Friday, June 29, 2012

எந்திரனின் வசூலை முறியடித்த சகுனி

ஒரு படத்துக்கான ஒபெநிங் என்பது சில விசயங்களில் தங்கியுள்ளது .முக்கியமாக படத்துக்கான எதிர்பார்ப்பு .எதிர்பார்ப்பு எனும் போது முதலில் கவனிப்பது யார் படத்தை இயக்குவது .ஆ அந்த இயக்குனரா அப்படி என்றால் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதுவார்கள் .படத்தின் மைய கதை படம் வருவதற்கு முன்னரே ஓரளவு சொல்லி விடுவார்கள் அதுவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் .படத்தின் trailor இன்னொரு முக்கிய காரணி .-2-2.45 மணி நேர படத்தின் சாரம்சத்தை 2 நிமிடத்தில் காட்டுவார்கள் .நிச்சயமாக படத்தின் maximam நல்ல சீன் களைத் தொகுப்பதால் பெரும்பாலும் அனைத்து படங்களின் trailor உம நன்றாக இருப்பது போல தோன்றும் .அதுவும் ரசிகர்களை கவரும் திட்டம் தான் .இவற்றை விட இசை,பாடல்கள்,காமெடி ,ஹீரோயின் என்பனவும் ஒபெநிங் ஐ தீர்மானிக்கின்றன .இவற்றை எல்லாம் தாண்டிய முக்கிய காரணி யார் ஹீரோ .படத்தை பற்றி எந்தவித அலட்டலும் இல்லாமல் இது இவரின் படமா கட்டாயம் first ஷோ போக வேண்டும் என்று முடிவு எடுப்பார்கள் ரசிகர்கள் .சில வருடங்களுக்கு முன்னர் இது மட்டுமே ஒபெநிங் ஐ தீர்மானிக்கின்ற காரணியாக இருந்தது .ஆனால் இப்போது ரசிகர்கள் புத்தி கொஞ்சம் அதிகரித்ததால் இதற்கான மவுசு கொஞ்சம் குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் .எனினும் ஒரு படத்தின் ஒபெநிங் ஐ வைத்து அந்த பட ஹீரோவைகிங் ஒப் ஒபெநிங் என்று அழைக்கும் கலாச்சாரம் இன்னும் மாறவில்லை .
ரஜினிரசிகர்கள் கிங் ஒப் ஒபெநிங் ரஜினி என்பார்கள் கமல் ,விஜய்,அஜித் ரசிகர்களும் இவ்வாறே .கொஞ்ச காலத்துக்கு முன்னாடிதான் இணைந்தாரு சூர்யா .இப்ப இவரையும் ஒரு கூட்டம் கிங் ஒப் ஒபெநிங் என்று அழைக்குது .உண்மையில் யார் தான் கிங் ஒப் ஒபெநிங் இதை பற்றி ஆராய வரவில்லை ஒபெநிங் பற்றி சகல விடயங்களையும் அலசி அண்ணன் ஜீவதர்சன் ஒரு பதிவு எழுதி உள்ளார் விரும்பினால் அதை படியுங்கள் .
ஓப்பினிங்(Opening) .


சகுனி சாதனை 
வசூல் நிலைவரங்களை வெளிவிடும் ஊடகங்களில் உள்ளத்தில் நம்பகத் தன்மை வாய்ந்தது behindwoods .5 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு வாரமும் சென்னை boxoffice collection விபரத்தை வெளியிட்டு வருகிறார்கள் .அவர்களின் புள்ளிவிபரப் படி தான் அண்மையில் தமிழ் சினி உலகில் புது புரட்சி நடந்துள்ளது .எந்திரனின் ஒபெநிங் வசூலை சகுனி முறியடித்துள்ளது .


''
சிவாஜி வரும்வரை சந்திரமுகியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வரும்வரை சிவாஜியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியும் எந்திரனின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் நெருங்கவில்லை, ''


சில மாதங்களுக்கு முன்னர் ஜீவா அண்ணாஅலசி எழுதிய பதிவில் இடம்பெற்ற வரிகள் இவை .எனவே தமிழ் சினிமாவின் மிகப் பெரும் தலை களால் இரண்டு வருடங்களாக முறியடிக்கப் படாமல் இருந்த சாதனையை நம்ம new south indian box office king முறியடித்து இருக்கிறார் என்கின்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் .


எந்திரன் ,சகுனி 3 நாள் வசூலை பார்த்தால் 246 காட்சிகள் குறைவாக ஓடி இருக்கு .அதைவிட எந்திரன் 99% அரங்கு நிரம்பிய காட்சிகள் .ஆனால் சகுநியோ 90% அரங்கு நிரம்பிய காட்சி .எப்படி சாத்தியம் என்று பார்த்தால் 2 வருட வித்தியாசம் என்பது மட்டும் தான் காரணம் .டிக்கெட் விலை அதிகரிப்பு .இங்கு என்னுடைய வியப்பு என்னவெனில் சகுனி வரும்வரை மற்றைய படங்களால் எவ்வாறு எவ்வாறு முறியடிக்காமல் போனது .சரி அண்மைய காலங்களில் வெளிவந்த பெரிய படங்களை பார்ப்போம் .

