Friday, October 5, 2012

மாற்றான்-ஒரு அலசல்



 தமிழ் சினிமாவில்  இந்த வருடத்தின்  மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ள படங்களில் ஒன்று .எதிர்வரும் 12 ம்  திகதி வெளிவர உள்ளது .இந்த மாற்றான் பற்றிய ஒரு அலசலே இந்த பதிவு .

மாற்றான் 
சூர்யா ,காஜல் , ,Sachin Khedekar(தெய்வ திருமகள் படத்தில் அமலாபாலின் தந்தை யாக நடித்தவர் )மற்றும் பலர் நடிப்பில் வெளிவர இருக்கும் மாற்றான் படத்தை கே.வி .ஆனந்த் இயக்குகிறார் .ஒளிப்பதிவு s .சௌந்தர் ராஜன் ,இசை ஹரிஸ் ஜெயராஜ் .கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இப்படத்தை a g s என்டேர்டைமென்ட்  விநியோகிக்கிறது .தெலுங்கிலும் brothers  என்ற பெயரில் இதே நாளில் வெளியாகும் இப்படம் சூர்யாவின் இதுவரை வெளிவந்த படங்களின் மிகப்பெரும் வெளியீடாக அமையவுள்ளது .

கே.வி .ஆனந்த் 

 புகைப்பட ஊடகவியாலராக  (photo journalist ) தனது வாழ்வை ஆரம்பித்த கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமிடம் உதவியாளாராய்  இணைந்ததன் மூலம் சினி உலகில் அடி எடுத்து வைத்தார் .தேவர்மகன் ,அமரன் போன்ற சில படங்களுக்கு  ஒளிப்பதிவு உதவி யாளராய் பணி யாற்றிய பின் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படத்திலேயே(மலையாளம் ) சிறந்த ஒளி ப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கி தனது திறமையை நிரூபித்தார் .சிவாஜி,முதல்வன்,நேருக்குநேர் போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராய்  பணியாற்றிய இவர்  இயக்கிய முதல் படம் கனா கண்டேன் .பெரிய வெற்றியை பெற வில்லை ஆயினும் விமர்சகர்களின் பாராட்டை பெற்றது .அடுத்து இயக்கிய படங்கள் அயன் ,கோ .மூன்று படங்களிலேயே முன்னணி இயக்குனர் ஆகி விட்டார் .இதிலிருந்து இவரின் படங்களின் மவுசை அறியலாம் .

படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுப்பதுதான் இவரின் ஸ்பெஷல் .மசாலா படமான அயன் வெளியான 2009 ம்  ஆண்டின் அதிக வசூலை பெற்ற படமாக திகழ்கிறது .சன் பிக்சர்சின் சளைக்காத விளம்பரமும் ஒரு காரணம் என்றாலும் இவர்தான் பிரதான காரணம் .தமிழ் சினிமாவில் தடுமாறி வந்த ஜீவாவை தனக்கென ஒரு இடத்தில் அமர்த்திய பெருமையும் இவருக்கே .சூர்யாவுடன் மீண்டும் கை கோர்த்து இருக்கும் இவரின் மாற்றானுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுவது தவிக்க முடியாததே

மாற்றான் படத்தின் கதை ஒட்டிப்பிறந்த இரட்டையரின் கதை .ஒருவன் நல்லவன் மற்றவன் கெட்டவன் .தமிழ் சினிமாவுக்கு புதுமையான கதை என சொல்ல முடியாத நிலையை அண்மையில் வெளிவந்த சாருலதா ஏற்படுத்தி விட்டது .எனினும் இரணது படமும் வெவ்வேறு திசையில் பயணிப்பதால் அலட்டிக் கொள்ள தேவை இல்லை .trailor பிரமிப்பு ஊட்டியிருந்தது .எனினும் அண்மைக்  காலங்களில் படங்களின் trailor ,first லுக் வந்தவுடனேயே இது இன்ன படத்தின் காபி என இணையத்தில் கலாய்ப்பது வாடிக்கை ஆகி விட்டது .சில உண்மையாய் இருந்தாலும் பல பொய்யான தகவல்களே .அந்த வகையில் இது stuck on you எனும் ஹாலிவுட் படத்தின்  தழுவல் என ஒரு கூட்டம் .எதிர்பார்க்கிறது எனினும் படம் அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடி  ஆக்கும் என்பதே எனது கணிப்பு .


