எந்திரனுக்கு அடுத்து அதிக இடங்களில் வெளியாகும் சிறப்பை பெற்றுள்ளது வேலாயுதம் . வேலாயுதம் வெளியீட்டு திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .எதிர்வரும் தீபாவளி அன்று வெளியாகிறது.மங்காத்தா வின் வெற்றியை அடுத்து வேலாயுதம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது .இப் படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் ஐங்கரன் நிறுவத்தினர் வேலாயுதத்தை பிரமாண்டமாக வெளியிடுகின்றனர் வெளிநாடுகளில் மட்டும் 350-400 பிரிண்ட் போடவுள்ளனர் .கேரளாவில் 120 ற்கு மேற்பட்ட திரை அரங்குகளிலும் கர்நாடகா-70,மும்பை-40,புனே -30 இடங்களிலும் திரையிடப் படுவது இப்போது உறுதி செய்யப் பட்டுள்ளது .இங்கிலாந்தில் ரஜினியின் எந்திரனுக்கு அடுத்த படியாக அதிக இடங்களில்(26) திரையிடப் படுகிறது .தசாவதாரம் 16 இடங்களில் திரையிட பட்டது அப்போ தமிழ் நாட்டில் சொல்லவே வேண்டாம் ..behindwoods செய்தி குறிப்பு .
டோக்குடு
மகேஸ்பாபு நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போடுகிறது டோக்குடு திரைப்படம் .இதுவரை இருந்த மகாதீரா வின் வசூலை தூக்கி சாப்பிடும் வகையில் அமைந்துள்ளது படத்தின் ஒபெநிங் .தந்தை மகன் பாசத்தை செண்டிமெண்டாக வெளிப்படுத்தும் அக்சன் படமான இதை தமிழில் ரீமேக் செய்வதற்கு பலத்த போட்டி எழுந்துள்ளது .தமிழில் மூன்று முன்னணி நாயகர்கள் ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் .அந்த முன்னணி நாயகர்களில் முன்னணியில் நிற்பது யார் .தனது கில்லி,போக்கிரி பிளாக் பஸ்ட்டர் களை ஒக்கடு ,போக்கிரி என மகேஷ் பாபு விடம் பெற்ற நம்ம தளபதி இந்த டோக்குடுவை விட்டு வைப்பாரா?. ம்ம் பிரபுதேவா ,தரணி,ராஜா ரெடி ஆகுங்க.விஜயின் அடுத்த கில்லி+ போக்கிரி அதுதான் டோக்குடு .
.
மயக்கிய மயக்கம் என்ன
அண்மையில் வெளி வந்த மயக்கம் என்ன திரைப் பட பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன .''நான் சொன்னதும் மழை வந்திடுச்சு'' மயக்குகிறது என்னை .மயக்கம் என்ன படத்தில் பாடல் ஆசிரியராகவும் மாறி இருக்கிறார் தனுஷ் .மயக்கம் என்ன திரைப்படமும் தீபாவளி போட்டியில் இணைந்துள்ளது.ஏழாம் அறிவு பாடல்கள் வெளி வந்து அம்புட்டுதான் வந்து இருகின்றன .அப்ப வேலாயுதம் சாதனையை முறியடிச்சு இருக்கணுமே .ஹரிஸ் +முருகதாஸ்+சூர்யா கூட்டணி படங்களின் பாடல்கள் எல்லாமே சூப்பர் டுப்பர் ஹிட் அல்லவா.பாடல்கள் எப்படி என்று உங்களுக்குத்தான் தெரியுமே .எதிர்பார்த்த அளவுக்கு இல்ல .ஹரிஸ் அடுத்து தளபதியுடன் முதல் படம் .உங்களை ரொம்பவே நம்பி இறுக்கம் ஏமாற்றி விடாதீங்க ப்ளீஸ் .
மருத முரான்
சமுக பதிவுகளை எழுதி வந்த ஈழத்து புகழ் பெற்ற பதிவர் மருத முரான் அவர்கள் அண்மைக் காலமாக சினிமா சம்பந்தமாகவும் அதிகம் எழுதுகிறார் .எனக்கு பிடித்த பதிவர்களில் ஒருவரான அவர் எனக்கு தெரிந்து(நான்கு மாதங்கள் ) நம்ம தளபதியை பற்றி நல்ல விதமாக ஒரு பதிவு எழுதி உள்ளார் .விஜய் விஞ்சிய பொடிகார்ட்! சல்லுவின் அலட்டலும் அற்புதம்!!.
மன்னார் பயணம்
மன்னாருக்கு பல்கலைகழக அலுவலாக சென்றமையால் சில நாட்களாக பதிவுலகில் வலம் வர முடியவில்லை .ஒரு சில பதிவுகளையே படிக்க முடிந்தது .இன்று முதல் மீண்டும் உங்கள் வலை தளங்களுக்கு வருகிறேன். .
மன்னாரில் ரசித்தவை
மன்னாருக்கு கல்வி அலுவலாய் சென்றதால் அனைத்து இடங்களையும் தரிசிக்க முடியவில்லை .கிடைத்த சந்தர்ப்பங்களில் நான் பார்வையிட்ட இடங்களில் என்னை கவர்ந்தவை .
மன்னார் புனித லூசியா தேவாலயத்தின் அழகிய தோற்றம்
மாந்தை உப்பளத்தில் எடுக்கப் பட்டது
வாழ்த்துக்கள் நண்பா
மன்னாரில் மனிசன்களை விட இவங்கதான் அதிகம் போல .
வாழ்த்துக்கள் நண்பா
யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த எனது நண்பன் இரோஷன் . என்னுடைய பாடசாலை காலத்தில் இருந்து இசையோடு ஒன்றியவர் .தீவிர இசை பிரியனான அவர் இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளார் . பாடல் மிகவும் அருமையாக ரசிக்கும்படி உள்ளது .இது அவர்களின் முதல் முயற்சி .தொடர்ந்தும் இதை விட சிறப்பாக பாடல்களை கொடுக்க வாழ்த்துகிறேன்.நீங்களும் ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் .
குரல்,வரிகள் -இரோஷன் புவிராஜ்-pviroshan@yahoo.com