சகுனி

No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 648
Average Theatre Occupancy over this weekend : 90 %
Collection over this weekend in Chennai: Rs. 22,719,252

Verdict: Good Opening

okok
ஏப்ரல் 13-15
No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 522 
Average Theatre Occupancy over this weekend : 90 %
Collection over this weekend in Chennai: Rs. 1,73,32,944 


3
No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 549 
Average Theatre Occupancy over this weekend : 90 % 

Collection over this weekend in Chennai: Rs. 13,137,309 -

நண்பன் 
No. Days Completed: 4
No. Shows in Chennai over this weekend576
Average Theatre Occupancy over this weekend: 95%
Collection over this weekend in Chennai: Rs. 13,768,806

ராஜபாட்டை -0.96c -3 நாட்கள்


ஒஸ்தி 
No. Days Completed4
No. Shows in Chennai over this weekend612
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 1,33,22,304
Verdict: Good Opening


வேலாயுதம் 
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend492
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,701,270
Total collections in Chennai: Rs. 1.95 Crore

ஏழாம் அறிவு -
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend594
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 13,217,553
Total collections in Chennai: Rs. 2.20 Crore2.20c  -5 நாட்கள்


மங்காத்தா
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend774
Average Theatre Occupancy over this weekend: 95%
Collection over this weekend in Chennai: Rs. 1,79,35,278



இவற்றில் மங்காத்தா அதிகப்படியாக 774 காட்சிகள்  காண்பிக்கப்பட்டு 95% அரங்கு நிறைந்த காட்சிகளோடு 1.8 கோடியை 5 நாட்களில் பெற சகுனியோ 126 காட்சிகள் குறைவாக காண்பிக்கப் பட்டும் 3 நாட்களில் 2.2 கோடியை அள்ளிஇருக்கிறது .இரு படங்களும் அண்ணளவாக ஒரு வருட இடைவெளியில் வந்தவை என்பதை தவிர இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேறு காரணம் தெரிய வில்லை .
இங்கு பொதுவாக தெரிவது என்னவெனில் அதிக ஒபெநிங் பெற வேண்டும் என்றால் அதிக தியேட்டர் கிடைக்க வேண்டும் அதற்கு சோலோ வாக படம் ரிலீஸ் பண்ண வேண்டும் .அது தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கையிலேயே தங்கி இருக்கிறது 
ஏழாம் அறிவு ,வேலாயுதம் ஒரே நேரத்தில் வெளிவந்தமையால் காட்சிகள் 600 ஐ தாண்ட முடியவில்லை எனவே எந்திரன் வசூல் உடைப்பது கடினமாகி விட்டது .நண்பனும் வேட்டை படத்துடன் வந்ததால் 576 காட்சிகளே திரையிட முடிந்ததால் இயல வில்லை .ஆனால் மங்காத்தா ,ஒஸ்தி ,3,okok  தனித்து சோலோ வாக வெளிவந்தவை .இவற்றில் மங்காத்தா தவிர ஏனையவை சகுனியை விட குறைவான அளவில் வெளியிடப் பட்டவை .
ஆக மங்காத்தா படத்துக்கு சந்தர்ப்பம் இருந்தும் தவறியுள்ளது .ஆனால் மங்காத்தா வுடன் ஒப்பிடும் போது சகுனி அதிக ஒபெநிங் ஐ பெற்றமைக்கான காரணம் டிக்கெட் விலை அதிகரிப்பாக மட்டுமே இருக்க முடியும் .

3,okok  ஆகியவை 15 நாள் இடைவெளியில் வந்தவை .27 காட்சிகள் குறைவு என்ற போதும் 42 லட்சங்களை okok  அதிகம் பெற்றமைக்கான காரணத்தை (occupancy same  90%) யாரவது சினிமா வல்லுனர்களிடம் எதிர்பார்க்கிறேன் .ஏனெனில் 15 நாட்களில் டிக்கெட் கட்டணம் இவ்வளவு வித்தியாசப்படுமா ?
ஆனால் okok  பெற்ற வசூலுடன் ஒப்பிடும் பொது சகுனியின் வசூல் ஏற்றுக் கொள்ளக் கூடியதே .
இந்த முடிவுகளில் இருந்து நாம் உய்த்தறிவது என்னவெனில்அடுத்து வெளிவர இருக்கும் பெரிய படமான பில்லா-2 சோலோ ஆக ரிலீஸ் ஆவதால் கண்டிப்பாக 650 ஐ விட அதிக காட்சிகள் காண்பிக்கப்படும் .occupancy உம 90% ஐ விட குறைய வாய்ப்பில்லை என்பதால் கண்டிப்பாக சகுனியை விட கூடுதல் ஒபெநிங் வசூல் வர வேண்டும் .

நம்பகத்தன்மையில் சந்தேகம் 
behindwoods  பல வருடங்களாக அனைத்து சினிமா ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ள பட்ட விபரங்களை தந்து வந்தது .ஆனால் அண்மைக் காலத்தில் சந்தேகங்கள் வலுப் பெற்று வருகின்றன .சென்னையை பொறுத்த வரை எந்திரன் அதிகப் படியாக 17 கோடிகள் வசூலித்தது .தசாவதாரம்,ஏழாம் அறிவு என்பன 9 கோடி தாண்டிய படங்கள் .மங்காத்தா ,வேலாயுதம் 8 கோடி தாண்டியவை . இப்படி இருக்கும் போது அண்மையில் வெளிவந்த ஓகே ஓகே 16 கோடிகளை சென்னையில் வசூல் செய்தது என்பது யாராலுமே ஏற்றுக் கொள்ள முடியாத கணக்கு .படம் வெற்றிதான் அதில் மறுப்பு இல்லை .ஆனால் 16 கோடி என்றால் படம் சென்னையில் மட்டும் விண்ணை தாண்டி ஓடியதா ஏனெனில் சென்னையின் வசூலை வைத்து முழு வசூலையும் கணிக்க முடியாது எனினும் ஓரளவுக்கு படத்தின் வசூல் நிலைவரங்களை ஊகிக்கலாம் .சென்னையில் எந்திரனின்வசூலை நெருங்கிய okok மொத்த வசூல் சாதாரண வெற்றி படத்தின்வசூலே .
மேலே உள்ள விபரங்களில் ஏழாம்அறிவு ,வேலாயுதம் படங்களின் விபரங்களில் மட்டும் வித்தியாசமாக Total collections in Chennai  என்று புதிய கணக்கு காட்டி .இருக்கிறார்கள் அதுவும் விளங்க வில்லை .


