Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Friday, September 14, 2012

நான் விஜய் ரசிகனான கதை-2

இது ஒரு சுயசரிதை ஆகும் .இதன் முன்னைய பகுதியை படிக்க...
நான் விஜய் ரசிகனான கதை.

2000 ம் ஆண்டில் தென்மராட்சி பகுதியில் ஏற்பட்ட நாடு பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்து வட்டுக்கோட்டையில் சில வருடங்கள் இருக்க நேரிட்டது .இதனால் சில காலம் சினிமா பற்றிய நினைவே இல்லாமல் போயி விட்டது .எனினும் இந்த இடப் பெயர்வு என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அடித்தளத்தை இடுவதற்கு வழி  கோலியது .அதுதான் எனது யாழ் இந்து கல்லூரிக்கான பிரவேசம்


.கல்லூரியில் சேர்ந்த போது என்னுடன் ஏற்கவே படித்திருந்த நண்பர்கள் சிலர் எனது வகுப்பிலயே சேர்ந்தமை புது இடத்தில் நம்பிக்கையை கொடுத்தது .எனினும் பெரியதொரு நண்பர் குழாம்  ஏற்பட அதிக காலம் தேவை பட வில்லை .பாடசாலையில் சினிமாவை விட கிரிக்கெட் அதிக முக்கியத்துவம் பெற தொடங்கி  இருந்தது .இரு குழுக்களாக பிரிந்து விளையாடிய முதல் போட்டியில் நான் அடித்த சில பல சிக்ஸர்கள் என்னை அணியில் நிரந்தர இடம் பெற வைத்தது .அத்துடன் ஜெயசூரிய என்ற பெயரையும் தேடி தந்தது .(பாடசாலையில் அதற்கு பின் எந்த போட்டி  யிலாவது ஒரு சிக்சர் கூட அடித்ததாக ஞாபகம் இல்லை ).வகுப்பில் இலங்கை அணிக்கு சமனான ஆதரவாளர்கள் ஆஸி  அணிக்கும்  இருந்தமையால் அதுவே இரண்டு டீம்களை பிரிப்பதற்கு காரணியாக இருந்தது .பாண்டிங்,கைய்டேன் ,கில்கிரிஸ் ஆகியோர் அப்போது ஆசி அணியின் மூவேந்தராக இருந்தனர் .

ஆகவே எனது வகுப்பில் நன்றாக கிரிக்கெட் விளையாடும் இருவருக்கு அப்பட்டங்கள் சூட்டப் பட்டன .ஆனால் ஹய்டேன் கு பொருத்தமாக ஆள் இல்லை எனவே எங்க க்ரூபில் இருந்த கிரிக்கெட் ரசனையே இல்லாத ஒருத்தனை ஹய்டேனை போல இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக ஹய்டேன் ஆக்கி பிளேயர் ஆக்கியது வரலாறு .அப்புறம் நியூ சிலாந்து பிளெமிங் ,சவுத் ஆப்ரிக்கா கிப்ஸ் ஆகியோரும் வகுப்பில் இருக்கத்தான் செய்தனர் அவர்கள் சுய விருப்பின் பேரில் முறையே இலங்கை ,ஆஸி அணியில் சேர்ந்தனர் .ipl slpl எல்லாம் எங்களிடம் இருந்து விளைந்தவையே என்பதை இட்டு பெருமை படுகிறேன் .

2003 உலக கிண்ணம் இதன் உச்ச கட்டமாகும் .ஒவ்வொரு நாளும் பாடசாலையில் முதல் நாள் முடிவடைந்த மேட்ச் தான் விவாதமாய் இருக்கும்


.இலங்கை ஆஸி அரை இறுதி போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தது சங்கா  வும் ,வாசும் களத்தில் நிற்கும் போது மழை  வந்து குழப்பி இருந்தது .ஆனால் வகுப்பில் வெற்றி என்னவோ சிறிலங்காவுக்கு தான் .இந்த மழை மட்டும் வராமல் இருந்திருந்தால் சங்கா ,வாஸ் இருத்த போர்முக்கு (7 விக்கெட் போயிட்டுது 100 ரன்னுக்கு கிட்ட அடிக்கோணும் )ஈஸி  வின். சே அநியாயமா கப்பை மிஸ் பன்னிடமே என்று டாக் கை மாற்றி அவங்களை நிலை குலைய  வச்சாச்சு .அந்த கால பகுதியில் எனது இடது கை பந்து வீச்சு சிறப்பாக எடுபட 2003 வேர்ல்ட் கப் ஹீரோவான வாஸ் இன் நாமம் என்னோடு ஒட்டிக் கொண்டது .காலப் போக்கில் பெயர்கள் மறைந்து விட்டாலும்  இன்று வரை ஒருவனுக்கு பெயர் மாவன்  அதபத்து  தான் .

2002 ம் ஆண்டு மீண்டும் சொந்த இடத்துக்கு வந்திருந்த  போதும் கரெண்ட்  இல்லாமல் இருந்தது .ஏனெனில் ஏனைய இடங்களுக்கு கரெண்டை சில மணித்தியாலங்கள் என்றாலும் காட்டினார்கள் ரேடியோ வில்  யாழ் fm தவிர ஒரு ஒண்டும் வேலை செய்யாது .எனவே பெரிய அண்டனா தயாரித்து அதன் மூலம் சக்தி fm  கேட்டு தகவல்கள் அறிந்து கொண்டேன் .சக்தி fm சுபுகுட்டி பாவோரிட் நிகழ்ச்சியாக இருந்தது . இப்போது பல அலைவரிசைகள் வந்தாலும் நான் என்றுமே சக்தி fm ரசிகன் தான் (முன்னரே சொன்ன லாஜிக் தான் )

படம் வரும் முன்னே ஒரு படத்தின் பாடல் கேட்டது என்றால் திருமலை படம் மூலம் தான் .ஒரு மணித்தியாலத்திலே ஒரு முறை தான் அந்த பட பாட்டு போடுவார்கள் அந்த பாட்டை கேட்பதற்காகவே நாள்  முழுக்க ரேடியோ வேலை செய்யும் .
இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே தினத்தில் ஒரு படம் வெளியாவதை அறிந்த முதல் படமும் திருமலைதான் .அப்போதுதான்  படத்தின் வெற்றி தோல்வி போன்ற விடயங்களை  அறிந்து கொண்டேன் .2003 தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் திருமலை பிதாமகன்,ஆஞ்சநேயா  படங்களை வெற்றி கொண்டது.யாழில் ஒருதியேட்டரில்  படம் ஓடுவதாக அறிந்த போதும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் தைரியம் இருந்திருக்க வில்லை அந்த தீபாவளிக்கு விஜய் ,அஜித்,விக்ரம் ,சூர்யா ஆகிய முன்னணி  நடிகர்கள் அனைவரின் படமும் வெளி வந்திருந்தது .அதிலே விஜய்க்கு கிடைத்த வெற்றி ஆனது முதன் முதலில் விஜய்க்கு ரசிகன் என்ற நிலைக்கு என்னை இட்டு சென்றது .

எனவே நான்  முதல் முதலாக விஜய் ரசிகனாக என்னைசமூகத்துக்கு  காட்டி கொண்டேன் ..பாடசாலை யிலும் சினிமா விவாதம் சூடு பிடிக்க தொடங்கியது .பெரியளவில் விஜய்க்கு எதிர்ப்பு இருக்க வில்லை .ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பலைகள் மாசுக்கு முன் தூசாக இருந்தது .கொலரில்  இருந்து சிகரெட் எடுத்து புகைக்கும் ஸ்டைல் இளைஞர் களிடத்தில் வரவேற்பு பெற்றது .அப்போது இனைய வசதிகள் இல்லாத நிலையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் தான் யாழ் மக்களை அலங்கரித்து இருந்தன .இந்திய சேனல்கள்  ஆங்காங்கே இருந்தாலும் சக்தி  டிவி அநேக வீடுகளை அலங்கரித்தது .அனைத்து தொலைக்காட்சி ,ரேடியோ அலைவரிசைகளும் விஜய் புகழ் பாட தொடங்கின .

விஜயை ஒரு சாதுவான நாயகனாக பார்த்த எனக்கு மீசை இல்லாமல் புது கெட்  அப்பில்
பாட்சாவில் ரஜினி ஸ்டைல் ஐ பார்க்கும் போது இருந்த அதே பிரமிப்பு இதிலே விஜயை பார்க்கும் போது  எழுந்திருந்தது.

தொடரும்.......

