Wednesday, August 29, 2012

மசாலா கபே -சுவாரசிய தகவல்கள் -2

பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!
மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம
் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!
மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!
சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!
கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.


taare zamen par 

நான் இதுவரை (படத்தை விளங்கி பார்க்க தொடங்கிய பின் ) பல படங்களில் கண் கலங்கி எமோசன் ஆகிய போதும் படம் பார்த்து கண்ணீர் விட்ட படங்கள் தெய்வ திருமகள் ,குசேலன் ஆகியவைதான் .ஆனால் இன்று ஆங்கில சப் டைட்டில் உதவியுடன் பார்த்த ஒரு ஹிந்தி படம் இந்த ல
ிஸ்டில் இணைந்து விட்டது .பேஸிக்கா நான் ஒரு மசாலா பட ரசிகன் என்பதால் எவ்வளவோ பேர் சொல்லியும் சந்தர்ப்பம் இருந்தும் இவ்வளவு நாட்களாய் மிஸ் பண்ணிட்டன் . உணர்வுகளை புரிந்து கொள்ள மொழி தேவை இல்லை என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம் .புலமை பரிசில் பரீட்சைக்கு பிள்ளைகளை 2 ம் ஆண்டில் இருந்தே தயார் படுத்தும் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் # ஐ நோ இட்ஸ் டூ லேட் , though ஹட்ஸ் ஆப் அமீர் சார்

##################################################

அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு வைப்பேன்!!! -> ப்ளூட்டோவில் உனை நான் கூடேற்ருவேன்!!!!# அப்பனை விஞ்சும் மகன்

சிறு வயதில் மதன் கார்க்கி .......

''உன்போல சிலர் இன்று உருவாகலாம், உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா?" அசல் படத்தில் வைரமுத்துவால் எழுதப்பட்ட வரிகள் சிவாஜியை புகழ்வதற்காக எழுதப்பட்ட வரிகள் என்று தெரியும் ஆனால் மறைமுகமாக கமலை ஏன் தாக்குகிறார் என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது .ஏனெனில் வைரமுத்து தான் கமலின் உற்ற தோழன் ஆயிற்றே .# காரணம் இயக்குனர் சரண் தான் .அப்படி என்ன பிரச்சினை சரணுக்கும் கமலுக்கும் உங்களுக்கு தெரியுமா ?


###################################################
உங்களுக்குத் தெரியுமா...?

உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேசியா ஆகும். இந்தோனேசிய நாடானது 1998 ம் ஆண்டில் இந்துசமயத்தின் கடவுளான விநாயகப்பெருமானின் உருவப்படத்தினை தனது நாணயத் தாளில் அச்சிட்டு பெருமைப்படுத்தியது.

விநாயகப்பெருமானின் உருவப்படம் அச்சிடப்பட்டது 20,000 ருபியா நாணயத்தாளிலாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


அமிதாப் பச்சன் 
ஹிந்தியில் விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந்திப் படங்களுக்கு முதல் நாள்... முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்!


அமிதாப் பச்சன் அவர்களின் தாயாரும் .....இந்திரா காந்தி அவர்களும் மிக நெருங்கிய தோழிகள் ! எவ்வளவு நெருக்கம் என்றால் .....30 வருடங்கள் முன்பு ஒரு படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடிக்கும்போது ...அமிதாப்பின் வயிற்ரை ஒரு இரும்பு மேசை கிழித்து .
..ஈரல் சேதமாகி ..உயிர் ஆபத்தான நிலையில் அவர் பெங்களூரில் இருப்பதை அறிந்த பிரதமர் இந்திரா காந்தி ...தனது அமெரிக்க பயணத்தை இடை நிறுத்தி ..பெங்களுர் பறந்து வந்தார் ! அது மட்டுமன்றி ..... ராஜீவ் அவர்களின் மணமகளாக சோனியா ....இத்தாலியில் இருந்து வந்தபோது ....அமிதாப் பச்சன் வீடு தான் மண மகள் வீடு !
.(thanks  to sathyan.s  sir ) 

RAJA IS BACK 
 அதிகம் எதிர்பார்க்கப்படும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது .''காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன் பூப்பறித்து கோர்க்க சொன்னேன் ஓடி வந்து உன்னை சந்திக்க''சுற்றும் பூமி நிற்க சொன்னேன் உன்னை தேடி பார்க்க சொன்னேன் என்னை பற்றி கேட்க சொன்னேன் எம் காதல் நலமா என்று''
பாடலுக்கான லிங்க் .

twitter  பொன்மொழிகள் 

 பிடித்தவர்களிடம் பிடிக்காததுபோல "நடிப்பது " சுலபமல்ல! பிடிக்காதவர்களிடம் பிடித்ததுபோல "நடப்பது" கடினம் அல்ல!

@ChittiTweeT_s: வீழ்வதற்கு என்றுமே அஞ்சியதில்லை நான் #மழை”

சுட்டது ! ஆண்களை கல் நெஞ்சக்காரர் என்கின்றனர் பெண்கள் - ஆம் கல்லில் எழுதிய எதுவும் எளிதில் அழிவதில்லை !