எல்லாவற்றுக்கும் மேலாக  வெளியான சகுனி வசூலில் குளறுபடி நடந்து இருக்கிறது .வசூல் இருபது லட்சத்தால் கூடி இருக்கிறது .
.

Rajinikanth starrer Endhiran has made it to the all time highest grossers list of India. Endhiran has taken the second spot in the list with a massive Rs 200 crores at the box office. Aamir Khan’s 3 Idiots leads the list with Rs 202 crores.
அண்மையில் வெளியான செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாக 350 கோடி கடந்த வசூல் என அறிவிக்கப் பட்டு அனைவராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட எந்திரனின் வசூல் 200 கோடி என புதிதாக கதை விடுகிறது .3 idiots 202 கோடி வசூலுடன் இந்தியாவின் முதல் இடத்தில் உள்ளதாக அந்த செய்தி கூறுகிறது .எது உண்மை எது பொய் என அறிய முடியாமல் ரசிகர்களை குழப்புகிறார்கள் .

எது எப்படியோ இதை விட நடுநிலையாக boxoffice விபரங்களை தர ஒருவரும் இல்லாத நிலையில் தொடர்ந்து இவர்களின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதை விட வேறு வழியில்லை

முக்கிய குறிப்பு
மேலே தரப்பட்டவை அனைத்தும்சென்னைவசூல் மட்டுமேஒபெநிங் வசூலுக்கும் படத்தின் வெற்றிக்கோ மொத்த வசூலுக்கோ எந்தவித  சம்பந்தமும்இல்லை .

Post Comment

Thursday, June 28, 2012

விஜய் ஸ்பெஷல்

ஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங்! ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்ஸ்...

* முதல் நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த 'செந்தூரப்பாண்டி', விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை மிகவும் பெருந்தன்மையோடு இப்பவும் ஒப்புக்கொள்வார் விஜய்!








* பின்னணிப் பாடகராக 'தேவா' படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் 'சச்சின்' வரை 23 பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் ஏனோ  பாடுவதைத் தவிர்த்து வந்தவர், தற்போது 'துப்பாக்கி' படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.




* விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்குவரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். இந்த காஸ்ட்யூம் டிசைன் சினிமா வரைக்கும் போகிற வாய்ப்பு இருக்கிறது!

* திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வார் விஜய். அன்றைக்கு மாணவர்களோடு உட்கார்ந்து கலகலப்பாக உரையாடும் விஜய்யை நீங்கள் இதற்கு முன் கண்டிருக்க மாட்டீர்கள்!

* ஜூன் 22 பிறந்த நாளன்று எங்கே இருந்தாலும் ஓடி வந்து தாயின் அருகில் இருக்கவே விரும்புவார். வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பிவந்து அன்று முழுவதும் அம்மா பக்கமே இருக்கிற அம்மா பிள்ளை விஜய்!

* எவ்வளவு வேலை, ஷூட்டிங் முடிந்து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்குவார். அதிசயிக்கும்படியான பெருவாரியான டிவிடி கலெக்ஷன் வைத்திருக்கிற பெருமை அவருக்கு உண்டு!



* நான்-வெஜ் உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. அதுவும் அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை!

* விஜய்க்கு நகைகளின் மீது அவ்வளவாக ஆசை கிடையாது.

* ஹிந்தியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந்திப் படங்களுக்கு முதல் நாள்... முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்!



* ஜாலி மூடில் இருந்தால் மனைவி சங்கீதாவை 'ஹாய் கீஸ்' எனக் கூப்பிடுவார். எப்பவாவது கொஞ்சம் கோபமாக இருந்தால் 'வாங்க போங்க'தான்!



* வருஷத்துக்கு ஒரு தடவையாவது மனைவி, குழந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு. சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்சநாள் இருந்த பிறகு, பயணம் அதற்கடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடையும். எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பையன் சஞ்சய்தான்! 

* தி.நகரில் சூர்யாவின் அடுத்த வீட்டுக்காரராக இருக்கிற டைரக்டர் பாரதிராஜா, கொட்டிவாக்கத்தில் விஜய்க்குப் பக்கத்துவீட்டுக்காரராக இருக்கிறார்!

* விளையாடுவதற்கு மிகவும் பிரியப்படுவார். கொட்டிவாக்கம் வீட்டில் இப்போது விளையாடுவது டென்னிஸ். இப்ப இவருக்கு விடாப்பிடியாக ஜோடி கட்டுவது அவரது மகன் சஞ்சய்தான்!