Post Comment

Wednesday, October 5, 2011

வேலாயுதம்- trailor விமர்சனம்

வேலாயுதம்- trailor   வெளியாகி படைய கிளப்பி கொண்டிருக்கிறது .இந்நிலையில் இந்த விமர்சனம் புது முயற்சியாக அமைகிறது .விஜயை பிடிக்காதவர்கள் கண்டிப்பாக பதிவை பார்க்கவும் .வேண்டாம்   எண்டால் விடவா போகிறீர்கள் 


எனது பார்வையில் 
  வழமையாக  இளைய தளபதி விஜய் நடிக்கும்   என்பதுதான் முதலில் வரும் இயக்குனர் பெயர் கடைசியாகத்தான் வரும்ஆனால் இங்கு தொடக்கத்திலேயே வருகிறது.இதன் மூலம் ராஜாவின் இயக்கத்தை முன்னிலை படுத்துவதன் மூலம் இது இயக்குனருக்குரிய படம் தான் என்பதை சொல்லியிருகிறார்களோ.   .பொதுவாக விஜய் படங்களில் விஜயை அறிமுகப் படுத்தும் போது அவன் யாரு தெரியுமா என்றுதான் விளிப்பார்கள் .அனால் இங்கு அவர் யாரு தெரியுமா என்று விழிக்கிறார்கள் .அதுவும் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் அவ்வாறு விளிக்கிறார் .இது விஜய்க்கு வயது ஏறி விட்டது என்பதையா இல்லை அரசியல் நெடி பூசப் படுள்ளதை உரைக்கிறதா? 
சொன்னா புரியாது  வழமை போல நெற்றியில் விபூதி பூசி ஆரம்பிக்கிறது (சிவகாசி குங்குமம் ).பல விதமான நடனக் கலைஞர்களை  பயன் படுத்தி எடுக்கப் பட்டது .அப்புறம் அறிமுகப் பாடலில் ஒரே உடையுடன் வருவது வழக்கம் .இங்கு வெவ்வேறு உடைகளுடன் வருகிறார் .
குரலில் வித்தியாசம் தெரிகிறது .அதுவும் கோபத்துடன்  வசனம் பேசும் போது தடித்த குரலில் பேசுவதுமுகம் அக்கினியாய் உள்ளது  நடிப்பில் முதிர்ச்சியை காட்டுகிறது .
பாடல் காட்சிகள் பகிர்ந்து  அளிக்கப் பட்டுள்ளன . சிலாக்ஸ் ஹன்சிகாவுக்கும் ,மாயம் செய்தாயோ ஜெனிலியாவுக்கும் ரத்தத்தின் ரத்தமே சரண்யா மோகனுக்கும் வழக்கப் படுள்ளது .மொளச்சு மூணு இளையே விடல இருவருக்கும் வழங்கப் பட்டுள்ளது விரலு வெண்டக்கா ஜெனிலியாவுக்கும் காலு அவரைக்கா ஹன்சிகாவுக்கும் போல .பாடல் ஒழுங்கு  எப்படி   என்பதில் சந்தேகமாய் இருக்கு . சொன்னா புரியாது ,சிலக்ஸ்,மொளச்சு மூணு ,ரத்தத்தின்  ரத்தமே ,மாயம் செய்தாயோ இந்த ஒழுங்கிலே தான் பாடல் உள்ளது படத்திலும் அப்பிடித்தான் இருக்கும் போல .நான் சிலாக்ஸ் கடைசி பாட்டாய்  இருக்கும் என்று நினைத்தேன் .நடனம் புதிதாய் சொல்ல ஒன்றும் இல்லை கலக்கி  இருக்கிறார் .மாயம் செய்தாயோவில் ஹேர் ஸ்டைல் அழகா உள்ளது .

வேலாயுதம் முகமூடியுடன் வரும் காட்சிகளில் தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்கிறது   சண்டை காட்சியில் ட்ரெயின் சண்டை படத்தின் முக்கிய அம்சமாக   எந்திரனில் இடம் பெற்ற ட்ரெயின் சண்டைக்கு நிகராக இருக்கும் என ராஜா ஏற்கனவே கூறியிருக்கிறார். விஜய் எதிரிகள் மட்டுமன்றி விஜய் ரசிகர்கள் அனைவரிடமும் உள்ள சந்தேகம் குருவி ட்ரெயின் சண்டை குருவி போல்  இருக்குமோ என்பது .ஆனால் நிச்சயமாக உண்மைத்தன்மை யை விட்டு கொஞ்சமும் விலக வில்லை என ராஜா உறுதி பட தெரிவித்துள்ளார் .
trailor இன்  கிளைமாக்ஸ் பட்டைய கிளப்புகிறது.


 .வேலாயுதம் பஞ்ச் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன் நீ  காட்டு காட்டுன்னு வேற சொல்லுற காட்டாம இருந்தா நல்ல இருக்குமாண்ணா (யாருக்கு ண்ணா சொல்லுறீங்க )   விரும்பியோ விரும்பாமலோ அனைவரும் அதை சமுக தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். .இந்த  பஞ்ச் மட்டும் தானா இல்லை இன்னும் இருக்கா என்று எதிர் பார்ப்பை கிளப்புகிறது .
சந்தானத்தின் கொமெடி ஒண்டும்  இடம்பெறுகிறது .விளங்கவில்லை .படம் பார்த்தால்தான் விளங்கும் போல .
தெலுங்கு ஆசாத் படத்தின் ரீமேக் தான் என்பதை  ஒத்துக் கொண்ட ராஜா தமிழுக்கு ஏற்ற  விதத்தில் மாற்றியதுடன் இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் அமைத்துள்ளதாக தெரவித்துள்ளார் .தெலுங்கு ஆசாத் வேலாயுதம் ஆரம்பிக்கப் பட்டவுடனேயே வேலாயுதம் என்ற பெயரில் யாழ்ப்பாணம் முழுதும் dvd வெளியாகி இருந்தது .நானும் அதை பார்த்திருந்தேன் .அந்த கதையை அப்படியே எடுத்தால் வெடி போல  புஸ்வானம் ஆகும் என்று எனக்கே ஏன் சின்ன குழந்தைக்கே தெரியும் ராஜாவுக்கு தெரியாதா . 

சென்டிமெண்டில் 10  மடங்கு திருப்பாச்சியும் ஆக்சனில் 10 மடங்கு போக்கிரி யாக அமையும் எனநம்பிக்கை தெரிவித்துள்ளார் ராஜா.

விஜயின் படங்களுக்கு என்றுமே  வில்லன்களுக்கு முக்கிய இடம்  உண்டு .இதிலே அது மிஸ்ஸிங் (trailor) வில்லனின் ஒரு வசனம் கூட ஏன் ஒரு வில்லனை கூட முறையாக காட்ட வில்லை .15 வில்லன் என்பதால் யாரை காட்டுவது என்று தெரியாமல் தானே காட்டியுள்ளார் வேலு வேலாயுதம் .

சொல்ல வேண்டும் என்பதற்காக சில குறைகள்  

#தீம் மியூசிக் என்னை பெரிதாய் கவரவில்லை மங்காத்தா தீம் மியூசிக் கேட்டு அதை விட பெரிதாய் எதிர்பார்த்தேன் .சிலவேளை காட்ட   காட்டத்தான் பிடிக்குமோ .
#எவ்வளவு நாளுக்குத்தான் அவரு யாரு தெரியுமோ என்று பில்ட் அப் செய்வது .தமிழ் நாட்டுக்கே இல்லை உலகுக்கே தெரியும்தானே அவர் யாரு என்று .  #அண்ணே என்று கத்துவது முதலே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு அதே முக பாகத்துடன் 
# இப்ப தமிழ் நாடே உச்சரிக்கும் வேலாயுதம் என ஜெனிலியா கூறியதும் பின்னணியில் ஒலிக்கும் வேலாயுதம் வேலாயுதம் அப்படியே தெய்வ திருமகள் கதை சொல்ல போறேன் பாட்டில் ராஜா காக்கை ராஜா என்பதையே ஞாபகப் படுத்துது .


வேலாயுதத்தை விஜய் ரசிகர் தவிர மற்றவர்கள் யாருமே வெற்றி பெரும் என நினைக்காததுதான் வேலாயுதத்தின் வெற்றிக்கு முதல் காரணமாக அமையப் போகுது .சுறா ரேஞ்சு எதிர்பார்ப்பவர்கள் வேட்டைக்காரன் ரேஞ்சு படம் இருந்தாலே நல்ல படம் எண்டு சொல்லுவார்கள் அப்ப கில்லி+ போக்கிரி ரேஞ்சு இருந்தா? .கேக்கவா வேனும் .




வெளியாகி இரண்டு நாட்களில்     45000  பார்வைகள் 1800 விருப்பங்கள் 177 விருப்பமின்மைகள் (05-10-2011 4.50 P.M) பெற்று YOUTUBE  ஐயே  CONFUSE  ஆக்கி ஒன்ஸ் மோர் கேட்கும்  வேலாயுதம் வெற்றி ஆயுதம்தான் . விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் அதிகமோ அந்த அளவுக்கு எதிரிகளும் அதிகம் என்று சொல்பவர்கள் (விருப்பமின்மையும் 1800 வந்திருக்கணுமே)  என்ன சொல்ல போகிறீர்கள் .
********************************************************************************
வேலாயுதம் பற்றி இதுவரை குறைந்தது 5  பதிவாவது எழுதி இருப்பேன் .இன்னும் எழுதுவேன் .பதிவு உலக விஜய் ரசிகர்களே நீங்கள் முந்துங்கள் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் படத்தின் வெற்றிக்கு துணை புரியும் .  

சும்மா 
மங்காத்தா படத்தில் விஜய் வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்  நன்றிக் கடனாக trailor  இலேயே தளபதி தலையை கௌரவித்துள்ளார் .எங்கே என்று கேட்கீறீர்களா 
''இன்னைக்கு தமிழ் நாடே தலையில தூக்கி வைத்து கொண்டாடி  கொண்டிருக்கிற வேலாயுதம்''  
 
முக்கிய வேண்டுகோள் -இதை விஜய் ரசிகர்களை விட எதிரிகளே அதிகம் பார்ப்பார்கள் என்பது எனக்கு தெரியும் .பதிவிலே நான் வேறு எந்த நடிகர்களையும் தரம் தாழ்த்தவில்லை .உங்கள் கருத்துக்களை நாகரீகமாக தெரிவியுங்கள்.


