Friday, September 14, 2012

நான் விஜய் ரசிகனான கதை-2

இது ஒரு சுயசரிதை ஆகும் .இதன் முன்னைய பகுதியை படிக்க...
நான் விஜய் ரசிகனான கதை.

2000 ம் ஆண்டில் தென்மராட்சி பகுதியில் ஏற்பட்ட நாடு பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்து வட்டுக்கோட்டையில் சில வருடங்கள் இருக்க நேரிட்டது .இதனால் சில காலம் சினிமா பற்றிய நினைவே இல்லாமல் போயி விட்டது .எனினும் இந்த இடப் பெயர்வு என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அடித்தளத்தை இடுவதற்கு வழி  கோலியது .அதுதான் எனது யாழ் இந்து கல்லூரிக்கான பிரவேசம்


.கல்லூரியில் சேர்ந்த போது என்னுடன் ஏற்கவே படித்திருந்த நண்பர்கள் சிலர் எனது வகுப்பிலயே சேர்ந்தமை புது இடத்தில் நம்பிக்கையை கொடுத்தது .எனினும் பெரியதொரு நண்பர் குழாம்  ஏற்பட அதிக காலம் தேவை பட வில்லை .பாடசாலையில் சினிமாவை விட கிரிக்கெட் அதிக முக்கியத்துவம் பெற தொடங்கி  இருந்தது .இரு குழுக்களாக பிரிந்து விளையாடிய முதல் போட்டியில் நான் அடித்த சில பல சிக்ஸர்கள் என்னை அணியில் நிரந்தர இடம் பெற வைத்தது .அத்துடன் ஜெயசூரிய என்ற பெயரையும் தேடி தந்தது .(பாடசாலையில் அதற்கு பின் எந்த போட்டி  யிலாவது ஒரு சிக்சர் கூட அடித்ததாக ஞாபகம் இல்லை ).வகுப்பில் இலங்கை அணிக்கு சமனான ஆதரவாளர்கள் ஆஸி  அணிக்கும்  இருந்தமையால் அதுவே இரண்டு டீம்களை பிரிப்பதற்கு காரணியாக இருந்தது .பாண்டிங்,கைய்டேன் ,கில்கிரிஸ் ஆகியோர் அப்போது ஆசி அணியின் மூவேந்தராக இருந்தனர் .

ஆகவே எனது வகுப்பில் நன்றாக கிரிக்கெட் விளையாடும் இருவருக்கு அப்பட்டங்கள் சூட்டப் பட்டன .ஆனால் ஹய்டேன் கு பொருத்தமாக ஆள் இல்லை எனவே எங்க க்ரூபில் இருந்த கிரிக்கெட் ரசனையே இல்லாத ஒருத்தனை ஹய்டேனை போல இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக ஹய்டேன் ஆக்கி பிளேயர் ஆக்கியது வரலாறு .அப்புறம் நியூ சிலாந்து பிளெமிங் ,சவுத் ஆப்ரிக்கா கிப்ஸ் ஆகியோரும் வகுப்பில் இருக்கத்தான் செய்தனர் அவர்கள் சுய விருப்பின் பேரில் முறையே இலங்கை ,ஆஸி அணியில் சேர்ந்தனர் .ipl slpl எல்லாம் எங்களிடம் இருந்து விளைந்தவையே என்பதை இட்டு பெருமை படுகிறேன் .

2003 உலக கிண்ணம் இதன் உச்ச கட்டமாகும் .ஒவ்வொரு நாளும் பாடசாலையில் முதல் நாள் முடிவடைந்த மேட்ச் தான் விவாதமாய் இருக்கும்


.இலங்கை ஆஸி அரை இறுதி போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தது சங்கா  வும் ,வாசும் களத்தில் நிற்கும் போது மழை  வந்து குழப்பி இருந்தது .ஆனால் வகுப்பில் வெற்றி என்னவோ சிறிலங்காவுக்கு தான் .இந்த மழை மட்டும் வராமல் இருந்திருந்தால் சங்கா ,வாஸ் இருத்த போர்முக்கு (7 விக்கெட் போயிட்டுது 100 ரன்னுக்கு கிட்ட அடிக்கோணும் )ஈஸி  வின். சே அநியாயமா கப்பை மிஸ் பன்னிடமே என்று டாக் கை மாற்றி அவங்களை நிலை குலைய  வச்சாச்சு .அந்த கால பகுதியில் எனது இடது கை பந்து வீச்சு சிறப்பாக எடுபட 2003 வேர்ல்ட் கப் ஹீரோவான வாஸ் இன் நாமம் என்னோடு ஒட்டிக் கொண்டது .காலப் போக்கில் பெயர்கள் மறைந்து விட்டாலும்  இன்று வரை ஒருவனுக்கு பெயர் மாவன்  அதபத்து  தான் .

