Friday, September 16, 2011

தோனியால் ஏன் முடியவில்லை

.சங்கா -100

குமார் சங்ககார இன்று தனது 100 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார் . இப்பெருமையை பெரும் 5வது இலங்கை வீரர் இவர் ஆவார் .முரளிதரன் ,மஹேல,வாஸ் ,சனத் ஆகியோரே ஏனையோர் .இந்த போட்டியில் வெற்றி பெற்று சங்கா வை கௌரவி ப்பது இலங்கை அணியினரின் தலையாய கடமை ஆகும் .
இரட்டை விருது  
இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் சங்ககார 2011ம் ஆண்டுக்கான சிறந்த ஒரு நாள் வீரராக ஐ.சி.சி யினால் தெரிவு செய்யப் பட்டு உள்ளார் .கருதப் பட்ட  ஆகஸ்ட் 11-2010  இருந்து ஆகஸ்ட் 04-2011 வரை 25 போட்டிகளில் பங்கு பற்றி 1049 ஓட்டங்களை 55.21 எனும் ஓட்டவிகிதத்தில் பெற்றார் .இவர் இந்த விருதை வாட்சன் ,கம்பீர் ,ஆம்லா ஆகியோரின் போட்டியின் மத்தியில் வென்றுள்ளார் .

அது மட்டுமன்றி முற்று முழுதாக ரசிகர்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் ஐ.சி.சி மக்கள் தேர்வு விருதையும் பெற்றுள்ளார் . ஆம்லா,த்ரோத்ட்,காயில்,மற்றும் டோனி ஆகியோரை விட அதிகப் படியான வாக்குகளை பெற்று இந்த விருதை பெற்றுள்ளார் .

தோனியால் ஏன் முடியவில்லை 

இது குறித்து நான் ஏற்கனவே போட்ட பதிவு   சங்கா +முக்கிய VIP.  என் முன்னே உள்ள முக்கிய சந்தேகம் ஏன் டோனி இந்த விருதை பெற முடியவில்லை  என்பதே  ஆகும் .இந்திய தேசம் கிரிக்கெட்டிலேயே ஊறியது .100 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட இந்தியர்களின் ஏகோபித்த அபிமானத்தை பெற்ற ஒரு வீரர் .இந்தியாவிலேயே பிரபலங்கள் வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பவர் .சனத்தொகையில் 2  கோடியையும் தாண்டாத இலங்கை யை(அதிலும் நம்ம தமிழரில் அரைவாசிப் பேர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்பது வேறு கதை ) சேர்ந்த சங்கா இந்த விருதை பெரும் போது தோனியால் முடியாமல் போனது ஏன் .எனக்கு பெரிய வியப்பாகவே உள்ளது .வேற்று நாடுகளில் கிரிக்கெட் அவ்வளவு பிரபலம் கிடையாது .மேலைத்தேய நாடுகளில் இங்கிலாந்து சார்பாக திராட் போட்டியிட்டதால் அவர்களின் ஓட்டு சங்கா வுக்கு  பெரிதளவில் வர வாய்ப்பு இல்லை

