியாய் இருக்கும் விஜயகுமார் சூர்யா சொல்லுவதை எல்லாம் ஏன் எதுக்கு என்று யோசிக்காமல்  செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவரோ என்று தெரிகிறது .படம்  முழுவதும் சண்டை படம்   முடிந்து வரும் போது  மண்டைக்குள்ளே  டாட்டா சுமோ ஓடுவது போல் தோன்ற செய்வதில் வெற்றி பெற்று ஹரி   இருக்கிறார் ஹரி .மனோரமா வை  வேஸ்ட் பண்ணி   இருக்காங்க .

 dsp  பாடல்களில் படு சொதப்பல் அதுவும்  பாடல்கள்  தேவை   இல்லாமல்  விறு விறுப்பை  குறைக்கின்றது .பாடல் காட்சிகளில் சூர்யா விஜயை பின்பற்றி நடனம் ஆடுவது வரவேற்க தக்கது .அனுஷ்கா வுடனானா பாடல் காட்சிகளை கச்சிதமாக எடுத்த பட குழுவுக்கு வாழ்த்துக்கள் 
ஹன்சிகா அசிங்கமாக இருக்கிறார் பள்ளி சீருடையில் அனுஷ்கா சில இடங்களில் அழகாக தெரிகிறார் .அனுஷ்கா ஹன்சிகா இடையே நடக்கும் ஒரு உரையாடல் பார்க்க சகிக்க முடியாத வசனங்கள் மூலம் கேவலப் படுத்தி இருக்கிறார்கள் .



கொமேர்சியல் படங்களுக்கு ஹீரோ வுக்கு சமனான முக்கியத்துவம் வில்லனுக்கு கொடுப்பதிலேயே படம் interesting ஆகுகிறது .பாட்சா ,கில்லி  ஏன் சிங்கம்  கூட இதே போர்முலா தான் சிங்கத்தில் 'மயில் வாகனம் கோட்டடா 'என்று பிரகாஸ் ராஜ் கம்பீரமாய் கர்ஜிப்பது  எல்லாம் இங்கே மிஸ்ஸிங் .வில்லனின் body  language நல்லா இருந்தாலும் மற்றைய இரு வில்லன்களும் சுத்த போர் காமெடி பீஸ் போல இருக்கிறார்கள் .வில்லனை அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் அடைத்து விட்டு வில்லன் தப்பிப்பான் என்று தெரிஞ்சும் செல் திறப்பை கொண்டு செல்லும் காட்சி படு மொக்கை தனம் . சிங்கத்தின் கிளைமாக்ஸ் ஏ படு மொக்கை யா இருக்கும் .இது ஒரு படி மேலே .கடைசியில் கப்பல் காட்சி கலாய் படும்.ஆதவன் கிளைமாக்ஸ் மன்னிக்கப்படும் 

final டச் 
சூர்யா -சிறந்த நடிகர் புதுப்புது  தன்னை வருத்தி புதுப் புது கெ ட் அப் போட்டு மக்கள்  மனதை கவர்ந்தவர் விஜய் குருவி யாய் பறப்பதையும் சுறா வாய்  நீந்துவதையும் கண்டு பயந்த மக்களின் அனேகமாக பெண்களின் அபிமான நாயகனாக திகழ்ந்தவர் .இப்போது விஜய் தனது பாதையை மாற்றி இருக்கையில் சூர்யா அந்த இடத்தை கைப்பற்றி facebook  போராளிகளின் செல்லப் பிள்ளையாய் மாறி இருக்கிறார் .இனி இன்னும் confirm .


  பக் அப் காட்சியில் திரும்பவும் காட்டுறாங்க இந்த சீன் 


படத்தை  பற்றி சொல்லணும் னா போட்டிக்கு படங்கள் இல்லாததால் பாய்ந்து ஓடும் .மசாலா பட ரசிகனான எனக்கு படம் பிடிச்சு இருக்கு உங்களுக்கு ?

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...