2002 ம் ஆண்டு மீண்டும் சொந்த இடத்துக்கு வந்திருந்த  போதும் கரெண்ட்  இல்லாமல் இருந்தது .ஏனெனில் ஏனைய இடங்களுக்கு கரெண்டை சில மணித்தியாலங்கள் என்றாலும் காட்டினார்கள் ரேடியோ வில்  யாழ் fm தவிர ஒரு ஒண்டும் வேலை செய்யாது .எனவே பெரிய அண்டனா தயாரித்து அதன் மூலம் சக்தி fm  கேட்டு தகவல்கள் அறிந்து கொண்டேன் .சக்தி fm சுபுகுட்டி பாவோரிட் நிகழ்ச்சியாக இருந்தது . இப்போது பல அலைவரிசைகள் வந்தாலும் நான் என்றுமே சக்தி fm ரசிகன் தான் (முன்னரே சொன்ன லாஜிக் தான் )

படம் வரும் முன்னே ஒரு படத்தின் பாடல் கேட்டது என்றால் திருமலை படம் மூலம் தான் .ஒரு மணித்தியாலத்திலே ஒரு முறை தான் அந்த பட பாட்டு போடுவார்கள் அந்த பாட்டை கேட்பதற்காகவே நாள்  முழுக்க ரேடியோ வேலை செய்யும் .
இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே தினத்தில் ஒரு படம் வெளியாவதை அறிந்த முதல் படமும் திருமலைதான் .அப்போதுதான்  படத்தின் வெற்றி தோல்வி போன்ற விடயங்களை  அறிந்து கொண்டேன் .2003 தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் திருமலை பிதாமகன்,ஆஞ்சநேயா  படங்களை வெற்றி கொண்டது.யாழில் ஒருதியேட்டரில்  படம் ஓடுவதாக அறிந்த போதும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் தைரியம் இருந்திருக்க வில்லை அந்த தீபாவளிக்கு விஜய் ,அஜித்,விக்ரம் ,சூர்யா ஆகிய முன்னணி  நடிகர்கள் அனைவரின் படமும் வெளி வந்திருந்தது .அதிலே விஜய்க்கு கிடைத்த வெற்றி ஆனது முதன் முதலில் விஜய்க்கு ரசிகன் என்ற நிலைக்கு என்னை இட்டு சென்றது .

எனவே நான்  முதல் முதலாக விஜய் ரசிகனாக என்னைசமூகத்துக்கு  காட்டி கொண்டேன் ..பாடசாலை யிலும் சினிமா விவாதம் சூடு பிடிக்க தொடங்கியது .பெரியளவில் விஜய்க்கு எதிர்ப்பு இருக்க வில்லை .ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பலைகள் மாசுக்கு முன் தூசாக இருந்தது .கொலரில்  இருந்து சிகரெட் எடுத்து புகைக்கும் ஸ்டைல் இளைஞர் களிடத்தில் வரவேற்பு பெற்றது .அப்போது இனைய வசதிகள் இல்லாத நிலையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் தான் யாழ் மக்களை அலங்கரித்து இருந்தன .இந்திய சேனல்கள்  ஆங்காங்கே இருந்தாலும் சக்தி  டிவி அநேக வீடுகளை அலங்கரித்தது .அனைத்து தொலைக்காட்சி ,ரேடியோ அலைவரிசைகளும் விஜய் புகழ் பாட தொடங்கின .

விஜயை ஒரு சாதுவான நாயகனாக பார்த்த எனக்கு மீசை இல்லாமல் புது கெட்  அப்பில்
பாட்சாவில் ரஜினி ஸ்டைல் ஐ பார்க்கும் போது இருந்த அதே பிரமிப்பு இதிலே விஜயை பார்க்கும் போது  எழுந்திருந்தது.

தொடரும்.......

Post Comment

4 comments:

Unknown said...

I am not a Vijay Fan at all. But really happy to see another Tamil blog writer from Srilanka...
Thank you for the post.. Specially for reminding 2003 WC. I still remember that match.
Visit my site when you have time..
Thank you.
வரிக்குதிரை

kobiraj said...


@ அருண்பிரசாத் வரிக்குதிரை
கருத்துக்கு நன்றி

Unknown said...

அருமை நன்றி சகோ

kobiraj said...

கருத்துக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...