Post Comment

Saturday, October 1, 2011

வெடி புஸ்வானம் - கவலையில் பதிவர்


கடந்த 30 ம் திகதி மூன்று படங்கள் வெளியாகியுள்ளன .சரி மூன்றில் ஒன்றை பார்ப்போம் என்று தெரிவு செய்ய வேண்டி வலைத்தளம் ,த்விட்டேர் ,முக நூல் பக்கம் தாவி பார்த்தேன் .முடிவு முரண் -ஓகே ,வாகை  சூட வா -பார்க்கலாம் ,வெடி -மொக்கை என வந்துள்ளது .என்னதான் இவர்கள் இணையங்களில் பிரச்சாரம் செய்தாலும் மூன்று படங்களிலும் வெடி வசூலை அள்ளும்(ஆரம்ப நாட்களில் ) என நினைக்கிறேன் .வந்ததில் கமெர்சியல் படம் என்றால் வெடிதான் .பிரபு தேவா உங்களால் ஏன் முடிய வில்லை .போக்கிரி கொடுத்த உங்களால் மீண்டும் ஏன் அதை போல வேண்டாம் கொஞ்சமாவது பார்க்க கூடிய படம் தர முடியாதா ?.வெடி புஸ்வானம் ஆகியது எனக்கும் சிறிய கவலையை கொடுத்துள்ளது .ஏன் தெரியுமா ?
விஷால்


விஜய் ரசிகனான இவர் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக புரட்சி தளபதி பட்டத்தை (இந்த பட்டத்தை ஏற்றுக் கொள்ளும் தளபதி ரசிகர்கள் எவனாவது   இருக்கானா?)தனக்கு வைத்தது மட்டுமில்லாமல் அவரை போல் படங்கள் கொடுக்க ஆசை படுபவர் .மலைக்கோட்டை ,தோரணை ,சத்தியம் என்று முடியாமல் போக வெடியை திமிராக நம்பினார் .சரி காரணம் என்ன என்னும் சொல்லவே இல்லையே ? .அண்மையில் கொடுத்த பேட்டி  ஒன்றில் விஜயை வைத்து படம் எடுக்க ஆசை படுவதாகவும் விஜய் ரெடி என்றால் ஓகே என்றும் அறிக்கை விட்டுள்ளார் .
விஷால் ஆரம்பத்தில் உதவி இயக்குனராய் இருந்துதான் (வேதம் ) திரை பயணத்தை ஆரம்பித்து இன்று நடிகர் ஆனார் .அவர் படம் இயக்குவது விருப்பாக இருக்கலாம் இவ்வளவு நாளும் சந்தர்ப்பம் இல்லாமல் போய் இருக்கலாம் .


எனினும் எனக்கு உறுத்துவது  விஜய்க்கு கதை ரெடி பண்ணி வைத்து இருக்கிறேன் என்று இப்போது  சொல்வது .ஏன் என்றால் விஜயின் நிலைவரம் இப்போது எல்லோருக்கும் தான் தெரியுமே ஷங்கர் ,முருகதாஸ்,கௌதம் என படு பிஸி .இந்த சூழ் நிலையில் விஜய் இந்த அழைப்பை ஏற்பாரா  என்பது சந்தேகம் தான் .விஜய் மீது உண்மையான அன்பு இருந்தால் பாபு சிவனையும் ,ராஜ்குமாரையும் நம்பி    விஜய் படம் எடுத்த போது (நொந்த போது ) விஜயை அணுகி இருக்கலாம் .எவ்வளவோ எல்லாம் பண்ணுறவர் இதை பண்ணி இருக்க மாட்டாரா?(விஜய் நடிகர்  பிரபு தேவா முதல் படத்துக்கு நம்பி வாய்ப்பு கொடுத்தவர் ..புதுமுக இயக்குனர்களுக்கு எப்போதும் வாய்ப்பு கொடுப்பவர் என்பதை யாரவது மறுக்கிறீர்களா ?).அப்போது எல்லாம் விட்டு விட்டு விஜய் இப்போதுதான் பெரிய இயக்குனர்களுடன் சேரும் போது அழைப்பு விடுப்பதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க  வேண்டி இருக்கிறது .இவரின் இந்த அறிக்கை மூலம் நீண்ட நாட்களாக விஜய் படம் வராததால் (எங்களுக்கு 10  மாதம் நீண்ட காலம் தான் )சரி நம்ம அண்ணன் விஷால் வெடி படம் நடித்து இருக்கிறார் .அண்ணன் தளபதி ரசிகன் .பெரிய நடிகனாய் இருந்து கூட விஜயை வைத்து படம் எடுக்க போகிறார் .வெடி படத்தை கண்டிப்பாக சரவெடி ஆக்க வேண்டும் என்று தளபதி படையை கிளப்பி விட்டிருக்கிறார் போல எனக்கு தெரிகிறது .என்னை இவ்வாறு சிந்திக்க தூண்டியது .பிரபல பதிவர் ரஜினி ரசிகர் ஜீவதர்சன் அவர்கள் எழுதிய இந்த பதிவு தான் .
ரா-ஒன்னில் ரஜினி நடிக்க வேண்டாமே 

சிம்பு அஜித் துதி பாடுவதை தனது ஒவ்வொரு படங்களிலும் வழமையாய் கொண்டிருப்பது போல விஷாலும் செய்தால் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஒரே நாளில் 
 இதே தினத்தில் பல வருடங்களின் பின் இலங்கையில் தயாரிக்கப் பட்ட தமிழ் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகிறது .நான் இதுவரை எந்தவொரு இலங்கை தமிழ் படமும் பார்த்ததில்லை .எனவே இந்த படம் பார்க்க ஆவலாய் உள்ளேன் .ஏற்கனவே ஊடகவியாளர் களுக்கு இந்த படம்திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளியுள்ளது .தென் இந்திய படங்களுக்கு நிகராக எடுக்கப் பட்டுள்ளதாக அவர்களினால் பாராட்டப் பட்டுள்ளது .முற்றிலும் இலங்கை கலைஞர்களை கொண்டு எடுக்கப் பட்ட இந்த திரைப்படம் இலங்கையில் உங்கள் அபிமான திரை அரங்குகளில் வெளியாகியுள்ளது .
ஒரே நாளில் trailor 
 ############################################################################

மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்   
என்னும் தலைப்பில் மூன்று படங்களின் பாடல்களையும் ஒப்பிட்டு ஒரு அலசல் ஏலவே பதிவு இட்டு இருந்தேன் .அதன் முடிவு என்ன .உங்களிடமே விட்டு விடுகிறேன் கருத்துரையில் தெரிவியுங்கள் .

 

இந்த வருடத்தின் டாப் எந்த படம்

 

விரைவில் இந்த வருடத்தின் டாப் எந்த படம் என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளி வரவுள்ளது . இந்த நேரத்தில் கடந்த வருடம் மட்டு மல்லாமல் இன்று வரை தமிழ் சினிமாவின் டாப் திரைப்படம் வெளியாகி இன்றுடன் (01 10.2011) ஒரு வருடம் பூர்த்தி ஆகியுள்ளது .கடந்த வருடம் இதே நாளை நினைவு கூர்ந்து  பாருங்கள் .


சிந்திக்க ஒரு நிமிடம்



 என்ன பதிவு பிடித்து இருக்கா? பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டு போடலாமே .



Post Comment

Wednesday, September 7, 2011

தளபதி படை தடைகளை உடை


இந்த பதிவு பலரை மனம்நோக செய்யும் என்பதால் தீவிர சினிமா ரசிகர் அல்லாதவர்களை படிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் .

தமிழ் சினிமாவை      தற்போதைய    ஆரோக்கிய    விடயமாக    நோக்கப்  படுவது  தல  தளபதி நட்புதான்    MGR -சிவாஜி , ரஜினி- கமல்        அடுத்து    விஜய் -அஜித்  .இதிலே    விஜய் ,அஜித் முன்னர் நேரடியாக மோதிக்  கொண்டாலும் அண்மைக்  காலமாக   புரிந்துணர்வுடன்  நட்புறவு கொண்டுள்ளனர் .அதன் முக்கிய அம்சமாக மங்காத்தா படத்தில் கூட விஜய் நடித்த பாடல் காட்சி இணைக்கப் பட்டிருந்தது .இது இனிவரும் படங்களிலும் தொடரும் .அஜித் விஜய் உறவு இப்படி  இருக்க அவர்களின் ரசிகர்கள் நிலை .

