நான் வலையுலகில் விஜய் பற்றிய அவதூறை குறைப்பதற்கு ஆகவே வலைப்பதிவு எழுத தொடங்கினேன் .ஆனால் இப்போது வேலாயுதம் வெளியாகி அனைவரின் கருத்துக்களையும் உடைத்து வெற்றி ஆயுதம் ஆகியிருக்கிறது.வேலாயுதம் பற்றி ஒரு சில நரிகள் ஊளையிட்டாலும் பொதுவாக நல்ல நடுநிலையான விமர்சனங்களே வெளிவந்தமை திருப்தி தருகிறது .இந்த தருணத்தில் யார் உண்மையிலேயே நடுநிலை விமர்சகர்கள் ,யார் உண்மையிலேயே விஜயில் பொறாமை கொண்டவர்கள் என்பதை அறியும் சந்தர்ப்பமாக் அமைந்து உள்ளது .வேலாயுதம் வெற்றி என்றால் இன்னமும் சிலர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் .அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லா விட்டாலும் சினிமா விகடனில் இன்று வெளிவந்த ஒரு செய்தி உங்களுக்காக
வெற்றி களிப்பில்
விஜய் சார் நீங்க காட்டுவீங்கனு தெரியும் இப்பிடி காட்டுவீங்கனு விஜய் ரசிகனான நானே எதிர்பார்க்க வில்ல.
வேலாயுதம் வெற்றியில் நானும் ஒரு அணிலாய் இருந்த பெருமையுடன் வலையுலகை விட்டு விலகி இருப்போம் என முடிவு எடுத்தேன் .
உண்மையான காரணம் ஐந்து மாத நீண்ட விடுமுறை முடிந்து கம்பஸ் தொடங்கவுள்ளமைதான் .எனினும் கடந்த ஞாயிற்றுகிழமை நூலகத்தில் இவ்வார பத்திரிகைகளை வாசித்து கொண்டிருந்த போது தற்செயலாக ஒரு பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்
நான் ஏதோ பொழுது போக்குக்காக எனது விடுமுறை கழிப்பதற்காக ஆரம்பித்து ஏதோ எனக்கு தெரிந்தவற்றை என்னால் முடிந்தவற்றை எழுதினேன் .ஆனால் என்னுடைய பதிவையும் மதித்து அதை பத்திரிகையில் பிரசுரித்தமை மகிழ்ச்சி அளிக்கிறது .
எனவே இதை ஒரு அங்கீகாரமாக கருதி இனி நேரம் கிடைக்கும் போது பயனுள்ள சுவாரசியமான பதிவுகளை எழுத ஆசை படுகிறேன் .நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் .
சக பதிவர்களுக்கு
நேரமின்மை காரணமாக நான் பதிவு போடும் சமயங்களில் சம காலத்தில் இடப்படும் பதிவுகளுக்கு நிச்சயம் எனது பின்னுட்டமும் வாக்குகளும் இருக்கும் ..தவிர்ந்த நேரங்களில் எனக்கு நேரம் கிடைக்கும் போது உங்கள் தளங்களை நாடி வருவேன் என்பதை அறிய தருகிறேன் .
50000 hits
அத்துடன் எனது வலைத்தளம் 50000 HITS தாண்டி விட்டது .இந்த ஹிட்ஸ் க்கு முழு காரணம் விஜய் தான் என்பதை பெருமையாக சொல்கிறேன்.இதை பெற்று தந்த சகல வாசகர்களுக்கும் எனது நன்றிகள்
.
.என்னை அறியாமலே பலரிடம் சென்ற பதிவு மீண்டும் இதை பார்க்காதவர்களுக்காக அதே இந்திரன் எழுத்து பிழையுடன் .......
ரா ஒன் எந்திரனின் சாதனையை முறியடிக்குமா?
கிங் ஒப் போலி வூட் என்று அழைக்கப் படும் ஷாருக்கான் இந்திய அளவில் செல்வாக்கு மிக்க நபர்களில் முதன்மையானவர் .இவரின் தற்போதைய பரபரப்பு ரா ஒன் .தமிழில் வெளியாகவுள்ள இந்நிலையில் அவரை பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
.தாஜ் மொதமேது கான் லதீப் பாத்திமா தம்பதியினருக்கு மகனாக டெல்லியில் பிறந்தார்.(1965.11.02)
.தனது அத்தியாயத்தை டிவி சீரியல் மூலமாக 1988 இல் ஆரம்பித்தார் .கௌரி ஷிபா என்ற மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .ஷாருக் ஒரு முஸ்லிம் மனைவி ஒரு இந்து திருமணத்துக்கு எதிர்ப்புக்கள் யிருந்த போதும் இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடை பெற்றது .(25.10.1991).
அவருக்கு ஆர்யன் கான் (1997)என்னும் மகனும் சுகனா (2000)கான் என்னும் மகளும் இருக்கின்றனர் .