* சஞ்சய்யின் ஒவ்வொரு வயது கூடும்போதும் அவனது நடவடிக்கைகளை வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். 20 வயது ஆனதும் அவனது பிறந்த நாளுக்கு விஜய் அளிக்கப்போகிற பெரிய பரிசு அதுதான்!


* அப்பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல, பேசிக் காட்டியது 'அண்ணாமலை' பட வசனம்தான். அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார்!

* நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித்தானாம்!

* நெருக்கமான கல்லூரி நண்பர்களை அழைப்பது 'மச்சி'. மற்றவர்களை விஜய் அழைப்பது 'என்னங்கண்ணா!'

* கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய். நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தோடு வந்தால், அழகிய தோசை வார்த்துக் கொடுப்பது இந்த அழகிய தமிழ் மகன்தான். அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்குமாம்!

* எப்போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்!

* வீட்டின் வராந்தாவில் காத்திருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு. 


* அம்மா ஷோபா சந்திரசேகர் இசை கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்துவார். அம்மாவின் கச்சேரிகளுக்கு முதல் ஆளாக ஆஜர் ஆவார் எப்போதும்!

* மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் அப்பாவின் நடிப்பில் ஆர்வமாக இருந்தாலும் படிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். நாலு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் விளையாடுகிறாள் சாஷா!

* எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிற மொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய். தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார்! சமீபத்தில் பிரபுதேவாவின் விருப்பத்திற்காக 'ரவுடி ரத்தோர்' படத்தில் அக்ஷய் கன்னாவுடன் ஒரு குத்தாட்டம் போட்டார்.



* விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. உலக அழகி ப்ரியங்கா சோப்ரா அறிமுகமானது விஜய்யுடன் ஜோடி சேர்ந்த  'தமிழன்' படத்தில் தான். 

* ஜாலியாக ரிக்கார்டிங்கில் உட்கார ஆசைப்படுவார் விஜய். எப்பவும் அவரது சமீபத்திய பாடல்களின் முணுமுணுப்போடுதான் காணப்படுவார் விஜய்!

* வெளிநாடு படப்பிடிப்பு செல்லும் போதும் சரி, வரும் போதும் சரி முதலில் அம்மாவிற்கு ATTENDANCE கொடுத்து விட்டு தான் தனது கொட்டிவாக்கம் வீட்டிற்கு செல்கிறார்.



* ஒவ்வொரு படம் முடியும் போதும் அதில் பங்குபெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு கொடுத்து மகிழ்வது விஜய் வழக்கம்.


தகவல் -சினிமா விகடன் 

Post Comment

Tuesday, June 12, 2012

பில்லா 2 -ஒரு அலசல்

பில்லா 2 இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்களில் ஒன்று .இரு மாதங்களாக இழுத்தடித்து எதிர்வரும் 22 ம் திகதி வெளிவர உள்ளது (அதுவும் இன்னும் நிச்சயம் இல்லை).பில்லா 2 இன் வெளியீட்டை எதிர்பார்த்து இரு வாரம் கழித்து தமது படத்தை வெளியிட காத்திருந்த சகுனி படக்குழுவினர் கடைசியில் எதிர்வரும் 22 படம் வெளிவரும் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர் .அப்போ தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து ரெடி .சரி இரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதை விநியோகஸ்தர்கள் விரும்பாவிடினும் சூழ்நிலைகள் இடம் கொடுத்தால் மட்டுமே போட்டியை தவிர்க்க முடியும் .இந்நிலையில் வெட்டியாய் இருக்கும் நான் அடுத்து என்ன பதிவு எழுதுவது என திணறிக் கொண்டிருந்த போது ஏன் இந்த இரண்டு படங்களையும் அலசி ஆராய விழைந்ததன் விளைவுதான் இது .

பில்லா -2


அஜித்குமாரின் 51 வது படம் பில்லா 2.அவரின் 50 இல் சிறந்த ஐந்தில் ஒன்று  பில்லா என்ற ஒரு காரணமே காணும் இந்த படத்தின் உச்ச கட்ட எதிர்பார்ப்புக்கு .அதைவிட 50 இல் சிறந்த இன்னொன்று தான் அவரின் 50 மங்காத்தா .கடந்த வருடத்தின் சிறந்த படமாக திகழ்கிறது (?).ஆகவே அதைவிட எதிர்பார்ப்பு எகிறுகிறது .பில்லாவின் முன் அத்தியாயமாய் உருவாகும் பில்லா 2 ஒரு சாதாரணமான இளைஞன் எவ்வாறு சர்வதேச டான் ஆக மாறினான் என்பதே மைய கதை .பில்லாவை இயக்கிய விஷ்ணுவர்த்தனே முதலில்இயக்குவதாய் இருந்து பின்னர் இயக்குனர் சக்ரி டோலேடி இடம் கைமாறியுள்ளது .இவர் தமிழில் ஏற்கனவே உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கியிருந்தாலும் அதிலே கமலின் பங்கு அதிகம் இருந்ததால் அவரின் திறமையை முழுமையாக அறிய முடியாது .தெலுங்கில் ஒரு படத்தை இயக்கியிருந்தாலும் தமிழில் தன்னை நிரூபிக்க இதுதான் சந்தர்ப்பம் .இவரில் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்கள் கூட ஒரு நிமிட டீசெர் பார்த்த பின் இவரில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் .டீசெர் பலத்த வரவேற்பை பெற்றமை அனைவரும் அறிந்ததே .