 .அவர்களும்  திருந்தி இருப்பார்கள் என்று   நினைத்தால்     அவர்களின் வக்கிர    புத்தியை காட்டிக் கொண்டு   இருக்கிறார்கள்.மங்காத்தா  வெற்றியை இருவரும் ஒன்றாக கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்தால் நடப்பதோ தலை கீழ்  .சில  நாட்களாக  வலையுலகில் முக நூலில் நடக்கும் யுத்தங்கள் என்னுள் தூங்கிக்  கொண்டிருந்த  விஜய் ரசிகனை தட்டி எழுப்பி விட்டது .
  .
 .மங்காத்தா தொடர் விடுமுறை நாட்களை குறி வைத்து வெளியிடப் பட்டது போட்டிக்கு வேறு படம் எதுவும் இல்லை .விடுமுறையை கழிக்க கண்டிப்பாக மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் .மங்காத்தா இல்ல எந்த ஆத்தா வந்திருந்தாலும் குறிப்பிட்ட வசூல் வரும்தான் .அதையே பெரிய வெற்றி ஆக்கி அடுத்த சூப்பர் ஸ்டார் அளவுக்கு அஜித் ரசிகர்கள் படும் பாட்டை நினைத்தால் கொடுமை தாங்க முடியலடா சாமி .அவங்களுக்கு பழைய சோறு கொடுத்தாலே புரியாணி மாதிரி சாப்பிடுவாங்க .அசலில் அதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள் .இதிலே கொஞ்சம் சுடு சோறு அவ்வளவுதான் . இந்த கிழமை தியேட்டர்கள் காலியாக தொடக்கி விட்டனவாம் .சரி அந்த கதை எதுக்கு  எமக்கு .
king of opening 
சரி தமிழ்சினிமாவின் மாஸ் யாருன்னா அது ரஜினி மட்டும்தான் .இன்றுவரை அதை நிருபித்துக் கொண்டு இருக்கிறார் .ரஜினியின் மாசுக்கு முன்னாள் இவர்கள் எல்லாம் தூசு தான் .  கில்லிக்கு பின்  விஜய் அந்த இடத்தை பிடித்து விட்டார்  .தொடர் வெற்றி  ரஜினிக்கு இணையான செல்வாக்கு என ரொக்கட் வேகத்தில் உயர்ந்தார் .king of opening மட்டுமல்ல king of kollywood ஆகி  விட்டார்அவரின் திடீர் வளர்ச்சியே அவருக்கு எமனாகியது . விஜயின்   வளர்ச்சி  ஓரளவு  படித்த இணையத்தை பயன்படுத்தும் பதிவர்களுக்கு       பிடிக்கவில்லை (ரஜனிக்கே பிடிக்காத போது இவர்களுக்கு பிடிக்காமல் போனதில் ஐயம் இல்லை) .சாதாரண நடிகனுக்கு  இவ்வளவு புகழா ?விஜயை வளர விட கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள் .விஜயை தாக்கி தாறு மாறாக எழுதினார்கள் .விஜயை எவ்வளவு மோசமாக தாக்க முடியுமோ அவ்வளவு தாக்கினார்கள் . .பிரபல பதிவர்கள்  பலரும்  தமது  இருப்பை தக்க வைத்துக் கொள்ள இடைக்கிடையே விஜயை  கேவலப்  படுத்தி  ஒரு பதிவு  போடுவதை இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளனர் .


 .ஏன் . அனைவரும் விஜயை கேவலப் படுத்துகிறார்கள் .சக நடிகர்கள் அஜித்  , சூர்யா ,விக்ரம்  கண்டுப்பதே  இல்லை.ஏன் அவர்கள் மக்கள் மத்தியில் விஜய் அளவுக்கு பிரபலம் கிடையாது. .இணையத்தில் தமிழ் சினிமா பக்கம் வரும் ஒருவர் அதிகம் தேடிய நடிகர் விஜய் என்பதை கூகுளே வெளிப்படையாக அறிவித்தது . விஜய் சொல்லியது போல என்னை எதிர்க்கவும் என்னுடைய முகமே தேவைப் படுகிறது என்பது இந்த விடயத்திலும் உண்மைதான் .
 விஜய்க்கும் அஜித்துக்கும் என்ன வித்தியாசம்?

மங்காத்தா படத்தை, தற்போது தமிழ்நாட்டில் உள்ள மூன்று பெரும் நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடுகின்றன.
பத்தாததற்கு ராதிகா நிறுவனமும் சேர்ந்துகொண்டது.
சன் டிவி காரர்கள் ஒன்னே ரூபா வசூலிக்கிற  படத்தையே மகாஹிட்ன்னு பீத்திக்குவாங்க.
இந்தப்படம் 'ஒம்பது' ரூபாவாவது வசூலிக்கும். ஏன்னா அஜித் இருக்காரில்லையா?.. அப்படின்னா இந்தப்படத்தை blockbuster என்று தம்பட்டம் அடிச்சுக்குவார்கள். இவ்வளவு பெரிய நிறுவனங்கள், இவ்வளவு பெரிய விளம்பரம், 2 வருடம் கழிச்சு வரும் அஜித் படம். (அசல் க்கு பிறகு விஜய்க்கு இரண்டு படம் வந்துவிட்டது) இது எல்லாத்தையும் தாண்டி படம் பப்படம் ஆச்சின்னா, அப்புறம் அது தல கிடையாது..

மாஸ் ஹீரோன்னா , விளம்பரம் இல்லாம, பெரிய நிறுவனம் இல்லாம, ஆறு மாசத்துக்கு ஒரு படம் வந்தாலும், opening கிராண்டா இருக்கணும்.. அவர்தான் மாஸ்.. அது எப்படி என்று கேட்கிறீர்களா?
இப்படி....

 

காவலன் ரிலீஸ் ஆகும்போது, எவ்வளவு அரசியல் நெருக்கடி, இப்போது மங்காத்தாவை வெளியிடும்

அனைத்து  நிறுவனங்களும் காவலன்க்கு எதிராக இருந்தன.. பெரிய நிறுவன    தயாரிப்பு இல்லை, படம் வெளியே வருமா.. வராதா என்றே தெரியாத சூழ்நிலை.. காவலனுக்கு ஆறு மாதங்களுக்கு முன் வந்த சுறா, விஜய்
ரசிகர்களுக்கே பிடிக்கல, இருந்தும்.. காவலன் ஹிட்..

இதுதான் விஜய்க்கும், அஜித்க்கும் உள்ள வித்தியாசம்.. விஜய்க்கு பெரிய நிறுவனங்கள் தேவையில்ல, பெரிய விளம்பரம் தேவையில்லை, பெரிய மியூசிக் டைரக்டர் தேவையில்லை..பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும்..(அசல், ஏகன் படங்களின் பாடல்கள்
யாருக்காவது ஞாபகம் இருக்கா?, வில்லு, சுறா பிளாப் ஆனாலும் பாடல்கள் இன்று வரை hit .. படத்துக்கு மிகப்பெரிய opening   இருக்கும்.. அஜித் படங்கள் ஆறு மாசத்துக்கு ஒன்று வரட்டும் .. (ரெண்டு  வருசத்துக்கு   ஒன்னு  வந்தே  சிலதுதான்  தேறுது )அப்போது தெரியும்..
நன்றி -விஜய் சார்பு சமுக தளங்கள் 
 இப்போது வலையுலகில் சூடாக    அனைவராலும்    படிக்கப்படுவது    உங்களை சந்தோசப்      படுத்த    அண்ணன்    கார்க்கி    யின்  மங்காத்தா, கவுண்டமணி மற்றும் ஒரு தல ரசிகன்.
மற்றும்   தலயின் தறுதலை - மங்காத்தா !.
நண்பன் ஒருவன் முக நூலில் பகிர்ந்ததை அப்படியே இங்கு பகிர்கிறேன். 
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் நீங்க யாரவது தீர்த்து வையுங்க .தலைவன் னு ஆம்பளைய சொல்லுவாங்க தலைவி ன்னு பொம்பளைய சொல்லுவாங்க இந்த தல தல ன்னு சொல்லுறாங்களே அப்பிடின்னா என்ன ?
தளபதி படை தடைகளை உடை 
தளபதி படை இப்பவே ரெடி ஆகுங்க .தீபாவளி சரவெடி 
ஒருத்தனை மட்டும் கொன்னா ஆயுதம் .எதிரிகள் அனைவரையுமே கொன்னா வேலாயுதம் .
 பாடல்களில் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டோம் .படத்தை மாபெரும் வெற்றியாக்கி எதிரிகள் அனைவரையும் கொல்ல ரெடி ஆகுங்க.

Post Comment

Saturday, August 27, 2011

சூர்யா விஜய்க்கு செய்தது சரியா ?