சூர்யா 

சூர்யாவுக்கு ,விஜய் அஜித் அளவுக்கு ரசிகர்கள் கிடையாது .எனினும் இயக்குனர் தெரிவில் அவர்கள் காட்டிய அசமந்தமும் சூரியாவின் மிக சிறந்த இயக்குனர் தெரிவும் சில ஆண்டுகள் மக்கள் மனதில் அவரை முன்னணியில் வைத்து இருந்தது .இப்போது விஜய் ,அஜித் உம்  இதே வழியை பின்பற்ற ஆரம்பித்து உள்ளதால் முன்னணியை தக்க வைக்க முடியாமல் போய் விட்டது .சூர்யா கொஞ்ச காலம் தொடர் ஹிட் கொடுத்து வந்த போது  மக்கள் அவரின் படங்களை ரசித்தனர் ,எனினும் வழமையாய் இருந்த ரசிகர்கூட்டத்தை பெரியளவில் அதிகரிக்க முடிய வில்லை .அப்படி அதிகரித்த  கூட்டத்தில் பெரும்பாலனவர்கள் அயன் படம் மூலம்தான் என்பதை அடித்து கூற முடியும் .சூர்யாவை வசூல் நாயகர்களில் ஒருவராக மாற்றிய படமும் அயன் தான் .
 .விஜய் ,அஜித் இன் அண்மைக்கால வெற்றிகளும் ஏழாம் அறிவின் சறுக்கலும் சூர்யாவை சற்று பின் தள்ளி விட்டன .ஏழாம்  அறிவு சூர்யாவின் படங்களிலேயே அதி கூடிய வசூலை பெற்றிருந்தாலும் எதிர் மறை விமர்சனங்களும் மக்களின் கருத்துக்களும் உதயநிதியின் அதீத பில்ட் அப்பும் சூர்யாவின் மீது கரும் புள்ளி ஒன்றை ஏற்படுத்தி விட்டன .அத்துடன் பொது  உலகில் அண்மைக்காலமாக சூர்யாவின் போக்கும் வெறுக்கத் தூண்டும் விதமாக உள்ளது .இவை எல்லாவற்றுக்கும் ஒரே பதிலடி மாற்றான் வெற்றி தான் .சூர்யா மிக சிறந்த பதிலடியை கொடுப்பார் என நம்புகிறேன் .

ஹரிஸ்

ஹரிஸ் சூர்யா கூடணியை பற்றி விபரமாக ஏற்கனவே சொல்லி விட்டேன் ..எனவே ஹரிசின் அண்மைய நிலையை பார்ப்போம் .பாட்டுக்கள் பெரும்பாலானவை காபி  என பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஹரிசின் பாடல்கள் மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன .இந்த வருடத்தின் டாப் ஆல்பம் ஆக இவரின் நண்பன் திகழ்கிறது .ஓகே ஓகே யும் சோடை போக இல்லை .ஆனால் மாற்றான் அந்த ரேஞ்சுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .சூர்யாவுடன் ஆன எல்லா படங்களின்  பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் கடைசி இரு படங்களில் ஓரளவு சொதப்பி இருக்கிறார் ஹரிஸ் .சில வேலை நிறைய படங்கள் பண்ணிவிட்ட சலிப்போ என்னவோ .பாடல் வெளியாகி ஓரளவு காலம்ஆகி விட்டதால் படம் வரும் போது பாடல்கள் ஹிட் அடிக்க சந்தர்ப்பங்களும் உள்ளனஏனெனில் எல்லாம் அயன் தந்த எதிர்பார்ப்பு .அயனின் டைட்டில் சாங் மியூசிக் ஐ யாரும் மறந்து இருக்க மாட்டிர்கள் .

காஜல் 

தெலுங்கில் மகாதீரா ,பிசினஸ் மன் போன்ற படங்கள் மூலம் முன்னணி இடத்தை பெற்று விட்டாலும் தமிழில் இதுதான் இவருக்கு பெரிய படம் .பழனி  ,மோதி விளையாடு ,நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு படம் மட்டும் தான் வெற்றி பெற்று இருந்தது .எனவே தமிழில் மாற்றான் இவரை முன்னணி நடிகையாக மாற்றும் என நம்புவோம் .தொடர்ந்து துப்பாக்கியிலும் கலக்க இருப்பதால் தற்போது .எழுந்துள்ள சமந்தா அலையை அடக்க சந்தர்ப்பங்கள் உள்ளன .


கே.வி ஆனந்த் சூப்பர் கில்லாடி தந்து படங்களிலேயே தணந்து முன்னைய படங்களை கலாய்த்து காட்சிகள் அமைத்து இருப்பார் .மாற்றானிலும் கோ படத்தை கலாய்த்து ஒரு காட்சி trailor  இல் வெளியாகி இருந்தது .மாற்றானில் இரு சூர்யாவில் அகிலன் அஜித் fan விமலன் விஜய் fan ஆம் .



ஆமா ஒருவன் கெட்டவன் ஒருவன் நல்லவன் அப்போ யாரு நல்லவன் யாரு கெட்டவன்  சொல்லுங்க பார்ப்போம் .......ஹா ஹா

மாற்றான் வெற்றி பெற படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் 

Post Comment

Thursday, October 4, 2012

சிவாஜி -the legend







சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...



சத்ரபதி சிவாஜி வேடத்தில

் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!


மனைவியுடன் 

1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!

கவியரசு கண்ணதாசனுடன்  

வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!


தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!


ஜெமினி யுடன் 

தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!


சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
பாக்யராஜ் திருமணம் 

விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!

'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!


சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!

தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!






பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

- மானா பாஸ்கரன்
நன்றி -சினிமா விகடன் 



Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...