அஜித் மங்காத்தா வில் வயதான தோற்றத்தில் நடித்து இருந்தாலும் இது பில்லாவை விட இளமையாக இருக்க வேண்டும் என்பதால் கடுமையாக மினக்கெட்டு ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார் .எனினும் பில்லாவை விட இளமையான டேவிட் பில்லா வாக தன்னை காண்பிப்பது கஷ்டம் தான் .எனினும் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை .


பார்வதி ஓம குட்டன் ,ப்ருணா ,வித்யுத் ஜம்பால் ஆகியோர் அறிமுகமாகின்றனர் .ஜம்பால் துப்பாக்கி படத்தின் வில்லன் என்பது குறிப்பிடத் தக்கது .அத்துடன் பழைய டீம் பிரபு ,ரகுமான் .யுவன் அஜித் கூட்டணியில் 6 வது படம் .பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டன .இந்த கூட்டணியின் பாடல்கள் என்றும் சோடை போனது இல்லை .பில்லா ,மங்காத்தா வுடன் ஒப்பிடும் போது பாடல்கள் சுமார் ரகம்தான் எனக்கு .பில்லா ,மங்காத்தா தீம் மியூசிக் இல் அடித்து தூள் கிளப்பியிருப்பார் யுவன் .பில்லாவின் சாயல் என்பதாலோ என்னவோ அந்த அளவுக்கு தீம் என்னை ஈர்க்கவில்லை .உனக்குள் மிருகம் வரிகள் என்னை கவர்ந்து உள்ளன .


படத்தின் பலம் 
படம் வெளிவர முன்னர் உள்ள எனது கணிப்பின் படிபடத்தின் பலம் என்று பார்த்தால்
இந்த படத்தை பொறுத்தவரை
1-தல
2-தல
3-தல
ஏனெனில் இந்த படம் முழுக்க அஜித்தையே நம்பி இருக்கிறது .பில்லாவின் வெற்றியில் விஷ்ணுவர்த்தனின் பங்கு இருந்தது .எனினும் அஜித் மீதான நம்பிக்கை காரணமாக அவரையே கழற்றி விட்டுள்ளது தயாரிப்பு தரப்பு .அஜித்தின் படம் வெற்றியோ தோல்வியோ ஒபெநிங் செமை என்பது அசலிலேயே தெரிந்து இருக்கும் .எனவே படத்தை எந்தளவுக்கு அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார்களோ அந்த அளவுக்கு ஒபெநிங் வசூல் அள்ளலாம் .

4-படத்துக்கான பெரும் எதிர்பார்ப்பு
பில்லாவின் அபார வெற்றி காரணமாக அஜித் ரசிகர் மட்டுமின்றி அனைவரும் இப்படத்தை எதிர்பார்த்து உள்ளனர் .எனவே மங்காத்தா வை விட இப்படத்துக்கு ஒபெநிங் அதிகமாக இருக்கும்
5-அண்மைக்காலமாக பெரிய (இதன் விளக்கம் உங்களுக்கு தெரியும் தானே )நடிகரின் படங்கள் எதுவுமே வெளியாக வில்லை .இந்த வருட தொடக்கத்தில் வெளியான நண்பன் தான் பெரிய படம் .எனவே அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் இப்படம் பார்க்க ஆவலுடன் உள்ளனர் .


படத்தின் பலவீனம் 
படத்தின் பலவீனம் என்று பார்த்தால் மேலே கூறப்பட்ட சில விடயங்களே பலவீனமாகவும் மாறும் .எப்படி எனில்
அதிக எதிர்பார்ப்பு
படத்தை பார்க்கும் ரசிகர்கள் பில்லா வுடன் தான் ஒப்பிடுவார்கள் படம் சற்று பிசகினாலும் என்னடா இது பில்லா அளவுக்கு இல்லை என்று அஜித் ரசிகர்களே புலம்புவார்கள் என்றால் மற்றவர்களை சொல்லவும் வேண்டுமா .இதையே சாக்காக கொண்டு பெரும் பிரளயமே நடத்துவார்கள் .ஏழாம் அறிவு அடி வாங்க முக்கிய காரணம் இதுதான் .அதைவிட கடைசி யாய் வெளிவந்த மங்காத்தா வின் வெற்றியோடும் ஒப்பிடுவார்கள் .
தல தொடர்ந்து ஒரே மாதிரி கரக்டர் இல்படங்களில் (பில்லா ,அசல் ,மங்காத்தா)
நடப்பதால் சாரி நடிப்பதால் கோட் சூட் கூலிங் கிளாஸ் என அவரின் ரசிகர்களுக்கே ஒருவித சலிப்பை உண்டு பண்ணலாம் .

சென்னை யில் வசூலில் எந்திரன் தவிர மற்ற படங்கள் பத்து கோடியை தாண்ட முடியாமல் இருக்க அண்மையில் வந்த ஓகே ஓகே 16 கோடியை தாண்டி இருக்கிறது .எனவே இனிவரும் படங்கள் அதை தாண்டுமா என்பதை பில்லா 2 இன் முடிவில் இருந்து அறியலாம் .
################################################################################


சகுனி அடுத்த பதிவில் 
ஆமா யாரு மாமா ?