தனது திரைப்பட அறிமுகத்தை தீவானா(deewaana ) என்னும் திரைப் படத்தின் மூலம் ஆரம்பித்தார் (1992).இத் திரைப்படம் கமெர்சியல் ரீதியாக வெற்றி அடைந்தது .இதை தொடர்ந்து பல வகைப்பட்ட தரமான வெற்றி திரைப்படங்களை இவர் அளித்து வருகிறார் .இதுவரை 14 முறை பிலிம் பாரே விருது வென்றுள்ளார் .டார் (daar -1993), பாசிகர் (Baazigar -1993) , அஞ்சாம் (Anjaam -1994),குச் குச் ஹோதா ஹஅய் (Kuch Kuch Hota Hai -1998 ) ,ஓம் சாந்தி ஓம் (Om Shanti om -2007 ),சக் தே இந்திய (Chak De India (2007) Devdas, Veer Zaara, Main hoon naஎன்பன குறிப்பிட்டு சொல்லக் கூடிய படங்கள் ஆகும் .Dilwale Dulhania Le Jayenge (1995) ,,அவருடைய மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்று .மும்பையில்12 வருடங்களாக ஓடியது .இதுவரை என்பதுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார் .
1990 களில் இருந்து இன்றுவரை பாலி வூட் டை ஆளுகின்ற நான்கு கான் களில் ஐவரும் ஒருவர் மற்றவர்கள் சல்மான் கான்,அமீர் கான்,சைப் அலி கான்
டைம் சஞ்சிகையினால் 2004 இல் 40 வயதுக்கு குறைந்த ஆசியாவின் ஹீரோ க்கள் இருபது பேரில் ஒருவராக தெரிவு செய்யப் பட்டார்.
இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருக்கிறார் .அவரின் பெயர் Shehnaz Lalarukh. இவருடைய பெற்றோர் இவர் திரையுலகில் நுழைவதற்கு முன்னரே இறந்து விட்டனர் .தான் புகழ் மிக்க இந்த நிலைக்கு வருவேன் எபது அவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதே என்று ஷாருக் வருத்தப் படுவார்.
ஷாருக்கின் தாய் ,தந்தை,சகோதரி
இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற Madam Tussaud's Museum இல் இவரி உருவ சிலை அமைய பெற்றுள்ளது .அமிதாப்,ஐஸ்வர்யா ,சல்மான் ,சச்சின்,ஹிருத்திக் ஆகியோரின் சிலையும் காணப் படுகிறது .‘Dilwale Dulhaniya Le Jayenge’ படத்தில் அவரின் தோற்றம் போல சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது
சிறிய வயதில் ஷாருக்
மாயா மேம்சாப் .(Maya Memsaab.) என்ற படத்தின் பின்னர் எந்த படத்திலும் உடன் நடிக்கும் பெண் நடிகையுடன் உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாய் இருக்கிறார்.இவரின் அறிமுகப் படமாய் இருக்க வேண்டியது (Dil Aashna Hai )டில் ஆஷ்ணா ஹஅய் .ஆனால் அப்படம் ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட தாமதத்தால் தீவானா அவரின் முதல் படமாக அமைந்து விட்டது .
மூன்று தயாரிப்பு நிறுவனங்களை வைத்து இருக்கிறார் டிரீம்ஸ் அன் லிமிடெட் (Dreamz Unlimited ),ரெட் சில்லீஸ் என்டேர்டைன்மென்ட் (Red Chillies Entertainment ),
ரெட் சில்லீஸ் இடியோட் பாக்ஸ் (Red Chillies Idiot Box )என்பனவே அவை Red Chillies Idiot பாக்ஸ் தொலைகாட்சி தொடர்களை தயாரித்து வருகிறது .
மும்பையில் மன்னட்( Mannat) என்னும் மாளிகையில் வசிக்கிறார் .
ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார்.
ஷாருக்கான் -தமிழ்
ஷாருக் கான் தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் .தமிழின் முன்னணி நடிகர்களான கமல் ,அஜித் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் .கமலுடன் ஹேராம் படத்தில் இணைந்து நடித்துள்ளார் .தமிழ் ஹிந்தி இரு மொழிகளிலும் வெளியான இந்த படம் ஒஸ்கார் பரிந்துரைக்கப் பட்டது .அஜித் குமாருடன் இணைந்து அசோகா படத்தில் நடித்துள்ளார் .அது தமிழில் சாம்ராட் அசோகா என்ற பெயரில் வெளியானது .இது தவிர மணி ரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த தில்சே திரைப்படம் உயிரே என்ற பெயரில் தமிழில் வெளியானது .ரஹ்மானின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள் தமிழர்களிடத்தில் இவரை புகழ் பெற செய்தது .