.இந்திய அணியின் இங்கிலாந்துடனான படு தோல்வியை ஒரு காரணமாக ஏற்றுக் கொண்டாலும்  கடந்த ஆகஸ்ட் -25 வாக்களிப்பின் இறுதி திகதி ஆகும் .அப்போது இந்திய அணி அடி வாங்கினாலும் மரண அடியை வாங்கியிருக்கவில்லை  .(அடி ஒவ்வொன்றும் இடியாக விழுந்தது பிறகுதானே ).எல்லாவற்றையும் விட அவர் இந்தியாவுக்கு பெற்று தந்த உலக கிண்ணத்தை எந்தவொரு இந்தியனும் மறந்து இருக்க மாட்டான் .எனினும் விருது பெறாதது எப்படி என்று எனக்கு தெரியவில்லை .(சிறந்த எழுச்சி மிகு வீரருக்கான விருதை டோனி பெற்றுள்ளார் .).நான் கிரிக்கெட் ரசிகன் என்றாலும் கிரிக்கெட் தொடர்பாக எழுதும் முதல் பதிவு இதுதான் .வலையுலகில் கிரிக்கெட் பதிவுகளை எழுதும் பதிவர்களிடம் இதற்கான விடையை எதிர்பார்க்கிறேன்  .(லோஷன் அண்ணா. ,கிரிக்கெட் நண்பர்கள் K.s.s.ராஜ்   .   , கவியுலகம் மைந்தன் சிவா. ,பாலாவின் பக்கங்கள் பாலா இவ்வளவு பேருமே எனக்கு தெரிந்தவர்கள் )
கிரிக்கெட் தொடர்பாக விடயங்களை அலசி ஆராயும் பிரபல பதிவர் லோஷன் அண்ணா அவர்கள்  நான்  சங்கா வுக்கு ஓட்டு அளிக்கும்படி எழுதிய பதிவுக்கு இட்ட பின்னுட்டத்தை  அப்படியே தருகிறேன் .
 ''''''
சங்காவுக்கு நானும் வாக்களித்துவிட்டேன்..
ஆனால் இந்திய இணையத்தளப் பாவனையாளர்கள் அதிகம் என்கிற காரணத்தாலும், இந்திய அணியின் ஆதரவாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தோனி பக்கம் திரும்பும் என்பதாலும் தோனிக்கே கூடுதல் சாதகம் என நான் நம்புகிறேன்...

சங்காவின் கனவான் தன்மைக்கும், நல்ல மனதுக்கும் இந்த மக்கள் விருது அவருக்கே கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்...'''

வாழ்த்துக்கள் சங்கா .இலங்கை கிரிக்கெட் அணி ரசிகனாய் உங்களின் வெற்றி எமது அணிக்கு கிடைத்த வெற்றி ஆகும் .கிரிக்கெட் கண்ணியவான் என்று போற்றப்படும் உங்களின் சாதனை பயணம் தொடர வாழ்த்துக்கள்  .உங்கள் வெற்றியில் நாமும் ஒரு அணிலாய் (ஹிஹி ஹி என்ன சிரிப்பு அங்க  ) இருந்ததை இட்டு பெருமைப்படுகிறேன்

டிராவிட் ஒருநாள் போட்டியில் ஓய்வு 




 உலகப் பெரும் சுவர் சீனாவில் அமைந்துள்ளது அனைவரும் அறிந்தது .அதை விட இந்தியர்கள் அனைவருக்கும் இந்திய பெரும் சுவரை நன்கு அறிவார்கள் .ஆம் அந்த பெரும் சுவர் இன்றுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறது . ஆம் ராகுல் டிராவிட் 15 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி அணியின் வெற்றிக்கு பெரிதும்  பங்கு ஆற்றியவர் .343 போட்டிகளில் 10820 ஓட்டங்களை 12 சதம் 82 அரைசதம் உள்ளடங்கலாக பெற்றுள்ளார்.இன்றைய அவரின் இறுதி போட்டியில் ஆவது இந்திய வெற்றி பெற்று அவரை வழியனுப்பும் என இந்திய ரசிகர் மட்டுமன்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே எதிர் பார்க்கிறார்கள்    ..டிராவிட் தொடர்பான  அனைத்து தகவல்களும் பார்க்க 
ஒரு நாளில் 5000 பக்க பார்வைகள் (page views )
 சரி  தலைப்புக்கு  வருவோம் . நான்  சற்றுமே  எதிர்  பாராத  வகையில்  நான் எழுதிய பதிவு ஒன்று ஒரு நாளில் மட்டும் 5954 பக்க பார்வைகளை பெற்றது .இன்லியில் பிரபலமாகவும் இல்லை .தமிழ் மணத்திலும் ஒன்றும் இல்லை .முழுக்க முழுக்க முக பக்கம் (facebook )தான் .690 பகிர்வுகள் .பகிர்வு செய்த அனைவருக்கும் நன்றிகள் .அந்த பகிர்வு பட்டனை எனது வலைத் தளத்தில் இணைக்க உதவிய  வந்தேமாதரம் சசி .அவர்களுக்கும் நன்றி



 
 
என்ன பதிவு பிடித்து இருக்கா பிடித்து இருந்தால் ஓட்டு போடலாமே








Post Comment

44 comments:

K said...