Post Comment

Thursday, June 7, 2012

VIJAY AWARDS 2012 -ஒரு அலசல்


விஜய் டிவி யினால் வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் vijay awards இந்த வருடம்  எதிர்வரும் 16 ம் திகதி  நடைபெற உள்ளது .வழமை போல ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் favourite awards வழங்கப்பட உள்ளது . இந்த பட்டியலில் உள்ள தெரிவுகளை பார்த்து நீங்கள் நகைக்க தேவை இல்லை .இங்கு தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தமிழ் சினிமாவின் அதிக ரசிகர் பட்டாளத்தை தம்மகத்தே கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களை பிணைந்தே உள்ளன .இதன் முக்கிய நோக்கம் சிறந்த படைப்புக்களை தெரிவு செய்யும் போது பிரபல நடிகர்கள் இடம்பெறாமையால் நிகழ்ச்சி வரவேற்பை பெறாது .எனவே யாரவது ஒரு பிரபல நடிகரை நிகழ்ச்சிக்கு வரவழைப்பதே இந்த FAVOURITE AWARDS வழங்கப்படுவதன் நோக்கம் .
சரி இம்முறை பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை பார்ப்போம் .

 FAVOURITE HERO 
அஜித்   -மங்காத்தா 
தனுஷ் -  ஆடுகளம் 
சூர்யா -ஏழாம் அறிவு 
விஜய்- வேலாயுதம் 
விக்ரம் -தெய்வ திருமகள் 
 
2010 இல் வேட்டைக்காரன் படத்துக்காக விஜய் பெற்றார் ,2011 இல்  ரஜினிகாந்த்  எந்திரன் படத்துக்காக பெற்றார் .இந்த வருடம் அஜீத் ,விஜய்   இருவரில்  ஒருவருக்கு  தான் வாய்ப்பு அதிகம் .2010 இல் அசல் ,வேட்டைக்காரன் படங்களுக்காக இருவரும் மோதிய போதும் இரு படங்களை விட அயன் நல்ல படமாக இருந்தாலும் ரசிகர்  ஆதரவு காரணமாக விஜய் வெற்றி பெற்றார் .2011 இல் தலைவர் படம் காரணமாக இவர்களால் ஜொலிக்க முடிய வில்லை .இந்த வருடம் மங்காத்தா படம் வேலாயுதம் ஏழாம் அறிவை விட அநேகரால் ரசிக்கப் பட்டது .எனினும் விஜயின் ரசிகர் பட்டாளத்தை  உடைப்பாரா அஜித் .ஏனெனில் இது இணையத்தில் மட்டும் நடைபெறும் வாக்களிப்பு இல்லை.தமிழ்நாடு முழுவதும் சேகரிக்கப் படும் ஓட்டு .

favourite heroine 
அசின் -காவலன் 
அனுஷ்கா -தெய்வ திருமகள் 
ஹன்சிகா  -எங்கேயும் காதல் 
டாப்சி -ஆடுகளம் 
த்ரிஷா -மங்காத்தா 
 இந்த  பிரிவில் விஜய் ரசிகர் அசினுக்கும் அஜித் ரசிகர் திரிசாவுக்கும் வாக்களிக்க ஏனையோரின்  தெரிவு யாராக இருக்கிறதோ அதன் அடிப்படையில் அசின் ,த்ரிஷா இருவரில் ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு உண்டு 

favourite movie 


மங்காத்தா 
வேலாயுதம் 
ஏழாம் அறிவு 
சிறுத்தை 
கோ
இங்கும் விஜய் .அஜித் ரசிகர் மோதல் பலமாக இருக்கும் 2010 இல் இருவரும் மோத அயன் வெற்றியை பறித்தது .அதற்கு  காரணம் அந்த வருடம் அயன் அனைவருக்கும்  பிடித்த படமாக இருந்தது .ஆனால் இம்முறை மங்காத்தா அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கிறது .எனவே விஜய்  ரசிகர்களை விட மற்றயோரின் வாக்குகள் மங்காத்தா வுக்கு செல்லும் என்பதால் மங்காத்தா வின் வெற்றி வாய்ப்பு அதிகம் .அதையும் மீறி வேலாயுதம் வெற்றி பெற்றால் விஜய் ரசிகர்கள்=>ஏனையோர் என்ற முடிவுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை .ஏழாம் அறிவு அயனை போல் அனைவரையும் கவரவில்லை .அதைவிட கூட வந்த படங்கள் அசலோ வேட்டைகாரனோ இல்லை .சூர்யாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளமும் இல்லை ,SO .......மற்றைய படங்கள் சும்மா ஐந்து படங்கள் போட வேண்டும்  என்பதற்காக  சேர்க்க பட்டவை 
 favourite director 

A R .முருகதாஸ் -ஏழாம் அறிவு 
K .V .ஆனந்த் -கோ 
செல்வராகவன் -  மயக்கம் என்ன 
வெங்கட்பிரபு -மங்காத்தா 
வெற்றிமாறன் -ஆடுகளம் 
இதன் முடிவை  இலகுவாக கூறி விடலாம் .ஏனெனில் ராஜா இந்த லிஸ்ட் இல் இல்லை .எனவே வெங்கட்பிரபு வின் வெற்றி உறுதி செய்யப் பட்டுள்ளது .மங்காத்தா படம் விஜய் ரசிகர்களையும் கவர முக்கிய காரணம் வெங்கட் பிரபு .