      .   1975  இல்     பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தார் .படத்தில் இவருக்கு விஜய்க்கு இணையான வேடம் வழங்கப் பட்டிருந்தது .விஜய் ஜோடியாக கௌசல்யாவும் சூர்யா ஜோடியாக சிம்ரனும் நடித்தனர் .விஜயின் பாடல்களை விட சூர்யா நடித்த பாடல்களே பிரபல்யம் பெற்றன .'மனம் விரும்புதே உன்னை ' அந்த கால பெண்களை கொள்ளையிட்ட பாடல் .விஜய் அப்போது பூவே உனக்காக ,லவ் டுடே கொடுத்த ஹிட் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார் .அந்த நேரத்தில் புதிதாக அறிமுகமாகும் ஒருவருக்கு தனக்கு சமனான வேடத்தை வழங்கியது மட்டுமில்லாமல் சிறந்த பாடல்களையும் விட்டு கொடுக்க காரணம் என்ன .எந்த ஒரு நடிகனாவது அப்படி செய்வாரா ?.விஜய் அப்படி செய்ய  காரணம் என்ன.?.சூர்யா விஜயின் நண்பன் என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது .(நேருக்கு நேர் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம் ).
        பின்னர் சூர்யா காதலே நிம்மதி,சந்திப்போமா,பெரியண்ணா,பூவெல்லாம் கேட்டுப் பார் ,உயிரிலே கலந்தது என ஐந்து படங்களில் நடித்தாலும் எதுவுமே சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை .பெரியண்ணா கப்டனுடன் இணைந்து நடித்ததால் ஓரளவுக்கு சூர்யாவை இனங்காட்டியது .(விஜயின் தந்தை S.Aசந்திரசேகர் எடுத்த படம் இந்த பட வாய்ப்புக்கும் விஜய்தான் காரணம்)
    .                     மீண்டும் சித்திக் இயக்கத்தில் விஜயுடன் இணைந்தார்  பிரண்ட்ஸ் படத்தில்.படத்தில் விஜய்,சூர்யா இருவரும் உயிர் நண்பர்கள். அவர்களின் நட்பை சுற்றியே திரைக்கதை நகரும் .வடிவேலுவின் நகைச்சுவையும் கை கொடுக்க படம் சூப்பர் ஹிட் ஆனது .பிரண்ட்ஸ் வரும் போதும் விஜய் குஷி,பிரியமானவளே என தொடர் வெற்றியில் இருந்தார் .காதலுக்கு மரியாதை ,துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பிளாக் பஸ்ட்டர் தந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராய் இருந்தார்.ஆனால் சூர்யா சினிமாவில் இனம் காணப் படாமல் தோல்வியில் துவண்டு இருந்தார்.எனினும் மீண்டும் தனக்கு சமனான வேடத்தை அளித்து அவருக்கும் பாடல் காட்சிகளை வழங்கினார்  விஜய். சூர்யா,விஜய்  சேர்ந்து வரும் பாடல் காட்சிகளை பார்த்தால் தெரியும் .ஒரு காட்சியில் விஜய் முன்னிலைப் படுத்தப் பட்டால் அடுத்த காட்சியிலேயே சூர்யா முன்னிலை படுத்தப்படுவார் .அப்போதைய காலகட்டத்தில் விஜய் அப்பிடி நடித்திருக்க தேவை இல்லை.சூர்யாவை இரண்டாவது ஹீரோ ஆக காட்டி இருக்கலாம் .ஆனால் விஜய் அப்பிடி செய்ய வில்லை .ஏன் ?.சூர்யா அவரின் நண்பன்.ஆக மொத்தத்தில் விஜய் சூர்யாவை அறிமுகப் படுத்தியது மட்டுமில்லாமல் முதல் வெற்றியையும் பெற்று கொடுத்தார் .
                பிரண்ட்ஸ்  இல் முதல் வெற்றியை பெற்ற சூர்யா கனவிலும் நினைத்திருக்க மாட்டார் .இனி தனக்கு ஏறுமுகம் தான் என்று .அடுத்து சூர்யா நடித்த நந்தா சூர்யாவின் கரியரையே புரட்டி போட்டது .சூர்யாவை  பாலா பட்டை தீட்டினார் .சூர்யா நடிப்பு நுணுக்கங்களை கற்று கொண்டார் .படங்களை தேர்ந்தெடுத்தார் .படத்திற்காக கடுமையாக உழைத்தார் .வெற்றிகளை குவிக்கிறார் .அதிர்ஷ்டமும் சூர்யாவுக்கு கை கொடுத்தது.நந்தா முதலில் அஜித் நடிப்பதாய் தான் இருந்தது .கஜினியும் மிரட்டல் எனும் பெயரில் அஜீத்துக்காக உருவான படம்தான் .     
      எது எப்படியோ சூர்யா  இன்று முன்னணி இடத்துக்கு வந்து விட்டார் .இன்றைய தேதியில் முன்னணி நடிகர் அவர்தான் .அவரின் அடுத்த படமான ஏழாம் அறிவுக்கு நிலவும் எதிர் பார்ப்பு ,அவரின் சமீப படங்களின்  தொடர் வெற்றிகள் என்பன அதற்கு சான்று .ஆனால் இப்போதைய விஷயம் என்னவென்றால் விஜய்,அஜித்,விக்ரமும் சூர்யாவின் வழியை பின்பற்ற தொடங்கி விட்டனர் .படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கி விட்டனர்.நண்பன் வந்த பின் மீண்டும் முன்னணி யார் என்று எழுத வேண்டி வரலாம் .அதை விடுவோம் நான் சொல்ல வேண்டிய விடயம் இந்த நண்பன்தான்.

 .                           .                 3 இடியட்ஸ்ஐ தமிழில் ஷங்கர் ரீமேக் செய்வார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் அனைவரிடமும் எழுந்த ஒரே கேள்வி அமீர்கான் பாத்திரத்தில் ஷங்கர் யாரை தெரிவு செய்வார் என்பதுதான் .ஷங்கர் தீர்க்கமாக விஜயை தெரிவு செய்தார் .விஜயின் நண்பர்களில் ஒருவராக சூர்யா நடித்திருக்கலாம் அது நட்பை சூர்யா வெளிக் காட்டுவதற்கு ஒரு  சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் .அதை இங்கு சொல்ல வரவில்லை .அப்போது சூர்யா வெற்றிக் கடலில் மிதந்து கொண்டிருந்தார் .விஜய் தோல்வியில் துவண்டு கொண்டிருந்தார்.விஜயை விட முன்னணியில் இருக்கும் போது அவரையும் விட முக்கியத்துவம் குறைந்த ரோலில் நடிப்பது சாத்தியம்   இல்லைதானே .  .ஆனால் அரசியல் காரணங்களுகாக விஜயை படத்தை விட்டு தூக்கியவுடன் அந்த இடத்துக்கு சூர்யாவை நடிக்க கேட்ட போது சூர்யா என்ன செய்தார்.இது தன்னுடைய நண்பனின் படம் அவனை நீக்கிய படத்தில் நான் நடிப்பது அவனை அவ மதிப்பது போன்றது என்பது சூர்யாவுக்கு தெரியாதா? எப்படி  ஒத்துக் கொள்ள     முடிந்தது இவரால் .பட வாய்ப்பு இன்றி தோல்வியில் துவண்டிருந்தாலும் பரவாயில்லை மன்னித்து விடலாம் .இந்த படத்தில்  நடித்துதான் தான் சூர்யா என்பதை நிருபிக்க வேண்டுமா?.அதற்குள் படத்தில் நடிப்பதற்கு நிபந்தனை வேறு.

           .    முடிவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.நான் சூர்யாவை குறை கூற வரவில்லை.சூர்யா,விஜய் நட்பு பற்றி நான்  நினைப்பதைத்தான் எழுதி உள்ளேன் .உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் . இது  நண்பன் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் வந்திருக்க வேண்டிய பதிவு .அப்போது நான் வலையுலகில் இல்லை என்பதால் இப்பொது எழுதியுள்ளேன் .
 பதிவு  பிடித்திருந்தால் ஓட்டு போடவும்







Post Comment

Wednesday, August 3, 2011

மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த வருடம் ரஜினி,கமல் படங்கள் எதுவும் வெளியாகாது என்பது உறுதியான நிலையில் விஜய் அஜித் விக்ரம் சூர்யா படங்கள் முக்கிய எதிர்பார்ப்புக்குள்ளகின .இப்போது தமிழ் சினிமாவில் வெளிவரவுள்ள முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம்  அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.இது வெற்றி வாய்ப்பு வரிசை முன்னிருந்துபின்னோ பின்னிருந்து முன்னோ அல்ல.படம் வெளியாகும் என ஆரம்பத்தில் அறிவிக்கப் பட்ட திகதி ஒழுங்குதான் .மங்காத்தா அஜித்தின் பிறந்த நாளான மே 1 உம வேலாயுதம் ஜூன்22  உம ஏழாம் அறிவு பின்னும் என அறிவிக்கப் பட்டிருந்தன .

ஆனால் அங்கும் இங்குமாய் இழுபட்டு ஆகஸ்ட் வந்த  நிலையிலும் இன்னும் வெளியிடும் திகதி அறிவிக்கப் படாமல் உள்ளன .படங்களில் வெற்றி யாருக்கு கிட்டும் என்பதை அலச வேண்டும் என நானும் எண்ணி இருந்தேன் . ஆனால் படங்கள் இப்போதைக்கு வர மறுப்பதாலும் இந்த மாதம் மூன்று படங்களின் பாடல்களும் வெளிவர இருப்பதாலும் எந்த பட பாடல்கள் பட்டையை கிளப்பும் என அலசுவதே இந்த பதிவு .விக்ரமின் தெய்வ திருமகள். ஏலவே வெளி வந்து எல்லா உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளது .
மங்காத்தா  -யுவன் 



யுவன் ஷங்கர் ராஜா வின் இசையில் ஒரு பாடல் விளையாடு மங்காத்தா ஏற்கனவே வெளியாகி சக்கை போடு போடுகிறது .யுவனின் இசையில் தீனா,பில்லா ,ஏகன் என மூன்று படங்களில் தல நடித்துள்ளார் .இதில் பில்லா,தீனா என்பன அஜித்தின் டாப் ஐந்து படங்களுக்குள் உள்ளடக்கம் .ஐந்து என்ன மூன்று என்றே சொல்லலாம்.தீனா, பில்லாவின் வெற்றிக்கு இசை மிக முக்கிய பங்கு வகித்ததை சொல்லித்த்தான்  தெரிய வேண்டும் என்பது இல்லை .அதிலும் பில்லாவின் தீம் இசை ஆகட்டும் பின்னணி இசை ஆகட்டும் எல்லாம் உயர்தரம் .ஏகன் திரைக் கதையில் சொதப்பி படு தோல்வி அடைந்ததால் இசையை யாரும் கண்டுக்கவே இல்லை.