நமக்கு கிரிக்கெட் ஆவாது சார்! ஆனா நீங்க கடைசியா குடுத்திருக்கிற ஐடியா சூப்பரோ சூப்பர்!

K said...

நீங்க என்னோட ப்ளாக் பக்கம் வந்தால் எனக்கும் சில பேஜஸ் வியூ அதிகரிக்கும்! வாங்க சார்!

சி.பி.செந்தில்குமார் said...

ஐடியா சூப்பர்

kobiraj said...

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,
கண்டிப்பாய் வருகிறேன் ஐடியா மணி சார். உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி

kobiraj said...

சி.பி.செந்தில்குமார்
அதுக்குள்ளே வந்திட்டீங்க சார் .எல்லாம் உங்க ஐடியா தான்

சுதா SJ said...

நல்லா எழுதுறீங்க பாஸ்
வாழ்த்துக்கள்
இனி தொடர்ந்து வருகின்றேனே.....

rajamelaiyur said...

வாழ்த்துகள்

dfgtrdefg said...

பகிற்வுக்கு நன்றி



உங்கள் பிளாகருக்கு மேஜிக் பாப்புலர் போஸ்ட் 3D கியூப் தொழில்நுட்பம்
http://murugananda.blogspot.com/2011/09/magic-of-popular-post-for-blogger-with.html

dfgtrdefg said...
This comment has been removed by the author.
Anonymous said...

///(அதிலும் நம்ம தமிழரில் அரைவாசிப் பேர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்பது வேறு கதை ) // எங்க பிரதேசங்களில் கூட இந்திய அணியின் ரசிகர்கள் தான் அதிகம் ..நான் கூட

kobiraj said...

துஷ்யந்தன்
நன்றி பாஸ் .தொரட்ன்து வாருங்கள்

kobiraj said...

"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றிகள்

kobiraj said...

நிலவை தேடி
நன்றி
கண்டிப்பாக வருகிறேன்

kobiraj said...

கந்தசாமி.
ஆமா சார் . நம்ம இடத்தில் அஜித் விஜய் போட்டிக்கு இணையாக உள்ளது இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டி

K.s.s.Rajh said...

வணக்கம் மச்சி..முதலில் 100வது டெஸ்டில் ஆடும் சங்காவுக்கு வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

///சங்காவுக்கு நானும் வாக்களித்துவிட்டேன்..
ஆனால் இந்திய இணையத்தளப் பாவனையாளர்கள் அதிகம் என்கிற காரணத்தாலும், இந்திய அணியின் ஆதரவாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தோனி பக்கம் திரும்பும் என்பதாலும் தோனிக்கே கூடுதல் சாதகம் என நான் நம்புகிறேன்...

சங்காவின் கனவான் தன்மைக்கும், நல்ல மனதுக்கும் இந்த மக்கள் விருது அவருக்கே கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்...'''////

லோஷன் அண்ணா சொன்ன இதேகாரணம்தான் நானும் பயந்தேன் எங்க சங்காவுக்கு விருது கிடைக்கப்போகின்றது....கிடைத்துவிட்டது...நம்ம ஆள் பெற்று இருக்கார் அவருக்கு வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

அப்பறம் உங்கள் கேள்வி?இந்தியாவின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி...தோனியை முந்தி சங்கா எப்படி விருது பெற்றார்?

என்னைக்கேட்டால்..இந்தியாவின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தோனியைப்பிடிப்பது இல்லை என்பது உண்மை...

இலங்கையில் பாருங்கள்..சங்காவின்..ரசிகர்கர்களுக்கும்..மகேலவை பிடிக்கும் மகேலவின் ரசிகர்களுக்கும் சங்காவைபிடிக்கும்...சனத்தின் ரசிகர்களுக்கும்..மகேலவைப்பிடிக்கும்..இப்படி இலங்கையில் ஒருவீரர்களின் ரசிகர்களுக்கு..மற்றவீரர்களைப்பிடிக்கும்,....