favourite song 

என்னமோ ஏதோ -கோ 
காதல் என்  காதல் -மயக்கம் என்ன 
கலசலா -ஒஸ்தி 
ஒத்த சொல்லாலா -ஆடுகளம் 
விளையாடு மங்காத்தா -மங்காத்தா 
இங்கு முடிவை கூறுவது சற்று சிரமமானது .விஜய் இன் பட பாடல் எதுவும் இல்லாத நிலையில் மங்காத்தா பாடல் வெற்றி பெற சந்தர்ப்பம் இருந்தாலும் அதையும் தாண்டி என்னமோ எதோ பாடல் அஜித் ரசிகர்களை கவர்ந்து இருந்தால் அந்த பாடல் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது .ஏனெனில் அநேக விஜய் ரசிகரின் ஓட்டு மங்காத்தா பாடலுக்கு போகாது என்ற எடுகோள் தான் .
சரி இவன் ஏதோ தான்தான் முடிவை தீர்மானிக்கிற மாதிரி ஏதோ சொல்லுறான் என்று என்னை திட்டுவதை விட்டு விட்டு இந்த லிங்கில் சென்று உங்கள் ஓட்டுக்களை  அளியுங்கள் 



Post Comment

Saturday, June 2, 2012

மணிரத்னம் -the living legend


மணிரத்னம்(பிறப்பு ஜூன்-2-1956)

தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமா என்றில்லாமல் உலக அளவில் பேசப்படும் இயக்குனர் இவர் ஆவார்.டைம்ஸ் இதழின் உலகின் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக இவரின் நாயகன் படம் தேர்வாகியமை இவர் உலகத் தரம் வாய்ந்தவர் என்பதற்கு சான்றாகும் .யாரிடமுமே உதவி இயக்குனராய் பணியாற்றாமலேயே தனது முதல் படமான பல்லவி அனுபல்லவி(கன்னடம்)படத்தை இயக்கினார் .இவரின் ரோஜா திரைப்படம் தேசிய விருதை வாங்கியது மட்டுமில்லாமல் ஒஸ்கார் நாயகன் ரஹ்மானை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது .அனேகமாக நடுத்தர மக்களை மையமாக கொண்டு கதை சொல்வதே இவரின் பாணி .இவரின் படங்களில் எனக்கு பிடித்த படம் என்றால் தளபதியைத்தான் சொல்வேன்.மஹா பாரத கதையை தழுவி படத்தை அருமையாக எடுத்திருப்பார் .ரோஜா ,மௌனராகம் ,நாயகன் ,அக்னி நட்சத்திரம் போன்றவையும் என்னை கவர்ந்த படங்கள் .அலைபாயுதே என்ற அருமையான காதல் கதையையும் வெற்றிகரமாக கொடுத்தவர் .இவரின் இன்னொரு சிறப்பு என்னவெனில் இவர் இயக்கிய படங்களுக்கு இருவர் மட்டுமே இசையமைத்துள்ளனர் .அதிலும் ரோஜாவுக்கு முதல் வரையான படங்களுக்கு இசைஞானி இளையராஜாவும் அதற்குப் பின் வந்த இன்றுவரையான படங்களுக்கு a.r.ரஹ்மானும் மட்டும்தான் இசை அமைத்துள்ளனர்.


மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்



என்னமோ தெரியவில்லை இவர் இயக்கிய ஆரம்ப காலப் படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றதுடன் இப்போதைய படங்களில் பெரும்பாலானவை தோல்விஅடைந்துள்ளன.இவரின் படங்கள் பாமர மக்களுக்கு புரிவதில்லை என்ற குறையும் காணப்படுகிறது .ஆய்த எழுத்து நல்ல உதாரணமாகும் .இவர் இப்போது தனது படத்தை பல மொழிகளில் எடுக்கும் உத்தியை கையாண்டு வருகிறார்.இவர் கடைசியாய் எடுத்த ஐந்து படங்களில் நான்கு தோல்வியை தழுவிய நிலையில்{குரு மட்டுமே வெற்றி ) பொன்னியின் செல்வன் எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுக்கவிருந்தார் .எனினும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு விட்டது .அடுத்த படம் கடல் கார்த்திக்கின் மகன் கெளதமை வைத்து கடல் சார்ந்த கதையை படமாக்கி வருகிறார்.மீண்டும் ரஹ்மான் கை கோர்க்கிறார்.வழக்கம் போல இந்த படத்துக்கும் இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அண்மைக்காலமாக தோல்வி படங்களை கொடுத்தாலும் இவரின் மவுசு கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.




#############################################################################
மணிரத்னம் பிறந்த நாளை ஒட்டி சினிமா விகடனில் வெளிவந்த மணிரத்னம் பற்றிய சுவையான விடயங்கள்25!

நவீன தமிழ் சினிமாவின் 'நான் கடவுள்'. ஒளியையும் மொழியையும் மாற்றி புதிய கதவைத் திறந்தவர். சில மணித் துளிகள் இங்கே...

உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக 'நாயகன்' டைம்ஸ் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டது. மிகப் பெரிய கௌரவத்தைக் கொண்டாட விழா எடுக்க நினைத்தபோது, அதைத் தடுத்தவர் மணிரத்னம்!

தீபாவளிக்கு முதல் நாள் தன் உதவியாளர்கள், ஊழியர்கள், உறவினர்கள் அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டி சைவ விருந்து அளிப்பார். பாட்டும் ஆட்டமும் அவசியம் உண்டு!


கைக்கடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை. ஆனால், கடிகாரத்தை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்து, நேரம் அறிய விரும்பும்போது பார்ப்பார்!

மணிரத்னம் சென்னைக்காரர் என்றே நினைக்கிறார்கள். மாப்ளே, மதுரைக்காரர். ஜூன் 2... பிறந்த தேதி!