அனால் இது உங்காத்தா எங்காத்தா இல்ல மங்காத்தா தல யின் 50 வது படம் நடிப்பதே ரெண்டு வருசத்துக்கு ஒன்று அதிலும் 50வது படம் வேற சும்மா பிரிச்சு மேய வேண்டாமா இசையில். அதனால்தான் வட்டியும் முதலுமாய் ஏழு பாடல்களை கம்போஸ் பண்ணியிருக்கிறார் .அதிலே விளையாடு மங்காத்தாவின் ரீமிக்ஸ் வடிவிலும் ஒன்று உள்ளடக்கம் .சிவாஜி படத்தின் பல்லேலக்கா பாடலின் முதல் வரிகளை மட்டும் பயன்படுத்தி வித்தியாசமான இசையில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளார் யுவன் .கடந்த ஆண்டு VTV தந்த  இசைப் புயலின் அலையையும்  எதிர் கொண்டு  பையா பாடல்கள் மிகப் ரு வெற்றி பெற்றன.அடடா மழைடா கடந்த வருடத்தின் சிறந்த பாடலாக தமிழ் நாட்டின் ஒஸ்கார் விருதான  விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கப்பட்டது .அதையும் விஞ்சும் வகையில்  மங்காத்தா அமையும் என்பது அஜித் ரசிகர்களின் எதிர் பார்ப்பு .பொறுத்திருந்து பார்ப்போம் .இசை வெளியீடு ஆகஸ்ட் 10 என்பது கூடுதல்  தகவல் .

ஏழாம் அறிவு -ஹரிஸ் 


ஏழாம் அறிவு சொல்லவே தேவை இல்லை . நிஜவுலகில் வேறு மாதிரி இருந்தாலும் வலையுலகில் நிச்சயம் சொல்லுவேன் இம்  மூன்று படங்களில் அதிகம் எதிர் பார்க்கப் படும் படம் இதுதான் .இந்திய அளவில் முன்னணி வகிக்கும் முருகதாஸ் கோலிவுட் இல்  இப்போது முன்னணி( யாம் )வகிக்கும் சூர்யா .இசையில் முன்னணி வகிக்கும் ஹரிஸ் (A.R எங்கப்பா வருசத்துக்கு ஒன்னு தருவதே சந்தேகமாய் இருக்கு ).இணைவது காரணமல்ல .படத்தின் முக்கிய எதிர் பார்ப்பே கதை தான் .கதை கி.மு.கதை என்கிறாங்க ,தசாவதாரம் மாதிரி பல வேஷம் என்கிறாங்க, ஏழாவது அறிவு என்கிறாங்க சும்மா கிளப்புறாங்கையா பீதியை .சரி நாம விசயத்துக்கு வருவோம் .
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா இருக்காரே சூர்யா அவரு இந்த முன்னணிக்கு வந்ததுக்கு யாரு யாரு காரணம் .அனைத்து விரல்களும் கட்டாயம் நீட்டப் பட வேண்டிய கட்டாய  நபர் நம்ம ஹீரோ ஹரிஸ் .பின்ன என்னப்பா 2003 இல் காக்க காக்க தொடங்கி 2005 -கஜினி 2008 -வாரணம் ஆயிரம் எல்லாவற்றுக்கும்மேலாய் 2009இல் அயன் ,ஆதவன் என ரெட்டை பிரசவம் .இதில  எந்த படம் ஐயா  தோற்று இருக்கு (ஆதவன் -NO COMMENTS ) .இந்த படங்கள் அனைத்துமே இசைக்கு ஏதாவது ஒரு விருதை பெற்றுக் கொடுக்க தவறவில்லை .
.

சிறந்த இசையமைப்பாளருக்கான தென்னிந்திய பிலிம் பாயர் ,சர்வதேச தமிழ் திரைவிருது காக்க காக்க தொடங்கி ஒவ்வொரு இந்த படங்களின் மூலம் விருதுகளை குவித்தார் .அதிலும் அயன்,ஆதவன் என தன்னுடைய படங்களே போட்டி போடும் அளவுக்கு புகுந்து விளையாடியிருக்கிறார் மனுஷன் .அத்தோடு விட்டாரா கோ,எங்கேயும் காதல் என இந்த வருசமும் பின்னி எடுத்து விட்டார் இதை விட அடுத்து இவருக்கு பெரிய மைல் கல் கூட(?) ரெடி ஆகிட்டு இருக்கு . எண்டாலும் எனக்கு ஒரு சந்தேகம் எனக்கென்னமோ சூர்யா படத்துக்கு இசை அமைத்ததால் தான்  ஹரிஸ் பாடல் ஹிட் ஆகியது போல் தோணுது .உங்களுக்கு ?. சோனி நிறுவனம் வேலாயுதம் பாடல்களை இந்த மாதமே வெளியிட வேண்டி இருப்பதால் ஏழாம் அறிவு பாடல் வெளியீடு தள்ளி போகலாம் எண்டும் கதைக்கினம்.? 
அப்புறம் இடம் போதாமையால் வேலாயுதம் பாடல் அலசல் அடுத்த பதிவில் விரைவில்
 காக்க காக்க 


 ONLY FOR  தளபதி ரசிகன் 


என்னடா தளபதியை பற்றி ஒன்னையும் காணலை எண்டு யோசிக்கிறீர்களா .
பதிவை திருப்பி வாசித்து விட்டு இதை படிங்க .
அஜித் பிறந்த நாள் மே 1 எண்டு போட்டிருக்கு ஜூன் 22 போடலை ஏன் -உலகுக்கே தெரியுமே .
அஜித்-யுவன் ரெண்டு படம் வென்று விட்டால் எல்லாம் வென்று விடுமா -ஏகன்...
விஜய் அவார்ட்ஸ் ஐ ஒஸ்காருக்கு  ஒப்பிட்டிருக்கேனே ஏன் என்று யோசித்தீர்களா அவங்கட பெயரே நம்மை  இம்பிரஸ் பண்ணுது .
அப்புறம் தளபதி க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தது யாரு 
வேட்டைக்  காரனுக்கு 2009 இல் படம் மெஹா  ஹிட் ஆகலைனா கூட (சூப்பர் ஹிட் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் .)கூட தளபதி இல்லாட்டில் விழா களை கட்டாது எண்டு தெரிந்த படியால் தானே அபிமான நடிகர் விருது கொடுத்தாங்க. 
2010 இல கூட படம் எனக்கே பிடிக்கல தவிர வேற படமும் வரல .தலைவருக்கு கூட நிலைமை சரியில்ல இந்த நேரம் நாம விருது வாங்க கூடாது ஆகவே இந்த முறை அந்த விருதை நண்பன் சூர்யாவுக்கு கொடுங்க என்று தளபதி வற்புறுத்தி சொன்ன படியால் தானே விருது கிடைக்கல.
நிஜவுலகில் வேறு மாதிரி இருந்தாலும் -தெரியும்தானே நிஜவுலகில் யாருக்கு ரசிகர் கூட என்று 
 .பேரழகனில என்ன மாதிரி குனிந்து வளைந்தாலும் நம்ம கில்லி முன்னாடி நிக்க முடிந்ததா .எத்தனை வேஷம் போட்டாலும் நிஜ முகத்தோடு மக்களுக்காய் போராடும் (வேலாயுதம் படத்தில்) தளபதி யை அசைக்கவே முடியாது .

அப்புறம் இப்போதைய லேட்டஸ்ட் மொக்கை என்ன தெரியுமா (நம்ம பதிவை விடுங்க ) சினிமா விகடன் கருத்து கணிப்பு முடிவு வெளி வந்திருக்காம் .எனக்கொரு பழமொழி ஞாபகம் வர வேணும் .பட் ஆனா வரலையே யாருக்காவது வந்தா சொல்லுங்களேன் ப்ளீஸ் .

அடுத்த பதிவை மிஸ் பண்ணி விடாதீங்க வெற்றி ஆயுதம்  வேலாயுதம் பாடல்கள் 

அணிலுக்கே அணிலாக உங்களில் ஒருவன் . 
தயவு செய்து உங்களுக்கு பிடித்து இருந்தால் ஓட்டு போடுங்கள் .

Post Comment

Saturday, July 30, 2011

சங்கா +முக்கிய VIP

ரசிகர்களின் மனங்கவர் வீரருக்கான விருது ( PEOPLE'S CHOICE AWARD-2011 ) ICC யினால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது .கடந்த வருடம் சச்சினுக்கு கிடைத்தது .இம்முறை இந்த விருதுக்கு ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.இந்திய கப்டன் டோனி ,தென் ஆபிரிக்காவின் ஆம்லா,மேற்கிந்திய தீவுகளின் கெயில்,இங்கிலாந்தின் திராட் மற்றும்  சிங்கத்தின்  குகையிலிருந்து நம்ம சங்கா ஆகியோரே அவர்கள் .    கிரிக்கெட் உலகின் கண்ணியவானாக திகழும் எமது நாட்டுக்கு  பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் குமார் சங்ககாராவுக்கு வாக்களித்து இந்த வருடத்துக்கான அபிமான வீரராக தேர்வு செய்ய வேண்டியது எமது தலையாய கடமையாகும் .  

 சங்ககாராவுக்கு வாக்களிக்க இங்கே க்ளிக் பண்ணுங்கள்.  
AUGUST-25 மட்டுமே வாக்களிக்க முடியும் உடனே உங்கள் வாக்கை அளியுங்கள் .


யாழ்ப்பாணத்தில்  சங்கா 


யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் TRIAL எனும் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடைப் பயணத்தில் சங்கா கலந்து கொண்டார் .யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரின் ரசிகர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர் .அவருடன் பல ரசிகர்கள் புகைப்படம் எடுத்து தமது நெடுநாள் ஆசையை பூர்த்தி  செய்தனர் .
கடந்த ரெண்டு மாதமாய் யாழில் நின்றும் யார் யாரோ எமக்கு தேவையே இல்லாதவர்கள் எல்லாம் முகாமிட்ட போதுயாழில்   நின்றும் சங்கா வரும் போது நிற்க முடியாமல் போனதில் வருத்தம்தான் .சரி காலம் வரும்தானே.