இப்போதைய பரபரப்பு ரா ஒன்
ஷாருக் கான் நடிக்கும் அடுத்த திரைப்படம் ரா ஒன் .எந்திரன் வெளியான போது இரு படங்களும் ஒரே கதையை கொண்டவை என்ற சந்தேகம் எழுந்த போதும் இந்திரனை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஐயே தனது படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து ரா ஒன் படத்துக்கான எதிர்பார்ப்பை உச்சப் படுத்தி உள்ளார் .தமிழிலும் மொழி மாற்றப் பட்டு எதிர்வரும் தீபாவளிக்கு வருகிறது ரா ஒன் .மிகவும் எதிர் பார்க்கப் படும் ரா ஒன் எந்திரனின் சாதனையை முறியடிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வி ஆகும் .எந்திரன் பாலி வூட் இல் ஓடியதை போல ரா ஒன் தமிழில் ஓடுவது இயலாத காரியம் .ஆனால் இப்போது ரஜினி தோன்றுகிறார் என்றவுடன் நிலைமை தலை கீழாக மாறி விட்டது .மரணத்தின் வாயில் வரை சென்று மீண்ட தலைவரை திரையில் பார்க்க அனைத்து மக்களுமே தவம் கிடக்கிறார்கள் .இந்நிலையில் தீபாவளிக்கு ரா ஒன் தமிழில் வெளியாகும் திரை அரங்குகளின் எண்ணிக்கையிலேயே தெரிகிறது எதிர் பார்ப்பு .
என்னதான் இருந்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் க்கு இருக்கும் பெருந்தன்மை வேறு யாருக்கும் இருக்காது .தனது படத்தை போலவே படம் எடுத்து தனது படத்தின் சாதனையை முறியடிக்க தானே காரணமாய் இருக்கப் போகும் எங்களின் தலைவருக்கு யார் நிகர் இவ்வுலகில் ?
15 comments:
வெற்றி ..வெற்றி ..வேலாயுதம் வெற்றி ...
வாழ்த்துக்கள் நண்பரே...உங்கள் கல்விப்பயணம் வெற்றி பெற...
தொடர்பில் இருந்து கொள்ளுங்கள்....
உண்மைதான் விஜய் பற்றி எழுதினால் ஹிட்ஸ் நிச்சயம்
வணக்கம் பாஸ் நல்லாயிருக்கீங்களா?
காப்பி பேஸ்ட் காரங்களை பற்றி நாங்கள் என்ன சொன்னாலும் அவங்க திருந்தப்போவது இல்லை..ஆனால் காப்பி பண்ணிப்போட்டால் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லாம் அல்லது ஓரு நன்றியாவது சொல்லாம்..
மெட்ரோவுக்கு ஓரு இமேயில் அனுப்பிபாருங்கள் அவர்களுக்கு உங்கள் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரிவியுங்கள்..
உங்கள் எழுத்துக்கள் அருமை பாஸ் நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதுங்கள்....நாங்கள் இருக்கோம் பக்க பலமாக...வாழ்த்துக்கள்
சகோதரம் இதற்கு முழு பதிவரும் கைகோர்க்க வேண்டும் ஆனால் எல்லோரும் தங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது தான் அது பெரிதாக தெரிவதால்.. அவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி
சூப்பர் தளபதி!
கோவை நேரம் said...
'' வெற்றி ..வெற்றி ..வேலாயுதம் வெற்றி .''
நிச்சயமாக
Blogger ரெவெரி said...
வாழ்த்துக்கள் நண்பரே...உங்கள் கல்விப்பயணம் வெற்றி பெற...
தொடர்பில் இருந்து கொள்ளுங்கள்....''
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
"என் ராஜபாட்டை"- ராஜா said...
உண்மைதான் விஜய் பற்றி எழுதினால் ஹிட்ஸ் நிச்சயம்''
கண்டிப்பாக
K.s.s.Rajh said...
வணக்கம் பாஸ் நல்லாயிருக்கீங்களா?
காப்பி பேஸ்ட் காரங்களை பற்றி நாங்கள் என்ன சொன்னாலும் அவங்க திருந்தப்போவது இல்லை..ஆனால் காப்பி பண்ணிப்போட்டால் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லாம் அல்லது ஓரு நன்றியாவது சொல்லாம்..
மெட்ரோவுக்கு ஓரு இமேயில் அனுப்பிபாருங்கள் அவர்களுக்கு உங்கள் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரிவியுங்கள்..''
அனுப்பி பார்க்கிறேன் பார்ப்போம்
K.s.s.Rajh said...
உங்கள் எழுத்துக்கள் அருமை பாஸ் நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதுங்கள்....நாங்கள் இருக்கோம் பக்க பலமாக...வாழ்த்துக்கள்''
நன்றிகள் நண்பா .உங்கள் ஆதரவுக்கு நன்றி .
♔ம.தி.சுதா♔ said...
சகோதரம் இதற்கு முழு பதிவரும் கைகோர்க்க வேண்டும் ஆனால் எல்லோரும் தங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது தான் அது பெரிதாக தெரிவதால்.. அவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது...''
ஆமாம் சகோ அனைவரும் சேர்ந்தால்தான் எதாவது செய்ய முடியும்
மைந்தன் சிவா said...
சூப்பர் தளபதி!''
அதேதான்
ஷாருக்கானை பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.
Post a Comment