தன்னை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் ரியாக் ஷன் காட்டவே மாட்டார். இரண்டையும் புறம்தள்ளிவிடுகிற இயல்புடையவர்!

கதை விவாதத்துக்கு எப்போதும் துணை சேர்க்கவே மாட்டார். எல்லாமே அவரது எண்ணங்களாகத்தான் இருக் கும். சந்தேகம் இருந்தால் மட்டும், ராக்கெட்டோ ஜாக் கெட்டோ சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொள்வார்!

முழு ஸ்க்ரிப்ட்டையும் பென்சிலில்தான் எழுதுவார். பேனா உபயோகிக்க மாட்டார். தவறாக எழுதியிருந்தால் திருத்தி எழுத வசதியாச்சே. பென்சிலில் இருந்து நேரடியாக ஸ்க்ரிப்ட் கம்ப்யூட்டர்மயமாகி விடும்!

படம் ரிலீஸான தினத்தன்று கொஞ்சம்கூட டென்ஷன் ஆக மாட்டார். தியேட்டர் நிலவரம் விசாரிக்க மாட்டார். நிதானமாக அன்றைக்கு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிப்பார்!

நந்தனுக்குப் பரீட்சை என்றால் அன்று அலுவலகத்துக்கு விடுமுறை போடுவார். மகனுக்கு சொல்லிக்கொடுக்கத்தான் இந்த விடுமுறை!



நல்ல படமாகவும் இருக்க வேண்டும், அது வெற்றிகரமான படமாகவும் இருக்க வேண்டும். அந்தவிதத்தில் '16 வயதினிலே' படத்தைத்தான் பிடித்த படம் என அடிக்கடி குறிப்பிடுவார்!

காரில் ஏறி உட்கார்ந்ததும் முதல் வேலையாக ஸீட் பெல்ட் போட்டுக்கொள்வார். எல்லோரையும் அவ்விதம் செய்யத் தூண்டுவார்!

படத்துக்கு பூஜை, கேமராவுக்கு முன்னாடி தேங்காய் உடைத்துத் தீபாராதனை காட்டுவது, பூசணிக்காய் உடைப்பது, ராகுகாலம், எமகண்டம் இப்படி எதையும் பார்க்க மாட்டார். தன் உழைப்பு ஒன்றையே நம்புவார்!

பாலாவின் 'பிதாமகன்', 'நான் கடவுள்' படங்களை டிக்கெட் எடுத்து தியேட்டருக்கே போய் மக்களோடு இருந்து பார்த்திருக்கிறார். பாலாவின் படங்களின் மீது மட்டும் ஸ்பெஷல் மரியாதை!



தன்னிடம் இருந்து எந்த அசிஸ்டென்ட் வெளியே வாய்ப்பு தேடிப் போனாலும், அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து, வாய்ப்பு கிடைக்கும் வரை பயன்படுத்திக்கொள்ளச் சொல்வார்!

மனைவியை எப்போதும் 'ஹாசினி' என்றே அழைப்பார். சுஹாசினியும் இவரை சிம்பிளாக 'மணி'!

பெண் குழந்தை ரொம்பவும் பிடிக்கும். அநேகமாக அவரின் பல படங்களில் ஹீரோ ஹீரோயினைப் பார்த்து 'எனக்குப் பெண் குழந்தை பிடிக்கும்' எனச் சொல்லும் ஸீன் இருக்கும்!



மணிரத்னம் முதல் ஐந்து படங்கள் முடியும் வரை கார் வாங்கவே இல்லை. 'தளபதி' படம் முடிந்த பிறகுதான் கார் வாங்கினார். அவரின் திருமணமும் அப்புறம்தான் நடந்தது!

மணிரத்னம் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், சிரமப்பட்டு எடுத்த படமாகவும் கருதுவது 'இருவர்'. பேச்சின் ஊடாக அதை அடிக்கடி குறிப்பிடுவார்!



நடிகர்களிடம் இப்படித்தான் நடிக்க வேண்டும் என நடித்துக் காட்ட மாட்டார். அவர்களை இயல்பாக நடிக்கவிட்டு, தேவையான கரெக்ஷன்களை மட்டுமே கொடுத்துப் படமாக்குவதையே விரும்புவார்!

மணிரத்னத்தின் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம்பெறும். கூர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்குப் புரிபடும் இந்த உண்மை!
தேனிமை விரும்பி. அவரைத் தெரிந்துகொண்டவர்கள் அதை அனுசரித்து நடப்பார்கள்!

மணியின் மானசீக குரு, அகிரா குரோசோவா. அவரது படங்களைத் திரையிட்டுக் காண்பதை அதிகம் விரும்பும் மனசு!

கொடைக்கானலில் மணியின் கனவு இல்லம் கிட்டத்தட்டத் தயார். பெரிய தியேட்டரும் உள்ளே உண்டாம்!

மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர்களாக 'ரியல் இமேஜ்' ஜெயேந்திரா, பி.சி.ஸ்ரீராம்,சந்தோஷ்சிவன் மூவரைச் சொல்லலாம். மாதம் ஒரு தடவையாவது சந்தித்துச் சிரிப்பது வழக்கம்!

உடை தேர்வில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார். சிம்பிளாக பருத்தி ஆடைகள் போதும். எவ்வளவு கிராண்ட் ஃபங்ஷனாக இருந்தாலும் கவலையேபடாமல் எளிமையின் வடிவில் வருவார்.


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...