ஆனால் இந்திய ரசிகர்கள் அப்படி இல்லை...எத்தனை சச்சின் ரசிகர்களுக்கு கங்குலியை பிடிக்கும்..எத்தனை...கங்குலி ரசிகர்களுக்கு சச்சினை பிடிக்கும்..எத்தனை யுவராஜ் ரசிகர்களுக்கு தோனியைபிடிக்கும்..எத்னை தோனி ரசிகர்களுக்கு யுவராஜ்சைபிடிக்கும்..இதான் மேட்டர்...இந்திய அணியின் வெற்றிகரகேப்டனாக தோனி இருந்தாலும்...பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தோனியை பிடிப்பது இல்லை என்பது உண்மை இதையாரும் மறுக்கமுடியாது....

இதுவே சங்காவுடன் சச்சின் இந்தவிருதுக்கு போட்டி இட்டு இருந்தால் நிச்சயமாக சங்காவுக்கு இந்தவிருது கிடைத்து இருக்குமா என்பது சந்தேகமே...

அதைவிட இந்திய கிரிகெட் ரசிகர்கள் தவிர உலகம் பூராகவும் உள்ள பல கிரிக்கெட் ரசிகர்களில்.....திராட் போட்டியிட்டு இருந்தாலும்....ரசிகர்கள் என்று வரும் போது நிச்சயம் திராட்டைவிட சங்காவுக்கு மவுசு அதிகம்...

அதைவிட பல வெளிநாட்டு ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபை..கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி....கிரிக்கெட்டை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது...பிடிப்பது இல்லை என்பது உண்மை.. ஜ.சி.சி. கொண்டுவரும் பல திட்டங்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை..ஆதரவு வழங்குவது இல்லை முதல் முரண்டு பிடித்து...அப்பறம்தான்...தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவார்கள்...இப்படி பல காரணங்கள் இந்திய கிரிக்கெட்டை மேலத்தேய நாடுகளின் ரசிகர்களுகு பிடிக்காமல் போகலாம்...

எது எப்படியோ...சங்காவின் கனவான் தன்மைக்கு கிடைத்தவிருதுதான் இது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.......இவரது சிறந்த கனவான் தன்மைக்கு உதாரணம்..எம்.சி.சி.யில் இவர் ஆற்றிய உரை....தோனியுடன் ஓப்பிட்டால் இந்தவிருதுக்கு சங்கா பொருத்தமானவரே...


அதோடு ஒரு கிரிக்கெட் அணியின் ரசிகராக இருந்தால் அந்த அணியில் விளையாடும் எல்லா வீரர்களையும் பிடிக்கனும் என்று அவசியம் இல்லை..உதாரணத்திற்கு...எனக்கு இந்திய கிரிக்கெட் அணியைப்பிடிக்கும்...அதுவும் கங்குலியின் தீவிரமான ரசிகன் நான்..ஆனால் சச்சினைப்பிடிகாது...இப்படிதான் இந்திய அணியைப்பிடித்த பலருக்கு தோனியை பிடிக்கவில்லை போலும்..

எப்படியோ சங்கா விருது பெற்றது மகிழ்சியே..ஏன்னா நானும் அவருக்குத்தானே ஓட்டு போட்டேன்.ஹி.ஹி

K.s.s.Rajh said...

அப்பறம் உங்களுக்கு கிரிக்கெட் பதிபு நன்றாக வருகின்றது...முதல் கிரிக்கெட் பதிவே சூப்பரா இருக்கு.தொடர்ந்து இடைக்கிடையில் கிரிக்கெட் பதிவுவும் எழுதுங்கள்..இப்ப கிரிக்கெட் பதிவு எழுதும் பதிவர்கள் மிகக்குறைவே..ஆனால் கிரிக்கெட் பதிவுகளுக்கு உரிய ரசனை என்றுமே வாசகர்களிடம் குறைவது இல்லை...நண்பர் பாலாவின் பக்கங்கள்பாலா..மற்றும்..என் பதிவுகளைப்பாருங்கள்..நான் எழுதும் பதிவுகளில் அதிகம் ஹிட்ஸ் ஆவது கிரிக்கெட் பதிவுகள்தான் நான் எழுதிய கிரிக்கெட் பதிவுகள் எவையும் ஹிட்ஸ் ஆகாமல் இருந்தது இல்லை...எனவே கிரிக்கெட் பதிவுகளுக்கு...என்றும் நிறைய வாசகர்கள் வருவார்கள்....இடைக்கிடையில் கிரிக்கெட் பதிவுகளும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்...