யார் அந்த VIP 
அப்புறம் இன்னொரு முக்கிய VIPயும் யாழ்ப்பாணம் வந்தவராம் .அவர் யாரு ?அவரால்தான் நான் வலைப்பதிவு என்றால் என்ன என்பதை அறிய முடிந்தது ..நாம A/L  படிக்கும் போது நம்ம தளபதி புராணம் பாடிக் கொண்டிருக்கும் கொடுமை தாங்காமல் நண்பன் ஒருவன் எந்நாளும் சொல்லுவான் உண்ட தளபதியை பற்றி ஒருவர் கிழி கிழிஎன கிழித்துக் கொண்டிருக்கிறார் .போய்ப் பாரு என்று .அப்ப ஒருநாள் இணையத்தில் தேடிய போதுதான் அவரை பற்றி அறிய முடிந்தது.அவர் சூரியனில் (FM) பணியாற்றுகிறார் என்பதும் கூட .(நாம சக்தியின் அடிமை அந்த காலம் தளபதியின் புகழ் பாடுவதோடு நிற்காமல் கில்லி வெற்றி விழாவுக்கு இலங்கை வந்த அவரை அழைத்து நேரடி ஒளிபரப்பியது சக்தி டிவி .இப்ப இலங்கையில் என்னென்ன அலைவரிசை இருக்கு எண்டே சத்தியமாய் தெரியாது எல்லாம் ''தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக'' செய்த மாயங்கள்தான் .).அப்போது எனக்கு இவர் யாரு நம்ம தளபதியை  பற்றி இப்பிடி எழுவதற்கு இவருக்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது  


ஆனால் வலைப்பதிவு என்றால் என்ன எப்படி எழுதுவது ஒன்றுமே தெரியாது அத்துடன் A/Lஇல்  பிஸியாக இருந்ததால் நேரமும் இருக்க வில்லை .A/L முடிந்த பின் வெட்டியான நாட்களில் இவரின் வலைதளத்தில் பயணித்த போதுதான் இவரின் திறமையை முழுமையாக அறிய முடிந்தது ..இவரின் திறமையை பார்த்து வியந்து விட்டேன் .இவர் மட்டுமல்ல பலரும் தளபதியை கலாய்ப்பதை பின்னர்தான் அறிந்து கொண்டேன் .அத்துடன் இவர் இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ஆதரவாளர் என்பதால்எனக்கு இவரை ரொம்ப பிடித்து விட்டது .இவரின் வலைப்பதிவுகளை படித்து இவரின் வலைப் பக்கத்தில் இருந்து ஏனைய வலைப் பதிவாளர்களை படித்து நானும் இப்படி ஒன்று ஆரம்பித்துள்ளேன்.இவங்கள் சும்மா பிரிச்சு மேய்கிறார்களே நாமெல்லாம் எதை எழுதி கிழிப்பது என்ற பயத்துடனேயே ஒவ்வொரு பதிவையும் எழுதுகிறேன் .எனினும் நீங்கள் தரும் வரவேற்பை என்னால் நம்பவே முடியவில்லை .என்னுடைய முந்தைய பதிவான தெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும். திரையிட்ட சகல இடங்களிலும் நான் சற்றுமே எதிர்பாராத வகையில்   மெஹா ஹிட் அடைய செய்த அனைவருக்கும் என்னுடைய அன்பு கலந்த நன்றிகள் 


என்ன நான் ரொம்ப போர் அடித்து சாகடிக்கிறேனா புரியுது .சரி யார் அந்த VIP  நீங்கள் கேட்பது புரியுது .கேட்கா விட்டாலும் .இவர்தான் அவர் .ARV.லோஷன் அண்ணா அவர்கள் .






“பொதுவா யார் பிரச்சினைக்கு போக மாட்டேன். ஆனா ஆட்டம் போட்டி பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் சும்மா கில்லி மாதிரி. ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான். போய்க்கிட்டே இருப்பேன்” இது எப்பிடி இருக்கு .






உன்னை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் .உன்னை பலருக்கு பிடிக்கவில்லையே என ஒதுங்காமல் உன்னை பிடிக்கும் சிலருக்காக உன் முயற்சிகளை தொடர்ந்து செய் . நிச்சயம் சிலர் பலராவார் பலர் சிலர் ஆவார் .-உங்களில் ஒருவன்.


அப்புறம் இந்த பதிவு முடிவில் ஒரு கேள்வி .சரியாக விடை அளிப்பவர்களுக்கு சன் டிவியின் தங்க வேட்டை நிகழ்ச்சியில் (சன் பிக்சர்ஸ் படம் எதுவும் கைவசம் இல்லாததால் திரும்ப தொடங்க போறாங்களாம் )  தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது .விடையில் OPTIONS  எதுவும் இல்லாததால் சற்று சிரமப் படப் போகிறிர்கள் .சரி கேள்வி இதுதான் 
இந்த பதிவில் எத்தனை 'தளபதி' உள்ளது .


எவன்டா எவன்டா அடிக்கிறது விடுங்கடா .எதையுமே பிளான் பண்ணி பண்ணாட்டி இப்பிடித்தான் .





Post Comment

Tuesday, July 12, 2011

விஜய் வீழ்ச்சியும் எழுச்சியும்

கடந்த தசாப்தத்தின் ஆரம்ப பகுதியில் தோல்விகளால்  துவண்டு கொண்டிருந்த விஜய் நடுப்பகுதியில் தமிழ்  சினிமாவின்  உயர்  நிலையை தொட்டார். திருமலை மிகவும் திருப்புமுனையாக இருந்தது.மாஸ் ஹீரோவாக விஜயை இனங்காட்டியது திருமலை.


தொடர்ந்து கில்லி,மதுர ,திருப்பாச்சி, சிவகாசி,போக்கிரி என வெற்றி மேல் வெற்றிகளை குவித்தார்.வருடத்துக்கு  மூன்று படம் கொடுத்தார்.ரசிகர்களை அள்ளி குவித்தார்.இடையிடையே வந்த சில தோல்வி படங்களும்  இந்த மாபெரும் வெற்றிகளின் முன்னால் காணாமல் போயின .  ஏனைய நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு  உருமாற்றி சிரமம் எடுத்து நடிக்க இவரோ இலகுவாக உச்சத்தை தொட்டார் .சூர்யா மிகவும் கடினப்பட்டு முதுகை கூனி நடித்த பேரழகன் கில்லிக்கு முன்னாள் நிற்க முடியவில்லை. விக்ரம் தேசிய விருதை வாங்கிய பிதாமகன் கூட திருமலையை நெருங்க வில்லை.ஆரம்ப காலத்திலிருந்தே போட்டியாளராக இருந்த அஜித்தை மிகவும் பின் தள்ளினார்.மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால் தலைவர் ரஜினுக்கு அடுத்த இடத்தை தொட்டார்.இவ்வாறான விஜயின் வளர்ச்சியை  பலரும் மூக்கின் மேல் விரலை விட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.






விஜயின் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்தது அழகிய தமிழ் மகன்.படம் ஓரளவு நல்லாய் இருந்தும் விஜயை வில்லனாக பார்க்க விரும்பாத அவரின் ரசிகர்களே தோல்வியடைய வைத்தனர்.தொடர்ந்து குருவி.விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே (இன்னும் வேலாயுதம் வர வில்லை .என்ன முறைப்பு.சரி நண்பன்வரவில்லை )எனக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்த கில்லி பட கூட்டணியுடன் வந்த குருவி தியேட்டரை விட்டு பறக்க விஜயே முக்கிய காரணமானார்.சூப்பர் ஸ்டார் கூட செய்ய பயப்படும் சாகசங்களை குருவியில் நிகழ்த்தினார்.பறந்து பறந்து சாகசம் செய்ததால்தான் பெயரை குருவி என்று வைத்தனரோ திரும்பவும் சொல்லுறன் குருவி 150வது  நாள் கொண்டாடியது .(மச்சி நீ கேளேன் )..குருவியுடன் விஜயை கேவலப்படுத்தும் கைங்கரியங்கள் இணையத்தில் ஆரம்பமாகின.அடுத்த வில்லும் நொந்து போனது.


அரசியலுக்கு  வர ஆசைப்படும் விஜய் அரசியலிலேயே ஒரு கூட்டணி நிலைக்காத போது படங்களில் எப்படி நிலைக்கும் என்று நம்பினாரோ .அடுத்த வேட்டைக்காரன் மிகுந்த  எதிர்பார்ப்புடன் வெளியாகியது.அந்த காலத்தில் காதலில் விழுந்தேனை கூட வசூலில் எழ வைத்த சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிட்டமையே எதிர் பார்ப்புக்கு காரணம்.எதிபார்ப்பு வீண் போகவில்லை .படம் விஜய் ரசிகர்களை முழுதும் திருப்தி படுத்தியது. பாடல்கள் படி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பின .புலி உறுமுவதை  பார்த்த போது சிங்கம் ஒன்று புறப்பட்டு வந்தமாதிரியே  இருந்தது.அயன் வசூலை முறியடித்து விட்டதாக சன் பிக்சர்ஸ் கூட அறிவித்த பின்னரும் ,2009ம் ஆண்டின் favourite hero ஆக vijay அவார்ட்ஸ் கிடைத்த பின்னும் படம் தோல்வி என்று சொல்பவர்களுடன் வாதிட முடியாது.