  சில சமயம் ஓரிஜினலை விட பிரதி நன்றாக இருக்கும்.# குழந்தை

வாழ்க்கையில் எதுவுமே புரியாமல் இருக்கும் போது, ஒரு இழவு வீட்டுக்கு சென்று வாருங்கள், வாழ்க்கையே தெளிவாக புரியும்# catched in twitter

: ஆண்ணின் பக்கத்து சீட்டில் பெண் உட்காருவது உரிமை என்றும்பெண்ணின் பக்கத்துசீட்டில் உட்காரும் ஆண்எருமை என்பது எத்தகைய சமூகம்?

நீ வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்பவர்கள் நீ வெற்றி பெற்றதும் விடா முயற்சி என்பார்கள் 

தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால்,அதுதான் உண்மையான தோல்வி 

: மற்றவர்களின் தவறுகளுக்கு ஜட்ஜ் ; தமது தவறுகளுக்கு லாயர் #மனிதன்

twitter  என்னை இல் தொடர இங்கே அழுத்துங்கள் ..




Post Comment

Wednesday, August 22, 2012

மசாலா கபே -சுவாரசிய தகவல்கள்

தமிழ் சினிமா உலகில் முதன்முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் MGR.ரிக்சாகாரன் படத்துக்காக 1971 பெற்றார்.அதேபோல் 3 முறை தேசியவிருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் .மூன்றாம்பிறை,நாயகன்,இந்தியன் ஆகிய படங்களுக்காக பெற்று கொண்டார் ,நடிகர் திலகம் என போற்றப்படும் சிவாஜிகணேசன் தேவர்மகன் படத்துக்காக SPECIAL JURY AWARDபெற்று கொண்டார்.
#####################################################
தலீவா யூ  ஆர்  கிரேட்  
ஒரு நடிகன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் ? – விகடன் பேட்டியின் போது கவுண்டமணியிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.

இதற்கு கவுண்டமணி அளித்த பதில் என்ன தெரியுமா - "தன்னை பற்றின நிஜ ரூபத்தை பொத்தி பொத்தி மூடனும். பெட்டிகடையில பீடியை கூட கட்டு கட்டாஉள்ளேதான் வச்சுருப்பான்.அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளிய வச்சு கொட்டி பரத்தி வியாபாரம் பண்ணி பாருங்க.....பீடி விக்காது.

நானும் அப்படித்தான். விழாக்கள், பேட்டிகள்-ன்னு எதுக்கும் ஒத்துக்க மாட்டேன்.கலை நிகழ்ச்சி அப்படிங்கிற பேர்ல சிங்கப்பூர் துபாய் போறதில்ல. ரசிகர் மன்றங்களை எல்லாம்கூட கலைச்சுட்டேன். என் பிறந்தநாள் என்னைக்குன்னே மறந்து போச்சு. முக்கியமா டிவி.க்குபேட்டி கொடுக்கிறதில்லை. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு. அப்பத்தான் கிக் !!!!

###########################################################
அனிருத் 

கொலைவெறி பாடல் மூலம் தனுசை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றவர் அனிருத் . உறவினரான இவர் அண்மையில் அன்ரியா வுடனான முத்த காட்சி மூலம் பேசப்பட்டார் .தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தின் போது அனிருத் 


##############################################################
சந்தானம் 
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் தற்போது NO 1 ஆக இருப்பவர் சந்தானம் .இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றி படங்களில் நடித்தார்.தற்போது இவருக்கு 32 வயது .ராக்கம்மா எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார் .சந்தானம் தனது குழந்தையுடன் காணப்படும் அரிய புகைப்படம் இது 
###############################################################
SS Rajamouli-
வெற்றிப்பட இயக்குனர் . Vikramarkudu(original of சிறுத்தை ),மகாதீரா ,நான் ஈ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை உருவாக்கியவர் இவரின் முதல் படம் student no 1 தமிழில் அதே பேரில் ரீமேக் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.wiki யில் இவ
ரை பற்றி ''He is one of the most successful directors of Telugu Film Industry with 100% success rate''. இவ்வாறு குறிப்பிட பட்டுள்ளது இவர் தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்த வரப் பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும் ..


########################################################
விஜய் அன்டனி 
சுக்ரன் ,வேட்டைக்காரன் ,வேலாயுதம் என பட்டைய கிளப்பிய இசை அமைப்பாளர் விஜய் அன்டனி முதன் முதலாய் நடித்திருக்கும் 'நான் 'படம் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது .அவர் இசை அமைக்கும் 25 வது படம் இது என்பது குறிப்பிட தக்கது வாழ்த்துக்கள் விஜய் சார் # இந்த வருஷம் விஜய் வருஷம் போல
############################################################
RACE -
அண்மையில்தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது .அருமையான படத்தை இவ்வளவு நாளாய் மிஸ் பண்ணி விட்டேன் .10 நிமிடத்துக்கு ஒரு முறை ஊகிக்க முடியாத திருப்பங்களுடன் விறு விறுப்பான திரைக்கதை .நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி # விஷ்ணுவர்தனின் அடுத்த படம் இதன் ரீமேக் தான் என்று ஒரு கதை அடிபடுகிறது .அது உண்மையானால் அஜித் ஆர்யா கூட்டணியில் கண்டிப்பாக இந்த படம் பிய்த்து உதறும்
#############################################################
உலகின் தற்போதைய முதல்தர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான குமார் சங்க காராவின் குடும்பம் 

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...