பாலா said...

நண்பரே ரசிகர்களின் ஓட்டு மட்டுமே விருதுக்கு தேர்வாளர்கள் எடுத்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை. மேலும் இந்திய ரசிகர்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

தனிமரம் said...

நண்பா எனக்கு உந்த விளையாட்டில் விருப்பம் இல்லை .இறுதியாக பலரிடம் போகும் முறை சொன்னீங்க அது பிடிக்கும். நல்ல காத்திரமான பதிவுகளைத் தாங்கோ தனிமரம் இணைந்திருக்கும் உங்களுடன்!

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ .......

Mathuran said...

ஐடியா நல்லாத்தன் இருக்கு

கார்த்தி said...

முக்கியமாக சங்காவிற்கு வாக்குகள் திரும்ப சங்கா இங்கிலாந்தில் ஆற்றிய உரையும் ஒரு முக்கிய காரணம்!

Jana said...

00முக்கியமாக சங்காவிற்கு வாக்குகள் திரும்ப சங்கா இங்கிலாந்தில் ஆற்றிய உரையும் ஒரு முக்கிய காரணம்!00

true ...

kobiraj said...

K.s.s.Rajh
உங்கள் விளக்கம் சூப்பர் .அதில் உண்மை இருக்கிறது .
அப்புறம் உங்கள் அறிவுரைக்கு நன்றி இனி கிரிக்கெட் பதிவுகளும் எழுதலாம் என இருக்கிறேன் .

kobiraj said...

பாலா
உங்கள் கருத்துக்கு நன்றி .

kobiraj said...

Nesan
உங்கள் உருதுனைக்கு நன்றி .கண்டிப்பாய் நல்ல பதிவுகளை தர முயற்சி செய்கிறேன்

kobiraj said...

அம்பாளடியாள்
வாழ்த்துகளுக்கு நன்றி

kobiraj said...

மதுரன்
உங்கள் வரவுக்குகும் கருத்துக்கும் நன்றி

kobiraj said...

கார்த்தி
நிச்சயமாக .சந்காவின் உரை பலரையும் கவர்ந்தது

kobiraj said...

ஜன
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

நல்லா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் நண்பா,

சங்காவின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது,

கூடவே உங்களின் பதிவின் அதிரடிப் பார்வை பற்றிய தகவலும் மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்த்துக்கள்.

தொடர்ந்தும் ஜமாயுங்க.

கோகுல் said...

கிரிக்கட் பதிவு கலக்கல்!ஜமாய்ங்க!
டோனியால் முடியாமல் போனது ஆச்சர்யம் தான்!

டிராவிட்டின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானது!

kobiraj said...

Lakshmi
நன்றி

kobiraj said...

நிரூபன்
கருத்துக்கு நன்றி அண்ணா

kobiraj said...

கோகுல்
''கிரிக்கட் பதிவு கலக்கல்!ஜமாய்ங்க!
டோனியால் முடியாமல் போனது ஆச்சர்யம் தான்!

டிராவிட்டின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானது!''
கருத்துக்கு நன்றி

கவி அழகன் said...

உங்கள் பல பதிவுகளை படித்திருக்கிறேன் என்னமோ தெரியல உங்கள் எழுத்தில் ஒரு ஈர்ப்பு உண்டு . ஆதாரங்களை முன் வைத்து அலசி ஆராய்வதாலோ தெரியல.

நேரம் கிடைக்கும் போது வருவேன்

சென்னை பித்தன் said...

அடுத்து 10000 தான்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி சகோ .
வாழ்த்துக்கள் .

kobiraj said...

கவி அழகன்
நன்றி

kobiraj said...

சென்னை பித்தன்
கருத்துக்கு நன்றிகள்

kobiraj said...

நண்டு @நொரண்டு -ஈரோடு
நன்றிகள்

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...

Related Posts Plugin for WordPress, Blogger...