Saturday, June 11, 2011

பெண்களுக்காக


ஆண்களுக்கு பிடிக்காத '8' [by tamil cnn]

எமோஷனல் பிளாக்மெயில் இயற்கையாகவே அன்பை வாரி வழங்குபவர்கள் பெண்கள். அந்த அன்பை வைத்தே ஆண்களிடம் கொஞ்சி குலாவி தங்களுக்கு என்ன தேவையோ, அதை வாங்கி விடுவார்கள். பெண்களைப் போல ஆண்களும் இயல்பாகவே அவர்களின் அதீத அன்பிற்கு அடிபணிந்து விடுகிறார்கள். அதனால்தான் பெண்கள் அவர்களிடம் உருகி, அன்புமழை பொழிந்து கேட்கும் வார்த்தைகளைத் தட்டமுடிவதில்லை. 
  1. `ஓசி'யில் உற்சாகம் சில பெண்கள் தாங்கள் ஓசியில் உற்சாக பானம் அருந்த, ஆண் நண்பர்களை தங்களுடன் பாருக்கு அழைத்துச் சென்று அவர்களை பலிகடாவாக்கி விடுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் என்ன செய்கிறோம், என்ன நடந்தது என்றே தெரியாமல் அப்பாவிகளாக அலைவது ஆண்கள் தான். இப்படி தங்கள் பணம் காலியாவதை ஆண்கள் விரும்புவதில்லை. 
  2. வீண்செலவை உண்டாக்குதல் ஆண்களுடன் `டேட்டிங்' என்ற பெயரில் உல்லாசமாக பொழுதைக் கழிக்கும் பெண்கள், அவர்களுக்கு தேவையில்லாமல் செலவை உண்டாக்கி விடுகிறார்கள். ஆண்களும் அப்படி செலவு செய்தால்தான் தன்னைப் பற்றி அவர்கள் பெருமையாக நினைப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடுகிறார்கள். 
  3. அழுகை பெண்கள் தங்கள் காரியத்தை ஆண்களிடம் சாதிக்க மிகப்பெரிய ஆயுதமாக பயன் படுத்துவது அழுகையை! தங்கள் துணை பயப்படும் விதத்தில் உள்ளக்குமுறலை வெளிப் படுத்திக் கண்ணீரை வரவழைப்பார்கள். அப்படி செய்யும் போது எப்பேர்ப்பட்ட ஆண்களின் கல் மனதையும் பெண்கள் தங்கள் நீலிக்கண்ணீரால் கரைத்து விடுகிறார்கள். 
  4.  தொடர்பை துண்டித்தல் பெண்கள் தங்களது துணையுடன் சண்டைபோட்ட பின்னர் பேசாமல் இருந்து விடு கிறார்கள். அப்போது தொலைபேசியில் கூட பேச விரும்பாமல் இணைப்பைத் துண்டித்து விடுகிறார்கள்.
  5. ஒரு மெயில், ஒரு எஸ்.எம்.எஸ். என்று எதற்குமே பதில் அளிக்காமல் வறட்டு பிடிவாதத்துடன் உம்மென்று இருந்து விடுகிறார்கள். இதனால், பாதிக்கப்படுவது தனது அன்பிற்குரியவர் தான் என்று அவர்களுக்குத் தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்வதே இல்லை. 
  6. கார் டிரைவராக... ஆடம்பரத்தை விரும்பும் பெண்கள், மற்றவர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் ஒரு அங்கமாக, சில நேரங்களில் தங்களது துணையை ஒரு சாதாரண கார் டிரைவரைப் போல வழிநடத்தி, அவர்களை மிகுந்த சங்கடத்திற்குள்ளாக்கி விடுகின்றான்
    1. பொடிகார்டாக... சில சமயம் ஆண்களிடம் பெண்கள் கவர்ச்சியாக பேசி மயக்கி அவர்களை தங்களுக்கு ஒரு பாடிகார்டைப்போல பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் விருப்பப்படி நடந்து கொண்டால் தான் நம்மை அவர்கள் விரும்புவார்கள் என்று நினைத்து ஆண்களும் தலையாட்டி பொம்மையாய் பெண்கள் என்ன சொன்னாலும் செய்து விடுகிறார்கள். பின்பு வருந்துகிறார்கள்

எங்களுக்கு விருப்பம் இல்லை.[பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை]



ஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ, காதலியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது... 

1. `நாம கொஞ்சம் பேசணும்'
உங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும்.

`ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்' என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடு வார்.

`பேசுவது' எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும். 

பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள்.

எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது  சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது. 

2. `நீங்க அம்மா பையன்'
பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்க... உங்க அம்மா இப்படிப் பண்றாங்க', `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்' என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை.

பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளை... உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு' என்று கூறுவதையும் விரும்புவதில்லை.

பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும். 
3. `உங்க நண்பரைப் பாருங்க' 
`உங்க நண்பரைப் பாருங்க... எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமா...' என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள்.

இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை'யே காதலிச்சிருக்கலாம்' அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்' என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும். 

பெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும். 

கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.

4. `நீங்க எப்பவும் இப்படித்தான்... 
திருந்தவே மாட்டீங்க' முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை. 

ஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்' என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும். 

அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.


5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு' 
மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமë. அவற்றை `இளநரை' என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை' அடிச்சுட்டு வாங்க' என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். 

`கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தே... இப்போ தடியிடையா ஆயிட்டே...' என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்

Post Comment

2 comments:

Unknown said...

post எல்லாம் நல்லா இருக்கு. but இந்த 4tovai எதுக்கு போட்டீங்க?

Unknown said...

post எல்லாம் நல்லா இருக்கு. but இந்த 4tovai எதுக்கு போட்டீங்க?

Related Posts Plugin for WordPress, Blogger...