விஜயின் 50வது படம் சுறா மலையாள படம் ஒன்றின் ரீமேக் என்றார்கள் .அதுவும் மோகன்லால் நடித்த படம். என்னடா எப்படி மோகன்லால் படத்தில் தளபதி எங்கேயோ உதைக்குதே என்று நினைத்த போது படம் மீண்டும் சன் வெளியீட்டில் படுதோல்வியை சந்தித்தது. தளபதியின் உயிர் ரசிகனான நானே தளபதி மீது கோபபட்டது இந்த படத்துக்குத்தான் .மற்றைய படங்களை நண்பர்களுடன் பார்த்து விட்டு படம் முடிவில் நண்பர்களின்  எல்லா கேள்வி கணைகளையும் தனி ஆளாய் சமாளித்த என்னால் சுறா முடிவில் ஒன்றும் செய்யமுடியாமல் போய் விட்டது.சுறாவுடன் பிரச்சினைகள் உச்சமடைந்தன. சன் பிக்சர்ஸ் உடன் மோத தயாரானார். அரசியல் கட்சி ஆரம்பிக்க எத்தனித்ததால் தி.மு.க.வின் எதிர்ப்பை சம்பாத்தித்தார்.சுறா விஜயை மிகவும் யோசிக்க செய்து விட்டது. வலையுலகில் விஜயை பின்னி பெடல் எடுக்காதவர்கள்   இல்லை  என்று சொல்லலாம் .விஜயை பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட விஜயை கிழித்து எழுதினால் தான் தங்கள் பதிவையும் வாசிப்பார்கள் என கருதி எந்தளவு முடியுமோ அந்தளவு வதைத்தார்கள்.


வழமையாக தோல்விகளை பற்றி கண்டுக்காமல் அடுத்த பட வேலைகளை பார்ப்பவர் விஜய். அவர் நிதானித்து நின்ற இடம்தான் .சுறா .மற்ற நடிகர்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை உணர்ந்தார்.தான் நடித்த படங்களின் இயக்குனர்களை நினைத்தார். ATM பரதன்,வில்லு பிரபுதேவா, சுறா ராஜ்குமார் வேட்டைக்காரன் பாபுசிவன் இப்போதுதான் விஷயம் விளங்கியது தளபதிக்கு .நண்பன் சூர்யா டாப் கியரில் போவதற்கு அவர் இயக்குனர் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்தார்(முன்னரே யோசித்தால் சுறா வந்திருக்குமா ).  அதை உணர முன்னர சித்திக்குடன் காவலனில் இணைந்தமை வேறு விடயம்.தனது பிடியை தளர்த்தினார் சித்திக்கின் எண்ணப்படி படம் எடுக்க அனுமதித்தார்.காவலன் மீண்டும் தளபதியை திரும்ப வைத்தது. திரையுலகில் எந்த ஒருவருமே சந்திக்காத கடும் நெருக்கடியின் மத்தியில் காவலன் வெளி வந்து வெற்றி பெற்றது. விஜய் ரசிகன் என என்னை பெருமைப்பட வைத்தது


.இனி சரவெடி 
.கடந்த  தசாப்தத்தின் இறுதியில் வீழ்ச்சியை  சந்தித்த விஜய் தற்போது   டோப்கியர்  இல்ல புல்லட் வேகத்தில் பயணிக்கிறார் . இப்போது மிக அருமையாக நிதானமாக யோசித்து படங்களை தேர்வு செய்கிறார்.ஜெயம்  ராஜாவின் வேலாயுதம்     கில்லி போல் சொல்லி அடிக்கும்  வகையில் விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே பிரமாண்டமாய்  தயாரிக்கப்படுகிறது.அடுத்து நண்பன் சொல்லவே வேண்டாம் பிரமாண்டத்துடன் முதல் தடவையாக இணைகிறார்.இசையுலகில் முன்னணியில் திகழும்  ஹரிஸ் ஜெயராஜ் உடனும் முதற்தடவையாக   இணைகிறார் .படம் வெற்றி உறுதியாகியநிலையில்அடுத்த இன்ப அதிர்ச்சி a.r .முருகதாஸ் இயக்கத்தில் மாலை நேரத்து மயக்கம் 65 கோடி செலவில் நடிக்க உள்ளார்.அக்கினி புயலுடனும் பகலவனாய் பொங்க உள்ளார்.ஆக மொத்தத்தில் மீண்டும் உச்சத்தை தொட உள்ளார் எங்கள் இளைய தளபதி.
  முக்கிய குறிப்பு - நடு பந்திகள் விஜயை  பிடிக்காத   என்  நண்பர்களும்   பார்க்க   வேண்டும்   என்பதற்காக மட்டுமே  

Post Comment

Saturday, June 25, 2011

வேலாயுதம் ஒரு சிறப்பு பார்வை

காவலன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படம்.என்னதான் காவலன் வெற்றிதான் என்றாலும் பல்வேறு காரணங்களால் மெகா ஹிட்ஆகவில்லை.தொடர் தோல்வியின் பின் காவலன் வெற்றி பெற்றது ,தேர்தல் முடிவுகள் என்பன விஜய்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதுஅந்த மலர்ச்சியுடன் மீண்டும் ஒரு மெஹா ஹிட் கொடுப்பதற்காக விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்படும் படம்தான் வேலாயுதம்.தெலுங்கு படமான ஆஸாத் படத்தின் ரீமேக் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும் ஜெயம் ராஜா முதல் தடவையாக சொந்தக்கதையில் எடுப்பதாக சொல்லியுள்ளார்.படத்தின் ஒரு வரிக்கதை என்னவெனில் தந்தைக்காக (குருவி),தாய்க்காக(சிவகாசி),அண்ணனுக்காக(பத்ரி), தம்பிக்காக(பகவதி), தங்கைகாக(திருப்பாச்சி),நண்பனுக்காக(ப்ரண்ட்ஸ்), போராடிய விஜய் இதில் மக்களுக்காக போராடுகிறார்.(சுறாவிலும் அதைத்தானே செய்தார் #அப்படியா). .சுறா,வேட்டைகாரன்,குருவி வரிசையில் இது அமையும் என்பது பலரது எதிபார்ப்பு(வேட்டைக்காரன் அயன் வசூலை முறியடித்ததாக சன் பிக்சர்ஸ் சொல்லியது.குருவி 150வது நாள் வெற்றி விழா நடை பெற்றது).ஆனால் சிறப்பான திரைக்கதை நகர்த்தும் விதம் ,வலிமையான செண்டிமெண்ட்ஆக்ஷ்ன் ,காமெடிஎன பக்கா கொமெர்சியலாக கொடுத்தால் கில்லி,போக்கிரி வரிசையில் இணையவும் வாய்ப்புள்ளது.                                                                                                                    இசையை பொறுத்தவரை வேட்டைக்காரன் பட்டயைக் கிளப்பியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்ஜெனிலியா,ஹன்சிகா என இரு நாயகிகள். சச்சினில் ஜெனிலியா ஏற்கனவே நடித்தவர்.ஹன்சிகா நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகியன தோல்வி அடைந்த நிலையில் இதை நம்பியுள்ளார்.விஜய் ஆண்டனியின் இசையில் எதிர்வரும் ஜுலை 5 பாடல்கள் வெளிவர இருக்கின்றன.மெலோடி, குத்துப்பாட்டு என்று ‌விஜய் ஆண்டனியின் இசையில் மொத்தம் 7 பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஓபனிங் சாங்கை மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 கோடி செலவில் படமாக்கியுள்ளனர்..சந்தானம் காமெடிக்கு உள்ளார்.எனினும் இதில் அவரிடம் அவரின் சமீபத்தைய படங்களைப் போல  நிறைய எதிர்பார்க்க முடியாது .








.படத்தின் பலம் 
***படத்தின் கதையை வைத்து இது மொக்கைதான் என பலர் நினைப்பதால் படத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லை.ஆததால் இதுவே பெரும் பலமாக உள்ளது.படம் ஓரளவு நல்லாய் இருந்தாலே வெற்றி பெறலாம்.
***தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் பெரும் பலமாக உள்ளது.காவலன் படத்தை வெளியிடுவதில் விஜய்கு ஏற்பட்ட நெருக்கடி யாவரும் அறிந்ததே.(DMK ஆட்சியில் தனது படங் கள் வேண்டுமென்றே தோல்வியடைய செய்யப் பட்டதாக விஜய் நினைக்கிறார்) 
***படத்தின் உரிமை ஜெயா டிவிக்கு கைமாறியுள்ளமையும் பலம்தான்.
***விஜய் ரசிகர்கள் -விஜய் நடித்த ப்ளாப் படங்களுக்கு கூட நல்ல ஒபினிங் கொடுப்பது இந்த ரத்தத்தின் ரத்தங்கள்தான்.(விஜய் நடித்த சில நல்ல படங்களை ப்ளாப் ஆக்கியதும் இவர்கள்தான்.)                                                        பலவீனம் என்று பார்க்கும் போது விமர்சனங்கள் அதிலும் படம் நல்லாய் இருந்தால் கூட குப்பை என்று விமர்சனம் எழுதும் சிலர் .அத்துடன் காய்க்கிற மரத்துக்குத்தான் கல் எறிவார்கள்.கல் எறிய காத்து நிற்கும் கூட்டமும் பலவீனம்தான்.
எது எவ்வாறாயினும் படம் நல்லாய் இருந்தால் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...